திவாலாகும் நிலை… சீனாவுக்கு கடனை அடைக்க இந்தியாவிடம் 1 பில்லியன் கடன் கேட்டு கையேந்த இலங்கை திட்டம்…!
திவாலாகும் நிலை... சீனாவுக்கு கடனை அடைக்க இந்தியாவிடம் 1 பில்லியன் கடன் கேட்டு கையேந்த இலங்கை திட்டம்...!
கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு உலக நாடுகளும் நிதி நெருக்கடிகளைச் சந்தித்தன... சந்தித்துவருகின்றன.
மருத்துவத்துக்கும் தடுப்பூசிகளுக்கும் பெருந்தொகையை ஒதுக்கின. கொரோனவால் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை, வருவாய் இழப்பு உள்ளிட்டவற்றால் பொருளாதாரச் சிக்கல்கள் உலகம் முழுவதுமே ஏற்பட்டிருந்தன.
அதிலும் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில், நாடு திவாலாகும் அளவுக்கான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் சொல்லப்படுகின்றன
குறிப்பாக இலங்கையின் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருவாயை பெரிதும் நம்பியிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
விலைவாசி விண்ணை முட்டும் அளவில் உள்ளது.
ஏற்கனவே பல்லாயி...
