ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: corona cases in india

சட்டென குறையும் கொரோனா… மீளும் தமிழகம்!

சட்டென குறையும் கொரோனா… மீளும் தமிழகம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
      இந்தியா முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் 3வது அலை பாதிப்பு, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று 26 ஆயிரத்து 533 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று சற்று குறைந்து 24,418 ஆக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த ஒருவாரத்துடன் ஒப்பிடுகையில் பாதிப்பு எண்ணிகை ஏறத்தாழ 5 ஆயிரம் குறைந்துள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 6வது நாளாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பாக, இன்று கொரோனா வைரஸ் பாதித்தவர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 885 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 57 ஆயிரத்து 846-ஆக அதி...
கொரோனா 2வது அலையை போன்ற பாதிப்பு மீண்டும் ஏற்படும் – இந்தியாவை எச்சரிக்கும் ஐ.நா.சபை

கொரோனா 2வது அலையை போன்ற பாதிப்பு மீண்டும் ஏற்படும் – இந்தியாவை எச்சரிக்கும் ஐ.நா.சபை

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா 2வது அலையை போன்ற பாதிப்பு மீண்டும் ஏற்படும் - இந்தியாவை எச்சரிக்கும் ஐ.நா.சபை சர்வதேச அளவிலான கொரோனா பாதிப்பு குறித்து ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில்,டெல்டா வைரஸ் பரவலால் உருவான 2வது அலையில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 2,40,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்திய பொருளாதாரத்தை 2வது அலை சீர்குலைத்தது. கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் இந்திய மருத்துவமனைகள் அனைத்தும் முடங்கின. இதேபோன்ற பாதிப்பு விரைவில் நடக்கக் கூடும் மிகவும் வேகமாக பரவக்கூடிய ஒமைக்ரான், மனித சமுதாயத்திற்கும்,  பொருளாதாரத்திற்கும் மீண்டும் பாதிப்பை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலையில், இறப்புகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்தது. நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பிற்கு சுமையாக இருந்தது.  உலக...
“இரண்டு முறை தப்பிய நான் மூன்றாவது முறை மாட்டிக் கொண்டேன்” – வைரஸினால் பாதிக்கப்பட்ட குஷ்பு போட்ட பதிவு

“இரண்டு முறை தப்பிய நான் மூன்றாவது முறை மாட்டிக் கொண்டேன்” – வைரஸினால் பாதிக்கப்பட்ட குஷ்பு போட்ட பதிவு

HOME SLIDER
  “இரண்டு முறை தப்பிய நான் மூன்றாவது முறை மாட்டிக் கொண்டேன், நான் உயிருடன் மீண்டு வர பிரார்த்தியுங்கள்” நடிகை குஷ்பு போட்ட பதிவால் சோகத்தில் ரசிகர்கள். கடந்த சில நாட்களாக இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பலர் பாதிக்கப் பட்டதுடன் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது, இதனால் ஊரடங்கு உத்தரவு ஒரு சில இடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன் மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப் பட்டு வருகின்றது. கொரோனா வைரஸினால் தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் தொடர்ந்து பாதிக்கப் பட்டு வருகின்றனர். கமலஹாசன், திரிஷா, சத்தியராஜ்,மீனா, என பலர் பாதிக்கப் பட்ட நிலையில் தற்போது நடிகை குஷ்புவும் பாதிக்கப் பட்டுள்ளார். இது குறித்து குஷ்பு வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து என்னையும் என் குடும்பத்தையும் மிகவும் கஷ்டப் பட்டு பாதுகாத்து வந்தேன். ...
இந்தியாவில் கொரோனா பரவல் 3ம் அலை இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாமாம்!

இந்தியாவில் கொரோனா பரவல் 3ம் அலை இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாமாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியாவில் கொரோனா பரவல் 3ம் அலை இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாமாம். இந்தியாவில் கொரோனா பரவல் இம்மாத இறுதியில் உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு அடுத்த வாரம் பாதிப்பு உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து ஐஐடி கான்பூர் கல்வி நிலைய பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் அளித்த தகவலின்படி அடுத்த மாதத்தில் இருந்து பாதிப்பு குறையத் தொடங்கும் என்று கூறப்படுகிறது டெல்லியில் பரவல் உச்ச நிலையை அடையும்போது நாள் ஒன்றுக்கு பாதிப்பு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை இருக்கும். மும்பையை பொருத்தவரையில் ஒருநாள் பாதிப்பு அதிகபட்சமாக 30 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ...