இன்றைய ஒரு வரி செய்திகள்
இலங்கை கடற்படை கைது செய்த 21 மீனவர்கள், 2 விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெளியுறவு அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, சிறுவாணி குடிநீர் திட்டப்பயனாளிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்கிட, சிறுவாணி அணையில் நீர் சேமிப்பை பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம்.
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை மறுஆய்வு செய்ய தற்போது அவசியமில்லை.
மத்திய நீர்வள குழுமத்தின் நிலை அறிக்கைக்கான தமிழக அரசின் பதில் மனு வரும் 4-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் - அமைச்சர் துரைமுருகன்.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 16,096 பேருக்கு கொரோனா , 35 பேர் உயிரிழப்பு.
மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை , தமிழ்நாட்டிற்கான புதிய ரயில் திட்டங்க...