அரசு கொள்ளை அடிப்பதாக கூறிய பிரசன்னா திடீரென மன்னிப்பு கேட்டது ஏன்?!
மின் கட்டண ரீடிங் விவகாரம் அரசு கொள்ளை அடிப்பதாக கூறிய பிரசன்னா திடீரென மன்னிப்பு கேட்டது ஏன்?!
கொரானா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் கடந்த நான்கு மாதங்களாக மின்வாரிய கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் கடந்த இரண்டு மாதங்களாக முந்தைய மாத மின்கட்டணத்தையே செலுத்தலாம் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில் தற்போது நான்கு மாதத்திற்கும் மொத்தமாக மின் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதால் மிக அதிகமாக மின்கட்டணம் வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் பிரசன்னா தனது வீட்டிற்கு 70 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்திருப்பதாகவும் மின்வாரியம் கொள்ளை அடிப்பதாக எத்தனை பேர் உணர்கிறீர்கள் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டிருந்தார் இதனால் மின் வார...