திங்கட்கிழமை, மே 4
Shadow

Tag: festival

மொளச்சூர் முருகன் கோவிலுக்கு வெள்ளிக் கவசங்கள், தங்கத் கண் மலர்கள் வழங்கிய சசிகலா!

மொளச்சூர் முருகன் கோவிலுக்கு வெள்ளிக் கவசங்கள், தங்கத் கண் மலர்கள் வழங்கிய சசிகலா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள மொளச்சூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரானா பரவல் வழிகாட்டி விதிமுறைகளின்படி, தைப்பூச தினமான நேற்று, கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இன்று தைப்பூச விழாவை யொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.   சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடைபெற்ற தைப்பூச விழா  சிறப்பு பூஜையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், முன்னாள் அதிமுக பொதுச் செயலாளருமான வி.கே. சசிகலா கலந்துகொண்டு வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளிக்கும் முருகப்பெருமானுக்கு 35 லட்ச ரூபாய் மதிப்பில் 4 அடி உயரமும் 35 கிலோ எடையும் கொண்ட வெள்ளி கவசத்தையும், தங்க கண் மலர்களையும் காணிக்கையாக வழங்கி சுவாமி தரிசனம் செய்தார்....
சீனாவில் தொடங்கிய உலகின் மிகப் பெரிய பனிச் சிற்ப திருவிழா !

சீனாவில் தொடங்கிய உலகின் மிகப் பெரிய பனிச் சிற்ப திருவிழா !

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  சீனாவில் தொடங்கிய உலகின் மிகப் பெரிய பனிச் சிற்ப திருவிழா ! உலகின் மிகப் பெரிய பனிச் சிற்ப திருவிழா சீனாவில் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு பனிச் சிற்பங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் 1963- ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஹெய்லாங்ஜியாங் மாகாண தலைநகரான ஹார்பின் நகரில் பனிச் சிற்ப திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் பனிச் சிற்ப திருவிழா பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. 4 லட்சம் சதுர மீட்டர் அளவிலான மிகப்பெரிய நிலப்பரப்பில் வகைவகையான பனிச் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 65 வகையான சிற்பங்களை காட்சிப்படுத்த 2 லட்சத்து 30 ஆயிரம் கன மீட்டர் பனிக்கட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நினைவுப்படுத்தும் 42 மீட்டர் உயரம் கொண்ட டார்ச் வைக்கப்பட்டுள்ளது. 24-வது குளிர்கால போட்டிகளை குறிக்கும் வகையில், 24 ...