‘குடிபட்வா’ பண்டிகை கொண்டாட கொரோனா கட்டுப்பாடுகளை 100 சதவீதம் விலக்கிய மாநிலம்!
2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. கொரோனா பரவலின் போது மகாராஷ்டிரா அதிக அளவில் பாதிக்கப்பட்டது.
அங்கு தொற்று பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.
இந்நிலையில், பொது இடங்களில் நாளை (ஏப்.2) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
மகாராஷ்டிரா மாநில புத்தாண்டான ‘குடிபட்வா’ பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை முதல் பொது இடங்களில் பொது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று முதல்வர் தாக்கரே தெரிவித்துள்ளார்.
“குடி பட்வா என்பது புத்தாண்டின் ஆரம்பம். புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கான நாள் இது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொடிய கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்த்துப...
