நதிநீரில் இருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாக சரியாகும்! பிரகாஷ் ராஜ் யோசனை!
தமிழக விவசாடிகளை கதறி அழ வைத்து விட்ட காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை ஏதோ சில தசாப்தப் பிரச்னை அல்ல; அது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலச் சிக்கல். 1807-ம் ஆண்டே காவிரி நதி நீரைப் பங்கீட்டுக் கொள்வதில் சிக்கல் துவங்கிவிடுகிறது. பேச்சு வார்த்தையும் அதே காலக்கட்டத்தில் துவங்கிவிடுகின்றன. பேச்சு வார்த்தை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க 1866-ம் ஆண்டு மைச்சூருக்கான பிரித்தானிய நிர்வாகத்தைச் சேர்ந்த கர்னல் ஆர்.ஜே. சாங்கி மலைச்சரிவில் விழும் மழைநீரை முழுமையாகப் பயன்படுத்தும் நோக்கத்தோடு ஒரு பெருந்திட்டத்தைத் தீட்டுகிறார். இதற்கு முதலில் மெட்ராஸ் மாகாண அரசு ஒத்துக்கொண்டாலும், நாட்கள் செல்லச் செல்ல... இதனால் மெட்ராஸ் மாகாணத்துக்கு வரும் நீரின் அளவு குறையுமே என்று அச்சம் ஏற்படுகிறது. மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. பலசுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின் 1892 பிப்ரவரி 18-ம் தேதி ஒரு ஒப்பந்தம் தயராகிறது....









