“காணும் பொங்கல்” கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்களுக்கு தடை! 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு!!
"காணும் பொங்கல்" கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்களுக்கு தடை! 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு!!
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே, காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் வெளியே கூடாமல் கண்காணிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜனவரி 31ம் தேதிவரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் கட்டுப்பாடுகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான இன்று காணும் பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகின்றது. காணும் பொங்கல் முன்னிட்டு குடும்பத்துடன் கடற்கரை, சுற்றுலா தளங்கள், கோவில் பூங்காக்...