சென்னை கே.கே. நகரில் கல்லூரி வாசலில் மாணவி கொலை! – திடுக் தகவல்கள்
சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் வாசலில் வைத்து நேற்று அஸ்வினி என்ற முதலாமாண்டு பி.காம். மாணவியை அழகேசன் என்ற இளைஞர் கொலை செய்தார். முதலில் அழகேசனின் ஒருதலை காதலை ஏற்றுக்கொள்ளாததால் அஸ்வினி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது அஸ்வினி கொலையில் புதிய திருப்பமாக பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொலை செய்த இளைஞர் அழகேசனும், கொலை செய்யப்பட்ட அஸ்வினியும் சிறு வயது முதலே நன்கு அறிந்தவர்கள். படிப்பு சரியாக வராததால், கிடைத்த வேலையைப் பார்த்த அழகேசன், தண்ணீர் கேன் போடுவது, மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றுவது என்று கடுமையாக உழைத்துப் பணம் சேர்த்துள்ளார். தந்தையை இழந்து வறுமையில் வாடிய அஸ்வினியின் கல்விச் செலவுக்கு அழகேசன் உதவியுள்ளதாக கூறப்படுகிறது. இது அஸ்வினியின் தாய்க்கும் தெரிந்தே நடந்துள்ளது.
இவர்கள் இருவரின் காதலும் அஸ்வினியின் உறவினர்களுக்கு தெரிய வர, அ...









