செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Author: Kodanki

ஃப்ரீயா வந்த நடிகை தீபிகா: பாலிவுட்காரர்கள் அதிர்ச்சி

ஃப்ரீயா வந்த நடிகை தீபிகா: பாலிவுட்காரர்கள் அதிர்ச்சி

சினி நிகழ்வுகள், செய்திகள்
மும்பையில் நடந்த தி ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் ஹாலிவுட் படத்தின் சிறப்பு காட்சி நிகழ்ச்சிக்கு தீபிகா படுகோனே அணிந்து வந்த உடை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. வின் டீசலின் தி ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். இது தான் தீபிகா நடித்துள்ள முதல் ஹாலிவுட் படம் ஆகும். இந்நிலையில் வின் டீசல், படத்தின் இயக்குனர் கேருசோ ஆகியோர் மும்பை வந்துள்ளனர். மும்பையில் தி ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், இர்பான் கான், நீல் நிதின் முகேஷ் உள்பட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். சிறப்பு காட்சி நிகழ்ச்சிக்கு தீபிகா தங்க நிற கவுன் அணிந்து வந்திருந்தார். அவர் முன்னழகில் பெரும்பகுதி தெரியும்படி உடை அணிந்திருந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது....
மவுன போராட்டம் நடத்திய சிம்புவை கட்டித் தழுவி பாராட்டிய சீமான்

மவுன போராட்டம் நடத்திய சிம்புவை கட்டித் தழுவி பாராட்டிய சீமான்

செய்திகள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மவுன போரட்டம் நடத்திய நடிகர் சிம்புவை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சந்தித்து பாராட்டினார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு தனது வீட்டு வாசலில் 10 நிமிடம் மவுன போராட்டம் நடத்தினார். அவருடன் சேர்ந்து அவரது குடும்பத்தாரும் மவுனமாக நின்றிருந்தார்கள். இந்த போராட்டத்தில் இயக்குனர் ராமும் கலந்து கொண்டார். சிம்புவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகள், அலுவலகங்கள் முன்பு மவுன போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சிம்புவை சந்தித்து பாராட்டினார். அப்போது சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தினோம். தடையை மீறி நடத்தியதால் எங்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். வேறு இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்துவோம். படத்தை ரிலீ...
ஸ்ரீ சங்கரா டிவி “வெஜிடேரியனிசம்”

ஸ்ரீ சங்கரா டிவி “வெஜிடேரியனிசம்”

செய்திகள்
  “வெஜிடேரியனிசம்”( சைவம்) (திங்கள் முதல் வியாழன் வரை மாலை 8.30 மணிக்கு ) நல்ல உணவு என்பது நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகும், முன்பெல்லாம் நாம் வாழ்வதற்கு பிற உயிரினங்களை கொன்று உட்கொள்ளும் நிலை இருந்தது. ஆனால் ஸ்ரீ சங்கராவின் கருத்து  என்னவென்றால் தற்போதய வழக்கை முறைக்கு இது தேவையில்லை. இப்பொழுது  மக்களிடையே நிலவிவரும் கருத்து என்னவென்றால் முட்டை, மீன் ,இறைச்சி போன்றவற்றில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் அனைத்தும்  பச்சை தாவர உணவிலிருந்தும் கிடைக்கின்றது. சைவ உணவு பழக்கம் என்பது தாவரங்கள் மற்றும் தானியங்களில் இருந்து பெறப்படுவதாகும். எனவே தான் இக்கால மக்கள் இதனை உணர்ந்துகொண்டு சைவ உணவு பழக்கத்துக்கு மாறிவருகின்றன. சைவ உணவு பழக்கத்தின் மூலமாக சாமானிய மனிதனுக்கு ஏற்படக்கூடிய உடல் உபாதைகளான உடல் பருமன், ரத்த அழுத்தம் , சர்க்கரை நோய், புற்று நோய் போன்றவற்றை தவிர்க்கலாம். எனவே தான...
ரகுமானின் ‘பகடி ஆட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் பாண்டிராஜ்

ரகுமானின் ‘பகடி ஆட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் பாண்டிராஜ்

சினி நிகழ்வுகள், செய்திகள்
ரகுமானின் ‘பகடி ஆட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் பாண்டிராஜ் நடிகர் ரகுமானின் அதிரடி ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. இவர் அடுத்ததாக ஆடும் ஆட்டம் ‘பகடி ஆட்டம்’. மாறம் மூவீஸ் மற்றும் பரணி மூவீஸ் பெருமையுடன் வழங்கும் படம் ‘பகடி ஆட்டம்’. இப்படத்தை குமார் டி.எஸ், கே.ராமராஜ், டி.சுபாஷ் சந்திரபோஸ், ஏ.குணசேகர் ஆகியோர் தயாரித்து வருகிறார்கள். ராம் கே.சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். வி.டி. நிறுவனம் இப்படத்தை உலகமெங்கும் வெளியிட இருக்கிறது. இப்படம் குறித்து இயக்குனர் ராம் கே.சந்திரன் கூறும்போது, ‘எல்லா வசதியும் கொண்ட ஒரு ஆணுக்கும், அன்றாட வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வாழும் பெண்ணுக்கும் இடையேயான கதைதான் ‘பகடி ஆட்டம்’. மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் மக்கள் அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்த சமூக வலைதளங்கள் எப்படி பெண...
எதிர்த்து குரல் கொடுத்த ஆர்யா நடிப்பில்  சந்தனதேவன் பெயரில் ஜல்லிக்கட்டு கதை எடுக்கும் அமீர்

எதிர்த்து குரல் கொடுத்த ஆர்யா நடிப்பில் சந்தனதேவன் பெயரில் ஜல்லிக்கட்டு கதை எடுக்கும் அமீர்

சினி நிகழ்வுகள், செய்திகள்
அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி...' - அமீர் இயக்கும் சந்தனத் தேவன்! ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் தமிழகத்தில் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், தனது அடுத்த படத்தை ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இயக்கப் போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் அமீர். இந்தப் படத்துக்கு சந்தனத் தேவன் என்று தலைப்பிட்டுள்ளார். தலைப்பை மென்மையாக வைத்து விட்டு கதையில் தீவிரத்தை காட்ட திட்டமிட்டிருக்கிறார் அமீர். இந்தப் படத்தில் இயக்குநர் அமீர், ஆர்யா, ஆர்யாவின் தம்பி சத்யா நாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த ஆர்யாதான் ஜல்லிக்கட்டுக்கு எதிரான பல கருத்துக்களை கூறியவர். இப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான படத்தில் ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார். வழக்கமாக அமீர் படங்களில் சர்ச்சைகளும், சலசலப்புகளும் ஏற்படுவது வழக்கம். இந்த சந்தனதேவன் பட கதையும் பல சர்ச்சைகளையும், சலசலப்புகளை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. படத்தின் முதல் தோற...
ஜல்லிக்கட்டு தடைக்கு வெளிநாட்டு சதி   மரம் நடும் விழாவில் எஸ்.வி.சேகர் பரபரப்பு பேச்சு

ஜல்லிக்கட்டு தடைக்கு வெளிநாட்டு சதி மரம் நடும் விழாவில் எஸ்.வி.சேகர் பரபரப்பு பேச்சு

செய்திகள்
விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி சார்பில் 1லட்சம் மரக்கன்றுகள் நடும் பிரமாண்டமான விழா சென்னை தாம்பரம் அருகே உள்ள 400 அடி வெளி வட்ட சாலையில் நடந்தது. விழாவுக்கு சாய்ராம் பொறியியல் கல்லூரி சேர்மன் சாய்பிரகாஷ் தலைமை தாங்கினார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.வும் நடிகருமான எஸ்.வி.சேகர், நடிகர் விவேக், நடிகர் ஜெகன், எம்.எல்.ஏ.ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா தொடங்கும் முன்பு நடிகர் விவேக் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தார். நடிகர் எஸ் வி.சேகர் பேசும் போது : மரம் நடும் விழாவில் ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவிகள் கூடியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. மரம் மாதிரி நிக்குறியேன்னு யாராவது சொன்னால் வருத்தப்படாதீர்கள். மரம் போல நிற்பது கஷ்டம். இன்னிக்கு சென்னை கார்ப்ரேஷன் வைக்கும் மரங்களை வாயால் ஊதினாலே விழுந்து விடும். அவ்ளோ மோசமாக இருக்கிறது. ...

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கலைப்பாலம் அமைப்போம் : சென்னை விழாவில் இலங்கைஅமைச்சர் பேச்சு !

செய்திகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கலைப்பாலம் அமைப்போம் என்று சென்னையில் ஒரு விழாவில் இலங்கை கல்வி அமைச்சர்  பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: ஊடகம் மற்றும் நுண்கலை  சார்ந்த பயிற்சி நிறுவனமான பிரிட்ஜ் அகாடமி நடத்திய 'கலைச்சங்கமம் ' 2017 நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டு சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் நேற்று நடை பெற்றது . இலங்கையின் மாகாணக் கல்வி அமைச்சர்  திரு ஜி.ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் . கலைச்சங்கமம் நிகழ்ச்சிகள்   மங்கல இசையாக ராஜு மற்றும் மணிகண்டன் குழுவினரின் நாதஸ்வர இசையுடன் தொடங்கின. பிரிட்ஜ் அகாடமியின் இசையை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அனைவரும், மறைந்த இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவுக்கு இசையால் நினைவஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கிரேடு தேர்வில் முதன்மையாகத் தேர்ச்சி பெற்ற மாணவக் கலைஞர்களின் வாய்ப்பாட்டு , கீ போர்டு கச்சேரிகள் நடைபெற்றன. இலங்...
உலக தமிழ் வம்சாவளியினர் முன்னிலையில்  பிரமாண்டமாக நடைபெற்ற உலக தமிழர் திருநாள் விழா

உலக தமிழ் வம்சாவளியினர் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்ற உலக தமிழர் திருநாள் விழா

செய்திகள்
உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற 3ம் ஆண்டு உலக தமிழர் திருநாள் விழாவை உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமைதாங்கி நடத்தினார். தமிழ்தாய் வாழ்த்தோடு தொடங்கிய விழாவை ஜான் தொகுத்து வழங்கினார். அமெரிக்கா, நார்வே, கனடா, மலேசியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளி அமைப்பினர் வந்திருந்தனர். நார்வே நாட்டின் ஓசுலே மாநகர பெண் மேயர் கம்சாயினி குணரத்னே, இலங்கை கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன், இலங்கை எம்பிக்கள் சிவலிங்கம், சிவமோகன், அமெரிக்க தொழிலதிபரும், டாக்டருமான பழனி.ஜி.பெரியசாமி, குமரி அனந்தன், இலங்கை வானொலி தொகுப்பாளர் அப்துல் ஹமீது, யுகே உலக தமிழ் அமைப்பு நிறுவனர் ஜேக்கப், விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், இயக்குனர் இமயம் பாரதிராஜா, நடிகர் ஜெகன், இசையமைப்பாளர் ஹிப்ஆப் தமிழா ஆதி, தொழிலதிபர...
ஏறுதழுவுதல் எங்கள் பண்பாடு- ஜல்லிக்கட்டுக்காக மதுரையிலும் இளைஞர்கள் எழுச்சி

ஏறுதழுவுதல் எங்கள் பண்பாடு- ஜல்லிக்கட்டுக்காக மதுரையிலும் இளைஞர்கள் எழுச்சி

செய்திகள்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்கக் கோரி இன்று மதுரையில் மிகப்பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் பங்கேற்றனர். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கக்கோரி அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பீட்டா என்ற விலங்குகள் நல அமைப்பு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த 2014ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் ஜனவரி14ம் தேதி அந்த அறிவிப்பை தடை செய்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகள...
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நாணயம், தபால்தலை  முதல்வருக்கு எம்ஜிஆர் உறவினர் நன்றி கடிதம்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நாணயம், தபால்தலை முதல்வருக்கு எம்ஜிஆர் உறவினர் நன்றி கடிதம்

செய்திகள்
இது குறித்து எம்ஜிஆர் உறவினர் தீபன் முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்களுக்கு எழுதிய கடித விவரம்: கோடி மக்களின் மனசில் நீங்கா இடம்பிடித்த எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் உருவம் பொறித்த நாணயங்கள், அவர் உருவம் பொறித்த தபால்தலை வெளியிட வேண்டும் என்று பாரத பிரதமருக்கு வேண்டுகோள் வைத்தோம். அதே கருத்தை வலியுறுத்தி நீங்களும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடையும் அதே நேரம் அதற்கான எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நீண்டகால கனவும், ஆசையுமாக அவரின் விருப்பம் படி எம்ஜிஆர் தோட்டத்தில் நடந்து வரும் மாற்றுத் திறானிகள் பள்ளியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மறைந்த முதல்வர் அம்மா இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக நடத்தி இருப்பார்களோ அதே அளவு சிறப்பான ஒரு விழாவாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். புரட்சித்தலைவரின் ...