வெள்ளிக்கிழமை, ஜூலை 24
Shadow

politics

அரசியல் காலம்தான் முடிவு செய்யும்… 31ம் தேதிக்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது – ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஜினி

அரசியல் காலம்தான் முடிவு செய்யும்… 31ம் தேதிக்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது – ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கடந்த 26ந்தேதியில் இருந்து சந்தித்து வருகிறார்.  அவர்களுடன் புகைப்படமும் எடுத்து வருகிறார்.  இந்த நிலையில், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று 4வது நாளாக ரசிகர்களை சந்திக்கிறார்.  கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்ட ரசிகர்களுடன் இந்த சந்திப்பு நடக்கிறது. அவர் ரசிகர்கள் மத்தியில் பேசும்பொழுது, 31ந்தேதிக்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்றன என கூறினார்.  இதனை தொடர்ந்து ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து ஆரவாரம் எழுந்தது.  தொடர்ந்து அவர், என் நண்பர்கள் அதிகம் வாழும் ஊர் கோவை.  என் குருநாதர் சச்சிதானந்த் கோவை மேட்டுப்பாளையத்தில் பிறந்தவர். பெயர், புகழால் மரியாதை கிடைக்கும்.  ஆனால் நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை வைத்தே மக்கள் நம்மை மதித்திடுவார்கள். காலம்தான் மிக முக்கியம்.  காலம் வரும்பொழுது அனைத்தும் தன்னாலே மாறும்.  சினிம...
தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8-ம் தேதி கூடுகிறது!

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8-ம் தேதி கூடுகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றில் தமிழக சட்டப்பேரவை வரும் ஜனவரி 8-ம் தேதி கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கவர்னராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்ற பின், முதல் முறையாக தமிழக சட்டப்பேரவையில் உரையாற்ற உள்ளார். பேரவை எத்தனை நாள்கள் நடக்கும் என்பதுகுறித்து, அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும் என்று தெரிகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன், முதல்முறையாக சட்டப்பேரவை கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். மேலும், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் யாரும் சட்டப்பேரவைக்கு வர முடியாத சூழலே நிலவுகிறது...
சமந்தாவுடன் நடிக்கும்போது எல்லா பிரச்சனைகளையும் மறந்து சந்தோஷமாக இருக்கும் – விஷால்

சமந்தாவுடன் நடிக்கும்போது எல்லா பிரச்சனைகளையும் மறந்து சந்தோஷமாக இருக்கும் – விஷால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `இரும்புத்திரை'. இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஷால், சமந்தா, இயக்குநர் பி.எஸ்.மித்ரன், இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன், இயக்குநர் திரு, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் விஷால் பேசும் போது, `இரும்புத்திரை' முதலில் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை கட்டாயம். அதனால் படம் வெளி வருவதில் தாமதமானது. ஆர்.கே.நகர் தேர்தலில் நான் போட்டியிட கூடாது என்று பலர் வேண்டிக் கொண்டனர். அதில் இயக்குநர் மித்ரனும் ஓருவர். ஏனெனில் மீண்டும் படம் தள்ளி போய்விடும் என்று எண்ணி தேர்தலில் எனது பரிந்துரையை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற மித்...
‘புரட்சி தலைவி’ திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை..!

‘புரட்சி தலைவி’ திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
திரை உலகில் வெற்றிக்கொடி நாட்டியவர் ஜெயலலிதா. பின்னர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக உயர்ந்தார். திரை உலகிலும், அரசியலிலும் தனி அடையாளமாக இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் தயாராக இருக்கும் இந்த படத்துக்கு ‘புரட்சி தலைவி’ என்று பெயரிட்டுள்ளனர். மும்பையை சேர்ந்த பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதற்காக ஒரு வருடத்துக்கு மேலாக ஜெயலலிதா பற்றிய தகவல்களை சேகரித்து இருக்கிறார்கள். இதுகுறித்து, இந்த படத்தை தயாரிக்க இருக்கும் ஆதித்யா பரத்வாஜ் கூறியதாவது:- ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே அவரிடம் இதுபற்றி தெரிவித்தோம். ஆனால் அவர் இதுகுறித்து பிறகு பேசலாம் என்று சொன்னார். ‘புரட்சி தலைவி’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஸ்டுடியோக்களில் நடைபெறும். ஆரம்பகால திரைப்பட வாழ்க்கை பற்றிய படப்பிடிப்பு சென்னையில் படமாகு...
`மாரி-2′ படத்தில் சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கும் வரலட்சுமி..!

`மாரி-2′ படத்தில் சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கும் வரலட்சுமி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை’, கவுதம் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா’ என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருந்த நிலையில், நடிகை வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமசும், முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணாவும் நடிக்கின்றனர். தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அவரது நண்பர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்க...
கோவா நட்சத்திர விடுதியில் சோனியா காந்தி ஓய்வு…புத்தாண்டு கொண்டாடிய பின் டில்லி திரும்புவார்

கோவா நட்சத்திர விடுதியில் சோனியா காந்தி ஓய்வு…புத்தாண்டு கொண்டாடிய பின் டில்லி திரும்புவார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சென்ற ஆண்டு சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவா சென்றிருந்தார். அப்போது மர்ம கோவா பகுதியில் மக்களிடையே பேசும் போது, மாசற்ற கோவாவை தன் தாயார் சோனியா காந்தி மிகவும் விரும்புவதாக கூறினார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக 19 ஆண்டுகளாக பதவி வகித்த சோனியா காந்தி கடந்த 16-ம் தேதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், சோனியா கோவாவில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வு எடுத்து வருகிறார். தனது நெருங்கிய நண்பர்களுடன் கடந்த 26-ம் தேதி கோவா சென்ற இவர் புத்தாண்டு கொண்டாடிய பிறகு வீடு திரும்புவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்ற பிறகு கோவாவில் ஓய்வு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது....
ஜெயலலிதா நினைவு தினத்தில் இருந்து சசிகலா மவுன விரதம்: தினகரன் பேட்டி

ஜெயலலிதா நினைவு தினத்தில் இருந்து சசிகலா மவுன விரதம்: தினகரன் பேட்டி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக டி.டி.வி தினகரன் இன்று காலை பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். அவரை சந்தித்து விட்டு சிறை வளாகத்தில் செய்தியாளர்களை தினகரன் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு சசிகலாவை சந்தித்து ஆசீர்வாதம் வாங்குவதற்காக வந்தேன், வாங்கிவிட்டேன். எதிர்கால திட்டங்களை எடுத்து கூறினேன், அனுமதி அளித்தார். ஜெயலலிதா நினைவு நாளில் இருந்து சிறையில் சசிகலா மவுனவிரதம் இருக்கிறார். ஜெயலலிதா மரணத்தில் எவ்வித தவறும் நடக்கவில்லை, பொய் பிரசாரம் செய்கிறார்கள். மக்களாலும் தொண்டர்களாலும் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆட்சி, அதிகாரம் இருப்பதால் நீடிக்கிறார்கள். கட்சியில் இருந்து ஒருவரை நீக்க பொதுச்செயலாளருக்கே அதிகாரம் இருக்கிறது. எப்போது எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக...
தினகரன் ஆதரவாளர்கள் 46 பேர் அதிரடி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். நடவடிக்கை

தினகரன் ஆதரவாளர்கள் 46 பேர் அதிரடி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். நடவடிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க. கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் அ.தி.மு.க. வில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சாமி (மேலூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர்), துரை.தனராஜன் (உசிலம்பட்டி தொகுதி பொதுக்குழு உறுப்பினர், சேடபட்டி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்) மகேஸ்வரி ரவி (பொதுக் குழு உறுப்பினர், திருமங...
எம்ஜிஆர் பட டீசரை ஜனவரியில் பிரதமர் மோடி வெளியிட கோரிக்கை..!

எம்ஜிஆர் பட டீசரை ஜனவரியில் பிரதமர் மோடி வெளியிட கோரிக்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
காமராஜ் திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக மறைந்த தமிழக முதலவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்படுகிறது. 1967 ஆம் ஆண்டு தமிழகத்தை அதிர்ச்சியிலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்திய நிகழ்வு எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதாவால் சுடப்பட்ட சம்பவம். எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்காக அந்த சம்பவம் தத்ரூபமாகப் படமாக்கப்பட்டது. மேலும் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி, அன்றைய திரைப்பட இயக்குனர்கள் பி.ஆர்.பந்துலு, கே.சங்கர் ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டன. இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆராக சதீஷ், எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், பி.ஆர்.பந்துளுவாக Y.G.மகேந்திரன், ஜானகி அம்மாவாக ரித்விகா, எம்.ஜி.சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, மற்றும் வையாபுரி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை,...
தென்மாவட்டங்களில் இருந்து வந்த ரசிகர்களுக்கு கிடா வெட்டி கறி சோறு போட ஆசை ஆனால் சைவ மண்டபம் என்பதால் முடியவில்லை – ரஜினி

தென்மாவட்டங்களில் இருந்து வந்த ரசிகர்களுக்கு கிடா வெட்டி கறி சோறு போட ஆசை ஆனால் சைவ மண்டபம் என்பதால் முடியவில்லை – ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 3-வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அதற்கு முன்னதாக ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, மதுரை என்றால் வீரத்திற்கு அடையாளம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்த போது அர்ச்சகர் தன்னிடம் என்ன நட்சத்திரம் என்று கேட்டார். அப்போது எனக்கு  பிறந்தநாள், நட்சத்திரம், கோத்திரம் என எதுவுமே தெரியாது. அதையடுத்து எனக்கு அருகில் இருந்தவர் பெருமாள் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து விடுங்கள் என்று கூறினார். பிறகு தான் தெரிந்தது எனது நட்சத்திரம் பெருமாள் நட்சத்திரம் தான். மதுரை, சேலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வந்துள்ள உங்களுக்கு கிடா வெட்டி கறி சோறு படைக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் ரா...