
தமிழ்நாட்டில் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா பரவல் குறைந்து, தினசரி பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது, அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு மீண்டும் வெளியிட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க மறுப்பு: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீசில் புகார்
கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தேசிய அளவில் சமூகநீதிக்கான கூட்டமைப்பை தொடங்கவிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் மற்றும் பொது நூலக விதிகளில் நவீன காலத்திற்கு ஏற்ப திருத்தங்கள் மேற்கொள்ள உயர்மட்டக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
424 கோடி ரூபாய் செலவில் ஈரோடு, மன்னார்குடி, திருத்தணி உட்பட 13 நகரங்களில் புதிதாக பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
2021ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதாளர்கள் பெயரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு அனுமதிச் சீட்டுகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் எம்.பி.க்கள்-எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
கொரோனா குறைந்தால் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல், பள்ளிகளை திறக்க அனுமதிக்குமாறு முதலமைச்சருக்கு பரிந்துரைப்போம் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபருக்கு 2வது முறையாக தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் இதனால் மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமெனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்ததாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், பொட்டிரெட்டிப்பட்டியில் வரும் 29-ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்னேற்பாடுகளை மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் பார்வையிட்டார்.
சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இரவிலும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் அலங்கார செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
அவிநாசி அருகே ஒரு நாயை சிறுத்தை அடித்து தின்றுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் கண்காணிப்பு பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
தப்பியோடிய சிறுத்தை அவினாசி அருகே பொங்குபாளையம் பகுதியில் இருப்பதை உறுதி செய்துள்ள வனத்துறையினர்.
35 ஆண்டு கால சமூக சேவைக்கான அங்கீகாரமாக பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக கிராமாலயா தொண்டு நிறுவனர் தாமோதரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 73வது குடியரசு தினத்தை ஒட்டி, சென்னை காமராஜர் சாலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.
டெல்லி விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள், கம்பீரமாக அணிவகுத்தன.
சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்ட போது, அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
