ரயிலில் இருந்து வடகொரியா ஏவுகணை சோதனை!!
ரயிலில் இருந்து இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட புதிய தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரயிலில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்ததாக வட என்று கொரியாவின் அரசாங்க செய்தி நிறுவனமான VOK தெரிவித்துள்ளது.
இந்த மாதம் வட கொரியா இரண்டு ஏவுகணைகளை கடலில் சோதனை செய்ததை கண்டறிந்ததாக தென் கொரியாவின் இராணுவம் கூறியதைத் தொடர்ந்து, இந்த அறிக்கை வந்தது.
பியோங்யாங்கின் வெளியுறவு அமைச்சகம் வட கொரியாவின் முந்தைய சோதனைகள் மீது புதிய தடைகளை விதித்ததற்காக அமெரிக்காவை கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது
அதனைத் தொடர்ந்து, அமெரிக்கா அதன் நிலைப்பாட்டை தொடர்ந்தால் வலுவான மற்றும் வெளிப்படையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கும் வகையில் இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது...
