சனிக்கிழமை, ஜூன் 20
Shadow

Tag: mamtha

மே.,வங்கத்தில் பா.ஜ.,வெற்றி பெறும் என கணிக்க கடவுளா மோடி? மம்தா கேள்வி

மே.,வங்கத்தில் பா.ஜ.,வெற்றி பெறும் என கணிக்க கடவுளா மோடி? மம்தா கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வெற்றி பெறும் என கணிக்க கடவுளா மோடி? மம்தா கேள்வி மேற்கு வங்கத்தில் இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு மீதமிருக்கும் நிலையில், அங்கு பா.ஜனதா வெற்றி பெறும் என கணிப்பதற்கு நீங்கள் கடவுளா? என பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே தொடர்ந்து வார்த்தை மோதல்கள் வெளிப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்றுமுன்தினம் மேற்கு வங்கத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த பிரதமர் மோடி, அங்கு தேர்தலுக்குப்பின் பா.ஜனதா அரசு அமையும் என கூறினார். புதிய அரசு பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்பேன் எனவும், மாநிலத்தில் பிரதமர் கிசான் நிதி திட்டத்தை வெகு விரைவில் அமல்படுத்துமாறு அப்போது வலியுறுத்துவேன் என்றும் கூறியிருந்தார்....
வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கவும், ஓட்டுகளை அள்ளவும் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்கும் பா.ஜ.க. தலைவர்கள் – மம்தா குற்றச்சாட்டு

வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கவும், ஓட்டுகளை அள்ளவும் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்கும் பா.ஜ.க. தலைவர்கள் – மம்தா குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics
வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கவும், ஓட்டுகளை அள்ளவும் பா.ஜ.க. தலைவர்கள் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்குகின்றனர் - மம்தா குற்றச்சாட்டு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கும் ஆர்வத்தில் உள்ளார். ஆனால் அவரிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியே தீருவது என்று பா.ஜ.க. கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளது. மம்தா கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்கள் முதல் மந்திரிகள் வரை பலரும் பா.ஜ.க.வுக்கு தாவுகின்றனர். இந்த தருணத்தில் பாசிம் மெதினிபூரில் நேற்று மம்தா பானர்ஜி பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வாக்காளர்களைக் கவர்ந்திழுப்பதற்காகவும், ஓட்டுகளை அள்ளுவதற்காகவும் பா.ஜ.க. தலைவர்கள் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்குகின்ற...
மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் மம்தா கட்சிக்கு ஆதரவு – அகிலேஷ் யாதவ்

மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் மம்தா கட்சிக்கு ஆதரவு – அகிலேஷ் யாதவ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் மம்தா கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என சமஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து சமஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், “மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வகுப்புவாதத்தை தூண்ட துவங்கி உள்ளது. பா.ஜ.க வெற்றிபெற நாங்கள் விரும்பவில்லை. எனவே சமஜ்வாடி கட்சி சார்பில் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டா மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புலம்பெயர்ந்தவர்களாக உ.பி., மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. அடுத்த இரண்டாண்டுகளில் உ.பி., மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மக்கள் பா.ஜ.கவுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றார்....
மேற்கு வங்கத்தில் அனைத்து மத வழிபாட்டு தளங்களும்  ஜூன் முதல் தேதி திறக்கப்படும் – முதல்வர் மம்தா அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் அனைத்து மத வழிபாட்டு தளங்களும் ஜூன் முதல் தேதி திறக்கப்படும் – முதல்வர் மம்தா அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜூன் முதல் தேதியில் இருந்து அனைத்து வழிபாட்டு தளஙகளும் திறக்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.   இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது 4-ம் கட்ட பொதுமுடக்கம் நாளைமறுநாள் உடன் முடிவடைகிறது. அதன்பின்பும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. கடந்த 65 நாட்களுக்கு மேலாக எந்தவொரு வழிபாட்டு தலங்களும் திறக்கப்படாமல் உள்ளன. பொதுமக்கள் அதிகமாக கூடினால் கொரோனா தொற்று வேகமாக பரவிவிடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் 1-ந்தேதியில் இருந்து மேற்கு வங்காளத்தில் இந்து கோவில்கள், மசூதி, குருத்வாரா உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும். ஆனால் 10 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. மதம் த...
ஊரடங்கில் தெளிவில்லாத மோடி அரசு – கடுப்பாகும் முதல்வர் மம்தா

ஊரடங்கில் தெளிவில்லாத மோடி அரசு – கடுப்பாகும் முதல்வர் மம்தா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கில் தெளிவில்லாத மோடி அரசு - கடுப்பாகும் முதல்வர் மம்தா நேற்று நடந்த  பிரதமர் மோடியின் வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா கலந்து கொள்ளவில்லை. ஆதே நேரம் பிரதமர் மோடியுடனான ஆலோசனைக் கூட்டம் குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி அளித்த போது கூறியது: “ இப்போது நடைமுறையில் இருக்கும் லாக் டவுன் குறித்து மத்திய அரசுக்கு எந்தவிதமான தெளிவும் இல்லை. சுழற்சி அடிப்படையில் முதல்வர்கள் பிரதமர் மோடியுடன் பேச அழைக்கப்படுகிறார்கள். இதில் பிரதமர் மோடியுடன் பேச பல முதல்வர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் பல கேள்விகள் கேட்டிருப்பேன். குறிப்பாக மேற்கு வங்கத்துக்கு ஏன் மத்தியக் குழுவை அனுப்பி வைத்தீர்கள் என்று கேட்டிருப்பேன். லாக் டவுன் குறித்த புரிதல் இல்லாமல் , முரண்பட்ட கருத்துககளை ம...
ஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு

ஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆந்திராவில் சோதனைகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள வழங்கிய அனுமதியை அம்மாநில அரசு திரும்ப பெற்றது. இந்த உத்தரவை அடுத்து சிபிஐ ஆந்திரா எல்லைக்குள் எந்தஒரு சோதனையும் மேற்கொள்ள முடியாது, விசாரிக்கவும் முடியாது. சிபிஐ டெல்லி சிறப்புப்படை பிரிவு சட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. சட்டத்தின்படி, டெல்லியில் மட்டுமே சிபிஐ அதிகாரம் பெற்றது. பிற மாநிலங்களில் நுழைய அம்மாநிலங்களில் ஒருமனதான சம்மதத்தை பெற வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில் ஆந்திராவில் சிபிஐயின் அதிகாரத்தை தடுக்கும் வகையில் ரகசிய உத்தரவை அம்மாநில உள்துறை கொள்கை செயலாளர் ஏ.ஆர். அனுராதா நவம்பர் 8-ம் தேதி பிறப்பித்துள்ளார். இது, நேற்று இரவு வெளியே தெரியவந்துள்ளது. டெல்லி சிறப்பு போலீஸ் படை சட்டத்தின் பிரிவு 6-ன் படி மாநில அரசு ஒப்புதலை திரும்ப பெறலாம். அதன்படியே மாநில அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அனுமதி வழங்கிய மூன்று மாத...