ராணி எலிசபெத் அறையில் திடீரென நுழைந்த நாய்!
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு வியப்பு தான். அவரைப் பற்றி தெரிந்து கொள்ள இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கிறது.
பிப்ரவரி 6 ஆம் தேதி, இங்கிலாந்து ராணி அரியணையில் அமர்ந்து, ஆட்சி செய்யத் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இவருடைய ஆட்சி, நாட்டை பல்வேறு முறையில் முன்னேற உதவியதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு முறை தத்தளித்த போதும் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்கான உதாரணமாகவும் செயல்பட்டு வருகிறது.
நினைவுகள் எவ்வளவு அழகானவை என்பது அரசிக்கும் பொருந்தும். இரண்டாம் எலிசபெத் ராணி, தனது 70 ஆண்டு கால ஆட்சியை முன்னிட்டு,
ஆட்சியை நினைவு கூறும் முக்கிய நினைவுச் சின்னங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாய் குறுக்கிட்டது.
நினைவுச்சின்னங்களில் கலைப்பொருட்கள், குழந்தைகள் அனுப்பிய அட்டைகள் மற்றும் பொதுமக்கள் அரசியை வாழ்த்திய செய்திகள் ஆகியவை இருந...
