இந்திய அணியில் இடம்பிடித்த இளம் வீரர்..!
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மூலம் இந்திய அணிக்கான சர்வதேச பயணத்தை தொடங்கியுள்ளார் வெங்கடேஷ்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி போலண்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியுள்ளது.
இதில் டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணியில் வெங்கடேஷ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச போட்டியில் களம் கண்டுள்ளார். கடந்த ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய அவர், பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கியதால், அவருக்கான இந்த வாய்ப்பு தேடி வந்துள்ளது.
இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியிருக்கும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அஸ்வின், சாஹல் என இரண்டு ஸ்பின்னர்...
