கடந்த 6 ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு பிஜேபி அரசு தள்ளுபடி செய்த கடன் ரூ.6.66 லட்சம் கோடி!
மோடி தலைமையில் பிஜேபி அரசு மத்தியில் ஆட்சியை பிடித்த 2014ம் ஆண்டில் இருந்து 2019ம் ஆண்டுவரை வங்கிகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை கடனாக பெற்று அதை திரும்ப செலுத்தாமல் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடியவர்களோடு சேர்த்து சுமார் 50 முதல் நிலை பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட வராக்கடன் தொகை மட்டும் ரூ.6.66 லட்சம் கோடியாம். இவர்கள் அனைவருமே மோடி அரசின் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டுகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடன் வாங்கி கட்டாமல் இருக்கும் 50 பேரில் பட்டியலை வெளியிடுங்கள் என இதே கேள்வியை பாராளுமன்ற கூட்டத்தில் ராகுல்காந்தி எழுப்பிய போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்த பதிலும் சொல்லாமல் ...