இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கலைப்பாலம் அமைப்போம் : சென்னை விழாவில் இலங்கைஅமைச்சர் பேச்சு !
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கலைப்பாலம் அமைப்போம் என்று சென்னையில் ஒரு விழாவில் இலங்கை கல்வி அமைச்சர் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:
ஊடகம் மற்றும் நுண்கலை சார்ந்த பயிற்சி நிறுவனமான பிரிட்ஜ் அகாடமி நடத்திய 'கலைச்சங்கமம் ' 2017 நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டு சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் நேற்று நடை பெற்றது .
இலங்கையின் மாகாணக் கல்வி அமைச்சர் திரு ஜி.ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் .
கலைச்சங்கமம் நிகழ்ச்சிகள் மங்கல இசையாக ராஜு மற்றும் மணிகண்டன் குழுவினரின் நாதஸ்வர இசையுடன் தொடங்கின.
பிரிட்ஜ் அகாடமியின் இசையை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அனைவரும், மறைந்த இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவுக்கு இசையால் நினைவஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கிரேடு தேர்வில் முதன்மையாகத் தேர்ச்சி பெற்ற மாணவக் கலைஞர்களின் வாய்ப்பாட்டு , கீ போர்டு கச்சேரிகள் நடைபெற்றன.
இலங்...
