ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28
Shadow

Author: Kodanki

சென்னை கே.கே. நகரில் கல்லூரி வாசலில் மாணவி கொலை! – திடுக் தகவல்கள்

சென்னை கே.கே. நகரில் கல்லூரி வாசலில் மாணவி கொலை! – திடுக் தகவல்கள்

HOME SLIDER, செய்திகள்
சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் வாசலில் வைத்து நேற்று அஸ்வினி என்ற முதலாமாண்டு பி.காம். மாணவியை அழகேசன் என்ற இளைஞர் கொலை செய்தார். முதலில் அழகேசனின் ஒருதலை காதலை ஏற்றுக்கொள்ளாததால் அஸ்வினி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது அஸ்வினி கொலையில் புதிய திருப்பமாக பல தகவல்கள் வெளியாகி உள்ளன. கொலை செய்த இளைஞர் அழகேசனும், கொலை செய்யப்பட்ட அஸ்வினியும் சிறு வயது முதலே நன்கு அறிந்தவர்கள். படிப்பு சரியாக வராததால், கிடைத்த வேலையைப் பார்த்த அழகேசன், தண்ணீர் கேன் போடுவது, மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றுவது என்று கடுமையாக உழைத்துப் பணம் சேர்த்துள்ளார். தந்தையை இழந்து வறுமையில் வாடிய அஸ்வினியின் கல்விச் செலவுக்கு அழகேசன் உதவியுள்ளதாக கூறப்படுகிறது. இது அஸ்வினியின் தாய்க்கும் தெரிந்தே நடந்துள்ளது. இவர்கள் இருவரின் காதலும் அஸ்வினியின் உறவினர்களுக்கு தெரிய வர, அ...
கேரள அரசு விருது பெறும் கேணி பட இயக்குநர் எம் ஏ நிஷாத்!

கேரள அரசு விருது பெறும் கேணி பட இயக்குநர் எம் ஏ நிஷாத்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தமிழக - கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சினையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் "கேணி". பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர், ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்தில், தண்ணீருக்கு யார் சொந்தக்காரன்?.. நிலம், ஆகாயம், காற்று போல தண்ணீரும் எல்லாருக்கும் பொதுவானது தானே?.. அதை எப்படி தனிமனிதன் சொந்தம் கொண்டாட முடியும்? என ஏராளமான கேள்விகளை முன் வைத்திருந்தார் இயக்குநர் எம் ஏ நிஷாத்.    ப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பில் சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் தயாரிப்பில், தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளுமே வெளியாகி இருந்த இந்தப்படத்தில்  கிட்டத்தட்ட முல்லைப் பெரியாறு பிரச்சினை போலவே இருந்த கதையை மிகவும் கவனமுடன் கையாண்டிருந்தார் இயக்குநர்.    தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களின் பாராட்...
மீளமுடியாத நோயுள்ளவர்களுக்கு ‘கருணைக்கொலை’ – இந்திய  சுப்ரீம் கோர்ட் அனுமதி

மீளமுடியாத நோயுள்ளவர்களுக்கு ‘கருணைக்கொலை’ – இந்திய சுப்ரீம் கோர்ட் அனுமதி

NEWS, செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டில், ‘காமன்காஸ்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு 2005-ம் ஆண்டு ஒரு பொது நல வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில், ‘தீராத நோய் உடையவர்கள், செயலற்ற நிலையில் முடங்கி, படுத்த படுக்கையாக கிடந்து வாழ விரும்பாதபோது, விதிமுறைகளுக்கு உட்பட்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிற செயற்கை சுவாசத்தை அகற்றி, கருணை கொலை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. அது மட்டுமின்றி, ‘அரசியல் சாசனம் பிரிவு 21-ன் கீழ், கண்ணியத்துடன் வாழ்வதற்கு எப்படி ஒரு மனிதருக்கு அடிப்படை உரிமை இருக்கிறதோ, அதே போன்று கண்ணியத்துடன் மரணத்தை தழுவுவதற்கும் உரிமை உண்டு என்று அறிவிக்க வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது. இதில் டெல்லி மருத்துவ கவுன்சில் ஒரு தரப்பினராக சேர்ந்து கொள்ளவும், கருணை கொலை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும் சுப்ரீம் கோர்ட் 2006-ம் ஆண்...
கேளிக்கை வரியை எதிர்த்து திரையரங்குகள் 16-ந்தேதி முதல் மூடப்படும்..!

கேளிக்கை வரியை எதிர்த்து திரையரங்குகள் 16-ந்தேதி முதல் மூடப்படும்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் டிஜிட்டல் சேவை அமைப்புகளின் கட்டண விகிதங்களை எதிர்த்து கடந்த 1-ந்தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டுவராமல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் திரையரங்குகளில் வசூல் குறைந்துள்ளது. கூட்டம் வராததால் பல தியேட்டர்களில் சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. திரையரங்குகளுக்கு அரசு 8 சதவீதம் கேளிக்கை வரி விதித்துள்ளது. இந்த வரியை முற்றிலும் நீக்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. திரையரங்குகளுக்கான லைசென்ஸ் ...
ரஜினிகாந்த் திடீரென இமயமலை பயணம் – ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார்

ரஜினிகாந்த் திடீரென இமயமலை பயணம் – ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மாவட்டம் வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். வேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்த ரஜினி, எம்.ஜி.ஆரை போல ஏழை மக்களுக்கான ஆட்சியை என்னால் தர முடியும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினி நடித்துள்ள காலா படம் விரைவில் வெளியாக உள்ளது. அதன்பிறகு ‌ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படம் வெளியாகிறது. அந்த படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் என்று சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். அரசியலுக்கான அடித்தளத்தை உறுதியாக அமைத்து வரும் ரஜினி திடீரென்று ஆன்மீக பயணமாக நாளை (10-ந் தேதி) இமயமலை புறப்படுகி...
எச்.ராஜாவின் கருத்து காட்டுமிராண்டித்தனமானது – ரஜினிகாந்த் கடும் கண்டனம்

எச்.ராஜாவின் கருத்து காட்டுமிராண்டித்தனமானது – ரஜினிகாந்த் கடும் கண்டனம்

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
எச்.ராஜாவின் கருத்து காட்டுமிராண்டித்தனமானது - ரஜினிகாந்த் கடும் கண்டனம் பா.ஜனதா தேசிய தலைவர் எச்.ராஜா தனது முகநூலில், “திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல தமிழகத்தில் பெரியார் சிலையும் அகற்றப்படும்” என்று கூறி இருந்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எச்.ராஜாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக பா.ஜனதா பிரமுகர் முத்துராமன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் பெரியார் பற்றி விமர்சனம் செய்த எச்.ராஜாவுக்கும், பெரியார் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாகவும் நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்திடம், பெரியார் சிலை குறித்து எச்.ராஜா தெரிவித்த கருத்து பற்றி கேள்வி எழுப்பினார்கள். இதற்கு ரஜினிகாந்த் அளித்த பதில்...
பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு, அக்‌ஷய்யுடன் திருமணம் முடிந்தது

பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு, அக்‌ஷய்யுடன் திருமணம் முடிந்தது

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நட்சத்திர தம்பதிகளான பார்த்திபன் - சீதா தம்பதிகளின் மகள் கீர்த்தனாவுக்கும், பிரபல தேசிய விருது படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷய்க்கும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து திருமணம் நடந்து முடிந்தது. இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். கீர்த்தனா, மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவர். தற்போது மணிரத்னம் இயக்கும் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். விரைவில் புதிய படத்தை இயக்க இருக்கிறார்.   இவருக்கும் பிரபல சினிமா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்‌ஷய்க்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலைய...
அமலாபாலின் அதோ அந்த பறவையை அறிமுகம் செய்த காஜல் அகர்வால்

அமலாபாலின் அதோ அந்த பறவையை அறிமுகம் செய்த காஜல் அகர்வால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிக்கும் படம் அதோ அந்த பறவை. கே.ஆர்.வினோத் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகிகக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியானது. அந்த போஸ்டரை அமலா பாலின் தோழியும், நடிகையுமான நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டு மகளிர் தினத்தை மேலும் சிறப்பாக்கி இருக்கிறார். இதுகுறித்து காஜல் அவரது டுவிட்டர் பக்கத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல், அமலாபாலை பேரழகுப் பெண் டார்லிங் அமலா பால் என்று குறிப்பிட்டு தன் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜே.ஆர். ஜான் ஆபரகாமும், கலை பணிகளை ...
கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி- கமல்ஹாசன் அறிவிப்பு

கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி- கமல்ஹாசன் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
சென்னை ராயப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில்  இன்று மகளிர் தினத்தையொட்டி ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தாய் சொல்லை தட்டாதவன் நான், அதனால்தான் இந்த மேடையில் நிற்கிறேன். மய்யத்தில் இருந்து பார்த்தால்தான் நீதியும், நியாயமும் புரியும். பெண்களை மதிக்கச் சொல்லிக் கொடுத்தவர் என் தாய். வீரத்தின் உச்சக்கட்டம் அகிம்சை, அதைச் சொல்லாமல் சொன்னவர் என் தாய். எனக்கு புடவை கட்டத்தெரியும், நான் அதை மீசையை முறுக்கிச் சொல்வேன். உனக்கு பெண்களைப் பற்றி என்ன தெரியும் எனக் கேட்கிறார்கள். எனக்கு புரிந்து கொள்ளத் தெரியும். திருச்சியில் உஷா மரணத்தில் அநீதி நிகழ்ந்துள்ளது, நீதியைக் காக்க வேண்டியவர்கள் அநீதியை செய்துள்ளனர். சிறப்பாக செயல்படும் காவலர்களை...