ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா? நினைவு கூர்ந்த மு.க.ஸ்டாலின்
நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் ஆளுநர் குறித்த அண்ணாவின் கேள்வியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் விலக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்.
அதன்படி முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏகே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவின் அறிக்கையை அடுத்து நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக...
