திங்கட்கிழமை, மே 13
Shadow

kodanki head line

இன்றைய முக்கியச் செய்திகள்  Today Head Lines 08-02-22

இன்றைய முக்கியச் செய்திகள் Today Head Lines 08-02-22

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, NEWS, செய்திகள்
  நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் மசோதா நிறைவேற்றும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. சுயேட்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. மாநில காங்கிரஸ் தலைவராக தாம் தொடர்ந்தால், எந்த எம்எல்ஏக்களின் வாரிசுகளும் துறைத் தலைவர்களாக முடியாது என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் நெஞ்சுவலி காரணமாக அருப்புகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 மாத பரோலில் வெளிவந்த ரவிச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டம் சூரப்ப நாயக்கன்பட்டியில் இருந்தார். அரசு பேருந்து ஓட்டுனர்கள் பணியின் போது செல்போன் வைத்திருக்கக் கூடாது என்று நா...
இன்றைய முக்கியச் செய்திகள் Today Head Lines 4.2.22

இன்றைய முக்கியச் செய்திகள் Today Head Lines 4.2.22

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி ஊர்வலம், பேரணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 11-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, சென்னை மாநகராட்சி மன்றக் கூடம் புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் அமலான பின்பு கடந்த 7 நாட்களில் சென்னையில் மட்டும் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் 699 மூத்த அதிகாரிகள் வட்டார பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நேற்று ஒரே நாளில் 27,365 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.   நீட் தேர்வுக்கு எதிரான மசோத...
இன்றைய முக்கியச் செய்திகள் – Today Head Lines – 03.02.22

இன்றைய முக்கியச் செய்திகள் – Today Head Lines – 03.02.22

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, NEWS, செய்திகள்
  அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு இந்தியா முழுவதுமுள்ள 37 அரசியல் கட்சி தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேல்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும், அமமுகவுக்கு குக்கர் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. மருத்துவப் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக ஆயிரத்து 429 மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் பகுதியில் இன்று இரண்டு ஆடுகளை கொன்று சிறுத்தை அட்டகாசம் செய்துள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். நம்பியூர் காந்தி நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்த சிசிடிவி காட்சிகள...
இன்றைய முக்கியச் செய்திகள் 02.02.22

இன்றைய முக்கியச் செய்திகள் 02.02.22

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    தமிழ்நாட்டில் திங்களன்று 19,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், நேற்று 16,096 ஆக குறைந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய தற்போது அவசியம் இல்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 80 சதவிகித மாணவர்கள் வருகை தந்ததாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.   வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை உடனடியாக களைய வேண்டும் என. அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக-வுக்கு குக்கர் சின்னமும், மதிமுக-வுக்கு பம்...
இன்றைய ஒரு வரி செய்திகள்

இன்றைய ஒரு வரி செய்திகள்

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, NEWS, செய்திகள்
    இலங்கை கடற்படை கைது செய்த 21 மீனவர்கள், 2 விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெளியுறவு அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம். கோயம்புத்தூர் மாநகராட்சி, சிறுவாணி குடிநீர் திட்டப்பயனாளிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்கிட, சிறுவாணி அணையில் நீர் சேமிப்பை பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம். முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை மறுஆய்வு செய்ய தற்போது அவசியமில்லை. மத்திய நீர்வள குழுமத்தின் நிலை அறிக்கைக்கான தமிழக அரசின் பதில் மனு வரும் 4-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் - அமைச்சர் துரைமுருகன். தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 16,096 பேருக்கு கொரோனா , 35 பேர் உயிரிழப்பு. மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை , தமிழ்நாட்டிற்கான புதிய ரயில் திட்டங்க...
இன்றைய முக்கியச் செய்திகள் – kodanki head lines 29.01.22

இன்றைய முக்கியச் செய்திகள் – kodanki head lines 29.01.22

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, செய்திகள்
    தமிழகம் முழுவதும் 20-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது   உக்ரைன் நாட்டின் மீது, ரஷ்யா அடுத்த மாதம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். உக்ரைனுக்கு அனைத்து ராணுவ உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் பைடன் உறுதி அளித்துள்ளார்.   ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்ட்டியும், அமெரிக்க வீராங்கனை டேனியல் காலின்சும் விளையாட உள்ளனர்.   கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பு...
இன்றைய முக்கியச் செய்திகள் 27.01.22

இன்றைய முக்கியச் செய்திகள் 27.01.22

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, NEWS, செய்திகள்
  தமிழ்நாட்டில் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா பரவல் குறைந்து, தினசரி பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது, அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு மீண்டும் வெளியிட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க மறுப்பு: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீசில் புகார் கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தேசிய அளவில் சமூகநீதிக்கான கூட்டமைப்பை தொடங்கவிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் மற்றும் பொது நூலக விதிகளில் நவீன காலத்திற்கு ஏற்ப திருத்தங்கள் மேற்கொள்ள உயர்மட்டக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. 424 கோடி ரூபாய் செலவில் ஈரோடு,...
இன்றைய முக்கியச் செய்திகள் 20.01.2022

இன்றைய முக்கியச் செய்திகள் 20.01.2022

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, செய்திகள்
    தமிழகத்தில் இன்று பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, நடைபயணம், பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்த தடை விதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு, 27 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 26 ஆயிரத்து 981 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். பருத்தி மற்றும் நூல் விலைஉயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வரும் 24-ம் த...
இன்றைய முக்கியச் செய்திகள் 7.1.22

இன்றைய முக்கியச் செய்திகள் 7.1.22

HOME SLIDER, kodanki head line
  * தமிழகம் முழுவதும் நேற்று இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்று முதல் 3 நாட்களுக்கு வழிபாட்டு தலங்கள் மூடல். தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் சுமார் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 117 பேரும் குணமடைந்துள்ளனர். சென்னை குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் கொரோனா தொற்று பாதித்த 81 மாணவர்களில் 66 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக சனிக்கிழமை அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக இருப...