உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பு வழங்கும் வரை ஆதார் எதற்கும் கட்டாயமில்லை!
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வந்த நிலையில், இனி எதற்கும் ஆதார் கட்டாயமில்லை என உச்ச நீதிமன்ற இன்று (மார்ச் 13) தீர்ப்பளித்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வங்கி கணக்கு, பான்கார்டு, செல்பேசி எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. செல்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கும், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கும் 31ஆம் தேதி கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
ஆதார் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த மார்ச் 6ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், “வங்கி கணக்கு உள்ளிட்டவையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத...









