பாம்பு சட்டை தப்பிக்கும்..! விமர்சனம்
சென்னையில் நடுத்தர குடும்பத்தில் தனது அண்ணி பானுவுடன் வாழ்ந்து வருகிறார் பாபி சிம்ஹா. தனது அண்ணன் இறந்ததால், அண்ணியை தனது அம்மாவாகவே மதித்து வரும் பாபி சிம்ஹாவுக்கு வேலை இல்லை. பல இடங்களில் வேலை தேடியும் பலன்கிடைக்கவில்லை. இறுதியில் தண்ணீர் கேன் நிறுவனம் வைத்திருக்கும் மொட்டை ராஜேந்திரனிடம் வேலையில் சேர்கிறார். அதன் மூலம் தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் பாபி சிம்ஹா தனது அண்ணிக்கு வேறு திருமணம் செய்து வைக்க முயற்சி மேற்கொள்கிறார்.
தண்ணீர் கேன் போடும் வேலையை விருப்பமில்லாமல் செய்து வரும் பாபி சிம்ஹா, வேலைக்கு சேர்ந்த மறுநாளே, படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷை சந்திக்கிறார். மேலும் முதல் சந்திப்பிலேயே கீர்த்தி மீது காதல் வயப்படுகிறார். பின்னரை கீர்த்தியை பார்ப்பதற்காகவே தினமும் தண்ணீர் கேன் போடும் வேலையை தொடர்கிறார். பின்னர் ஒருநாள் தனது காதலை கீர்த்தியிடம் தெரிவிக்கிறார்.
முதலில் ...
