12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வாய்ப்பு!
கொரோனா தொற்று பரவல் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வாய்ப்பு!
கொரோனா தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவியதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவ-மாணவிகள் ஆன்லைன் வழியாக வீடுகளில் இருந்து படித்து வந்தார்கள்.
10 மாதங்களுக்கு பிறகு ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் சட்டசபை தேர்தல், கொரோனா தொற்று பரவல் காரணமாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்த அரசு முடிவு செய்தது. 9, 10, 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவித்தார்.
மேலும் 12-ம் வகுப்பு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. மே மாதம் 3-ந்தேதி தொடங்கி 23-ந் தேதி வரை தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழ...
