ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

“இரண்டு முறை தப்பிய நான் மூன்றாவது முறை மாட்டிக் கொண்டேன்” – வைரஸினால் பாதிக்கப்பட்ட குஷ்பு போட்ட பதிவு

 

“இரண்டு முறை தப்பிய நான் மூன்றாவது முறை மாட்டிக் கொண்டேன், நான் உயிருடன் மீண்டு வர பிரார்த்தியுங்கள்” நடிகை குஷ்பு போட்ட பதிவால் சோகத்தில் ரசிகர்கள்.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பலர் பாதிக்கப் பட்டதுடன் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது,

இதனால் ஊரடங்கு உத்தரவு ஒரு சில இடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன் மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப் பட்டு வருகின்றது.

கொரோனா வைரஸினால் தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் தொடர்ந்து பாதிக்கப் பட்டு வருகின்றனர்.

கமலஹாசன், திரிஷா, சத்தியராஜ்,மீனா, என பலர் பாதிக்கப் பட்ட நிலையில் தற்போது நடிகை குஷ்புவும் பாதிக்கப் பட்டுள்ளார்.

இது குறித்து குஷ்பு வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து என்னையும் என் குடும்பத்தையும் மிகவும் கஷ்டப் பட்டு பாதுகாத்து வந்தேன்.

இரண்டு அலைகளில் இருந்து தப்பித்த எங்களால் மூன்றாவது அலையில் இருந்து தப்பிக்க முடியவில்லை, எனக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதும் உடனடியாக பரிசோதனை செய்தேன் அதன் போது கொரோனா உறுதிப்படுத்தப் பட்டது.

இதில் இருந்து எப்படியும் தப்ப முடியாது என்பதால் தனிமை படுத்திக் கொண்டேன், தனிமை மிகக் கொடுமை தான்.

எனக்கு தனிமை பிடிக்காது, ஆனால் வேறு வழி இல்லை, இரண்டு அலைகளில் தப்பிய நான் வசமாக மாட்டிக் கொண்டேன், நலம் பெற பிரார்தியுங்கள், உங்கள் யாருக்கும் வரவே கூடாது என நான் பிரார்த்திகிறேன் என தெரிவித்துள்ளார்.

 

695 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன