சனிக்கிழமை, ஜூன் 27
Shadow

Author: Kodanki

தமிழ் பாரம்பரியத்திற்கும் தமிழுக்கும்  தலைவணங்குகிறேன் – பிரதமர் மோடி

தமிழ் பாரம்பரியத்திற்கும் தமிழுக்கும் தலைவணங்குகிறேன் – பிரதமர் மோடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளான இன்று, தமிழ்நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் ’அம்மா ஸ்கூட்டர் திட்டம்’ அறிமுக விழாவில் பிரதமர் மோடி பயனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:- தமிழுக்கும், தமிழ் பாரம்பரியத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். அன்புமிக்க சகோதர சகோதரிகளே வணக்கம். மகாகவி பாரதியாரின் மண்ணில் நிற்பதற்கு பெருமைபடுகிறேன். ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதாவின் கனவு திட்டமான மானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்துக்கு காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டதைவிட இப்போது கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏராளமான நிதி வழங்கப்பட்டுள்ளது. மகளிருக்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செ...
பிரதமர் மோடி தொடங்கி வைத்த அம்மா ஸ்கூட்டர் திட்டம்..!

பிரதமர் மோடி தொடங்கி வைத்த அம்மா ஸ்கூட்டர் திட்டம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சென்னை மற்றும் புதுவையில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இன்று மாலை விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்டோர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட மோடி, மெரினா கடற்கரையில் உள்ள ஐ.என்.எஸ். விமானப்படை தளத்தில் வந்து இறங்கினார். அங்கு அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வரவேற்றார். பிரதமரின் வருகையையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் கலைவாணர் அரங்கதுக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க கலைவாணர் அரங்க வளாகத்தி...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  ரஜினி..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினி நடிப்பில் தற்போது ‘காலா’ படம் உருவாகியுள்ளது. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தவிர ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘2.O’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படமும் விரைவில் வெளியாக உள்ளது இப்படங்களில் நடித்த முடித்த பிறகு ரஜினி, தனது ரசிகர்களை சந்தித்து அரசியலில் களமிறங்க இருப்பதாக அறிவித்தார். தற்போது கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரஜினியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஜினியின் அடுத்த படத்தை ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கிறார்...
எனக்கும் கமலுக்கும் பாதைகள் வேறு, நோக்கம் ஒன்று- ரஜினி

எனக்கும் கமலுக்கும் பாதைகள் வேறு, நோக்கம் ஒன்று- ரஜினி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
அரசியல் கட்சி தொடங்குவதற்கான கட்டமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவ்வகையில், இன்று நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, நிர்வாகிகளை சந்தித்து பேசினார். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அனைத்துக்கட்சி கூட்டம்  குறித்து கேட்டபோது, காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது வரவேற்கத்தக்கது என்றார் ரஜினி. கமலின் அரசியல் பயணம் குறித்து கேட்டபோது, ‘நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் எங்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வதே. கமலின் அரசியல் பொதுக்கூட்டம் நன்றாக இருந்தது. முழுவதும் பார்த்தேன்’ என்றார். கமல் கட்சி பொதுக்கூட்டத்தை நடத்தியது போன்று எப்போது பொதுக்கூட்டம் நடத்தி கட்சியை அறிவிப்பீர்கள்? என்று நிருபர்கள்...
கன்னியாகுமரி  மீனவ மக்களுக்கு உதவிய தளபதி  விஜய் ரசிகர்கள்

கன்னியாகுமரி  மீனவ மக்களுக்கு உதவிய தளபதி  விஜய் ரசிகர்கள்

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி  மீனவ மக்களுக்கு உதவிய தளபதி  விஜய் ரசிகர்கள் ! தென்னிந்திய சினிமாவில் முன்னிலை நடிகரான தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். தளபதி விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். தற்ப்போது கன்னியாகுமரி விஜய் ரசிகர்கள் (ACTOR VIJAY  ONLINE WELFARE CLUB ) என்ற நற்பணி இயக்கத்தின் கீழ் புயல் ,வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட குமரி மீனவ மக்கள் குடும்பத்தினர்களுக்கு ஒரு மாதத்திர்ற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளனர்....

கெத்தான விவசாயியாக வலம் வரும் `கடைக்குட்டி சிங்கம்’ கார்த்தி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `கடைக்குட்டி சிங்கம்'. முதல் முறையாக சூர்யா தயாரிப்பில் அவரது தம்பி கார்த்தி நடிக்கும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். நாயகியாக சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் அர்த்தனா நடிக்கின்றனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், கார்த்தியின் அக்காக்களாக மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என்று 5 பேர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தில் கார்த்தி மாதம் 1½ லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கெத்தான விவாசாயி வேடத்தில் நடித்துள்ளார். எப்படி பொறியாளர், டாக்டர் என்று எல்லோரும் தங்கள் பெயருக்கு பின் தாங்கள் செய்யும் வேலையை போட்டு பெருமையாக சொல்லிக் கொள்கிறார்களோ அதே போல் கார்த்தி, தான் ஒரு விவசாயி என்பதை பைக் நம்பர் ப்ளேட் முதல் பல இட...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் கடந்த 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் வழங்கிய 192 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீரின் அளவு 14.75 டி.எம்.சி. குறைந்துள்ளது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரகாலத்திற்குள் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு கர்நாடகா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக முடிவெடுப்பதற்காக தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். சுமார்...
திருச்சியில் அடுத்த பொதுக்கூட்டம்  கமல்ஹாசன் அறிவிப்பு

திருச்சியில் அடுத்த பொதுக்கூட்டம் கமல்ஹாசன் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ராமேஸ்வரத்தில் நேற்று அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ என கட்சியின் பெயரையும், ஆறு கைகள் இணைந்த சின்னத்தை கொண்ட கொடியையும் அறிமுகப்படுத்தினார். இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இடது பக்கமா? வலது பக்கமா? என கேட்காதீர்கள். நடுவில் பயணிக்க விரும்புகிறேன் என தனது நிலைப்பாட்டை தெரிவித்தார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி நடக்கும் என தெரிவித்தார். இதற்கிடையே, தனது கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது, நிர்வாகிகளை தேர்வு செய்வது போன்ற பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...
காவிரி விவகாரத்தில் அரசின் முயற்சிகளுக்கு தி.மு.க. துணை நிற்கும் – ஸ்டாலின் பேச்சு

காவிரி விவகாரத்தில் அரசின் முயற்சிகளுக்கு தி.மு.க. துணை நிற்கும் – ஸ்டாலின் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
காவிரி மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் காவிரி நீரை பெறுவதற்காக தமிழக அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் முதல்வர் விளக்கம் அளித்தார். இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தி.மு.க. துணை நிற்கும் என்றார். ‘மேலும், உச்ச நீதிமன்றத்தால் குறைக்கப்பட்ட நீரை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்ட...
காவிரி விவகாரத்தில் அடுத்த நடவடிக்கை என்ன? தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது

காவிரி விவகாரத்தில் அடுத்த நடவடிக்கை என்ன? தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த 16-ந் தேதி தீர்ப்பளித்தது. அதில், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய நீரின் அளவு குறைக்கப்பட்டது.  இது தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளும் அதிருப்தி தெரிவித்தன. இந்த தீர்ப்பு குறித்து உடனடியாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. தீர்ப்பில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் காவிரி பிரச்சனையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை பேணிக்காக்கவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மீது எடுக்கப்பட வேண்டிய மேல்நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கு ஏதுவாக பிப்ரவரி 22-ந் தேதி காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது என்ற...