புதன்கிழமை, ஜூலை 8
Shadow

Author: Kodanki

பரபரப்பான படப்பிடிப்பில் விஜய் ஆண்டனியின் தமிழரசன்..!

பரபரப்பான படப்பிடிப்பில் விஜய் ஆண்டனியின் தமிழரசன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  ” தமிழரசன் “ இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். கதை திரைக்கதை வசனம் இயக்கம்  –   பாபு யோகேஸ்வரன் இப்படத்தின் படப்பிடிப்பு  15 நாட்கள் சென்னையில் நடைபெற்றது. விஜய் ஆண்டனி –  ரம்யா நம்பீசன் சம்மந்தப் பட்ட காட்சிகள் மற்றும் விஜய் ஆண்டனி வில்லன் சோனு சூட் மோதும் ஆக்‌ஷன் காட்சிகள் படமானது. அத்துடன் 1000 கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்  மற்றும் போராட்டக் காட்சிகளை   4காமிராக்களை கொண்டு ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினார். இந்த காட்சிகள் திரை...
முதலமைச்சர் கோப்பையை தட்டிச் சென்ற கென்னடி கிளப் பட கபடி வீராங்கனைகள்..!

முதலமைச்சர் கோப்பையை தட்டிச் சென்ற கென்னடி கிளப் பட கபடி வீராங்கனைகள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சுசீந்திரனின் 'கென்னடி கிளப்' படத்தில் பெண் கபடிவீரர்கள் நடிக்கிறார்கள். இவர்கள் நிஜவிளையாட்டிலும் 12லட்சம் ரூபாய் தட்டிசென்றனர். படப்பிடிப்பிற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையைத் தட்டிச் சென்ற கபடி வீராங்கனைகள். பெண்கள் கபடி மையமாக வைத்து உருவாகி வரும் படம் 'கென்னடி கிளப்'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா,  சசி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்கள் படப்பிடிப்பை முடித்து கொண்டு   படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினர். மேலும், இயக்குனர் சுசீந்திரனின் சொந்த ஊரான பழனிக்கு அருகில் உள்ள கணக்கம்பட்டியிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  விழுப்புரத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்ந...
திருவண்ணாமலையில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக உதவிய கௌதமி!

திருவண்ணாமலையில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக உதவிய கௌதமி!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
  திருவண்ணாமலையில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக உதவிய கௌதமி! LIFE AGAIN INDIA நிறுவனத்தின் நிறுவனர் திருமதி .கௌதமி அவர்கள் சமீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளில்  ஏழை  - எளிய குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்ய சென்றிருந்தார். வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவி செய்வதே அவர் தனது மிகப்பெரிய சாதனையாக கருதுகிறார். திருவண்ணாமலையில் உள்ள பள்ளி  கல்வியாளர்களிடம் நீண்ட நேரம் குழந்தைகளுக்கு தேவையான வருங்கால கல்வி பற்றி கலந்துரையாடி உள்ளார். மேலும் அவர் திருவண்ணாமலையில் கல்வி மையம்  ஒன்றை நிறுவி ஏழை குழந்தைகளுக்கு கணக்கு மற்றும் ஆங்கில பாடங்களை ஆசிரியர்களை கொண்டு கற்பிக்க உள்ளார். நம் நாட்டின் எதிர்காலமான குழந்தைகளின் வருங்கால கல்விக்காக உதவி செய்ய அவர் காத்திருக்கிறார்....
அபிசரவணன்-வெண்பா ஜோடியின் மாயநதி

அபிசரவணன்-வெண்பா ஜோடியின் மாயநதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  லட்சியத்தை அடைய போராடும் மாயநதி ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன் தயாரித்து இயக்கி வரும் படம் ‘மாயநதி’. இதில் நாயகனாக ‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ ஆகிய படங்களில் நடித்த அபி சரவணன் நடிக்கிறார். காதல் கசக்குதய்யா, ‘பள்ளி பருவத்திலே’ ஆகிய படங்களில் நடித்த வெண்பா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி, தமிழ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி அஷோக் தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘மகள் மீது பாசமும், அதீத நம்பிக்கையும் கொண்ட ஒரு தந்தை, டாக்டராவதையே லட்சியமாகக் கொண்ட ஒரு பெண், இலக்குகள் எதுமின்றி காதலிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்ட ஒரு சராசரி இளைஞன். இவர்களைப் பற்றிய சுவாரசியமான நிகழ்வே ‘மாயநதி’. பதின்ம வயதில் இயல்பாக ஏற்...
ஆயிரம் கிலோ குண்டு வீசப்பட்ட தீவிரவாதிகள் முகாம்… இந்திய விமானப்படை அதிகாலை அட்டாக்…!

ஆயிரம் கிலோ குண்டு வீசப்பட்ட தீவிரவாதிகள் முகாம்… இந்திய விமானப்படை அதிகாலை அட்டாக்…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆயிரம் கிலோ குண்டு வீசப்பட்ட தீவிரவாதிகள் முகாம்... இந்திய விமானப்படை அதிகாலை அட்டாக்...!   இந்திய பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை இன்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 14 -ம் தேதி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம்மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், 40 -க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர் இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டியது. இந்நிலையில், இன்று அதிகாலை புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்திருக்கிறது. இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 12 மிராஜ் ரக போர் விமானங்களில் அதிகா...
கார்த்திக்கு ஜோடியாகும் ராஷ்மிகா!

கார்த்திக்கு ஜோடியாகும் ராஷ்மிகா!

CINI NEWS, செய்திகள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ரெமோ படத்தினை இயக்கியவர் பாக்யராஜ் கண்ணன். இவர் அடுத்ததாக கார்த்தி நடிக்கும் 19வது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர் கடந்த வருடம் தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். கார்த்தி தற்போது நடித்துவரும் அவரது 18வது படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
போயஸ்கார்டன் பகுதியில் ஜாகை மாறிய ஜெயம்ரவி..!

போயஸ்கார்டன் பகுதியில் ஜாகை மாறிய ஜெயம்ரவி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  சென்னையில் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ்கார்டன் ஏரியாவில் புதிதாக ஒரு வீட்டை வாங்கியுள்ளார் ஜெயம் ரவி. சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் போயஸ் கார்டன் பகுதி வி.வி.ஐ,பி.கள் வசிக்கும் பகுதி. அங்கு சினிமா நடிகர்களுக்கே வீடு கிடைப்பது கஷ்டம். அதேப் போல அந்த ஏரியாவில் காலி மனைகளும் கிடையாது. அதனால் புதிதாக யாரும் அங்கு மனை வாங்கி வீடு கட்டவும் முடியாது. இதனால் எவ்வளவுதான் பணமும் ஆசையும் இருந்தாலும் அந்த ஏரியாவில் வீடு வாங்குவது குதிரைக் கொம்புதான். ஆனால் நடிகர் ஜெயம் ரவி இப்போது அங்கு சுமார் 20 கோடி மதிப்பிலான தனி வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்கிரீன் சீன் நிறுவனம் எனும் வரிசையாக ஜெயம் ரவி நடிக்கும் 3 படங்களைத் தயாரிக்க ஒப்பந்தமாகியுள்ளது. இந்த மூன்று படங்களில் நடிக்க ஜெயம் ரவிக்குப் பேசப்ப்பட்ட சம்பளம் எதுவும் கிடையாதாம். அதற்குப் பதிலாக அந்த நிறுவன...
குழந்தைகளின் உளவியல் ரீதியான மனஅழுத்தம் மற்றும் தற்கொலைக்கு தீர்வு காண விஷால் புது முயற்சி!

குழந்தைகளின் உளவியல் ரீதியான மனஅழுத்தம் மற்றும் தற்கொலைக்கு தீர்வு காண விஷால் புது முயற்சி!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  குழந்தைகளின் உளவியல் ரீதியான மனஅழுத்தம் மற்றும் தற்கொலைக்கு தீர்வு காண 'ரீச் தீஷா'வுடன் கைகோர்க்கும் விஷால் பல குழந்தைகள் உளவியல் ரீதியான பிரச்னை காரணமாகவும், மனஅழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளவயதினர்கள் தான் அதிகமாகி வரும் மிகவும் வருத்தமான சூழ்நிலையே தற்போது நிலவுகிறது. இதற்கு முற்றிலும் தீர்வுகாண நாராயணா நிறுவனம் 'தி திஷா ஹெல்ப்லைன் ' உடன் கைகோர்த்துள்ளார். இதனால் அனைத்து மாணவர்களும் தங்களின் மனநல பாதிப்புகளுக்கு இலவச எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும் நடிகர் விஷால், இதுபோன்ற பாதிக்கப்படும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- உங்களுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது, விளையாட முடியவில்லை, நடக்க முடியவில்லை, ஏன்? நிற்கக்கூட முடியவில்லை. என்...
சென்னையின் இருட்டு உலகம் சி.வி.குமாரின் “கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்”

சென்னையின் இருட்டு உலகம் சி.வி.குமாரின் “கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
  அட்டக்கத்தி’ படம் தொடங்கி பல்வேறு படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்த அவர், ஏற்கனவே ‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் களம் இறங்கினார். இப்போது ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்ற பெயரில் இரண்டாவது படத்தையும் எடுத்திருக்கிறார். இந்தப் படம் சென்ஸாருக்கு தப்புமா என்பதே இப்போதைய கேள்வி! ஜெயிலுக்குள்ளயே போதைப் பொருட்கள் தாராளமாக புழங்கும் போது, இவ்வளவு பெரிய சென்னையில் எவ்வளவு போதைப் பொருட்கள் புழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா!? கஞ்சா, ஹெராயின், சரஸ் என்று ஆரம்பித்து சென்னையில் கிடைக்காத போதைப் பொருட்களே கிடையாது!   போதை பழக்கத்திற்கு ஆளாகும் ஒரு இளம் ஜோடி எவ்வளவு சிக்கலுக்குள்ளாகிறார்கள் என்பதுதான் படத்தின் ஒன்லைன். அதன் பின்னணியில் இருக்கும் நிழல் உலக வாழ்க்கையை இதுவரை எந்த தமிழ் சினிமாவிலும் சொல்லாத அளவுக்கு டீடெய்லாக சொல்லியிரு...