பெங்களூரு அணியை பாப் டு பிளிஸ்சிஸ் சிறப்பாக வழிநடத்துவார்- விராட் கோலி!
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையில் களம் இறங்குகிறது. கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கிய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்கியுள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
ஐ.பி.எல். ஏலத்தில் அனுபவ வீரர் பிளிஸ்சிஸ்சை எடுப்பது என்ற திட்டத்தில் தெளிவாக இருந்தோம். வீரர்கள் ஓய்வறையில் நாங்கள் மிகவும் மரியாதை அளிக்கும் ஒரு தலைவர் தேவை. அதாவது கட்டளை போடும் வீரர் கேப்டனாக வேண்டுமே தவிர, கோரிக்கைகள் வைக்கும் தலைவர் அல்ல. அவர் தென்ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்துள்ளார். நிறைய சாதித்துள்ளார். அவர் பெங்களூரு அணியை வழிநடத்துவதில் ம...

