சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

திரைப்படங்கள்

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்சி’

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்சி’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘கீ’, ‘கலகலப்பு-2’ படங்களை தொடர்ந்து ஜீவா தற்போது ‘கொரில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ராஜு முருகன் இயக்கத்தில் அவர் அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு ‘ஜிப்சி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜீவா நடிப்பில் ‘கலகலப்பு-2’ படம் வருகிற 9-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து காலீஸ் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் ‘கீ’ படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், ஜீவா தற்போது, சாம் ஆண்டன் இயக்கத்தில் ‘கொரில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷாலிணி பாண்டே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜீவா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகியது. இந்த படத்தை ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்க இருக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயார...
குறும்பட இயக்குனரின் ஹாரர் படத்தில் நயன்தாரா..!

குறும்பட இயக்குனரின் ஹாரர் படத்தில் நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சமூக வலைத்தளங்களை கலக்கிய ‘லட்சுமி’ மற்றும் ‘மா’ குறும்படங்களை இயக்கிய இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார் சில மாதங்களுக்கு முன்பாக ‘லட்சுமி’ என்ற குறும்படம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு பக்கம் ஆதரவும் மற்றொரு பக்கம் எதிர்ப்பும் ‘லட்சுமி’ குறும்படத்திற்கு அமைந்தது. கலவையான விமர்சனத்தை எதிர்க்கொண்டாலும் மக்களிடையே அதிகமாக சென்றடைந்தது. இந்த குறும்படத்தை சர்ஜுன் என்பவர் இயக்கி இருந்தார். இவருடைய இயக்கத்தில் ‘மா’ என்ற குறும்படம் சில தினங்களுக்கு முன்பாக வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சர்ஜுன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த புதிய படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படம் முழுக்...
ஷூட்டிங் கடைசி நாளில் பிரபுதேவாவை பரிசு கொடுத்து அசத்திய ‘லக்‌ஷ்மி’பட தயாரிப்பாளர்..!

ஷூட்டிங் கடைசி நாளில் பிரபுதேவாவை பரிசு கொடுத்து அசத்திய ‘லக்‌ஷ்மி’பட தயாரிப்பாளர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லக்‌ஷ்மி’ படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த பரிசால் நடிகர் பிரபு தேவா பிரமிப்பாகி இருக்கிறார். ஒரு சில பரிசுகள் அவற்றின் ஆடம்பரங்களை வைத்தே பெரிதாக மதிப்பிடப்படும். ஆனால் ஒரு சில மட்டுமே அவற்றின் உயிரோட்டத்தால் விலை மதிப்பில்லாததாக மதிக்கப்படும். அப்படி லக்‌ஷ்மி படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் திகைப்புடன் இருந்தார் பிரபுதேவா. பிரமோத் பிலிம்ஸ் ப்ரதீக் சக்ரவர்த்தி, ஷ்ருதி நல்லப்பா பிரபுதேவாவுக்கு ஒரு ஓவியத்தை பரிசளித்தார்கள். வழக்கமாக கடைசி நாள் ஷூட்டிங் எப்போதுமே கொஞ்சம் எமோஷனலாக அமையும், அதோடு இந்த நெகிழ்வான நிகழ்வும் கூடுதலாக அமைந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர் ப்ரதீக் சக்ரவர்த்தி கூறும்போது, ‘உணர்வுகளும், பிரியாவிடையும் லக்‌ஷ்மியில் ரொம்பவே மிகுந்திருந்தது. பிரபுதேவா முழு படப்பிடிப்பிலும் எங்களுக்கு ரொம்பவே ஆதரவாக இருந்தார். அவர் மனதுக்கு மிகவும் நெ...
அஜித்துக்கு  ‘விஸ்வாசம்’ ஜோடியாக நயன்தாரா..!

அஜித்துக்கு ‘விஸ்வாசம்’ ஜோடியாக நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அஜித் நடிக்க இருக்கும் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு வருகிற 22-ந்தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்கும் சிவா, 4-வது முறையாக அஜித்துடன் இணைகிறார். இந்த படத்தில் இளமை தோற்றத்தில் அஜித் நடிக்கிறார், வடசென்னை தாதாவாக வருகிறார், என்று தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. என்றாலும், இது பற்றி இயக்குனர் இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் ஜோடி கீர்த்திசுரேஷ் என்று முதலில் கூறப்பட்டது. அடுத்து ஆத்மிகா, ஷரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அஜித்துடன் ‘ஏகன்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்கிறார் நயன்தாரா....
சிவா மனசுல புஷ்பா இசைவிழாவில்  நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி அளிக்கிறார் நடிகர் ரித்திஷ்..!

சிவா மனசுல புஷ்பா இசைவிழாவில் நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி அளிக்கிறார் நடிகர் ரித்திஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவில் 100 நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிதியுதவி! சிவா மனசில புஷ்பா... விரைவில் வரவிருக்கும் அரசியல் பரபரப்பு படம் இது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் புதன் கிழமை சென்னையில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட தமிழ் திரையுலகின் அத்தனை முன்னணி பிரபலங்களையும் பங்கேற்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் படத்தின் இயக்குநர் - ஹீரோ - தயாரிப்பாளர் வாராகி. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சம், நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 100 நலிந்த கலைஞர்களுக்கு அந்த மேடையிலேயே கணிசமான நிதி உதவி வழங்குவதுதான். பெரிய தயாரிப்பாளர்கள், பெரிய பேனர் படங்களின் நிகழ்ச்சிகளில் கூட செய்யாத மிகப் பெரிய நிதி உதவி இது. தொகை எவ்வளவு என்பதை ஒரு சஸ்பென்சாக வைத்திருக்கிறார் வாராகி. நிதி உதவியுடன் அவர்கள் அனைவருக்கும் பிரமாதமான அசைவ விருந்து அளிக்கவும் தயாரிப்பாளர் வா...
களவாணி 2, K2 ஒரே பெயரில் இரு படங்கள்..!

களவாணி 2, K2 ஒரே பெயரில் இரு படங்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
2010ம் ஆண்டு விமல் ஓவியா நடிப்பில் A.சற்குணம் இயக்கத்தில் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த "களவாணி" திரைப்படம் பலரின் வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெற்றது. அதன் பின்பு சுரேஷ் இயக்கத்தில் விமல் நடித்த "எத்தன்" படத்தைத் தயாரித்து வெளியிட்டு வெற்றி கண்டது. தற்போது பூணம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் "வதம்" படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. மே மாதம் இப்படம் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் முக்கிய நடிகர் நடிகையர் நடிக்க "களவாணி 2" என்ற படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. "களவாணி 2" படத்திற்கான படத்தலைப்பின் உரிமையை ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பெற்றுள்ளது. இப்படத்தின் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தய...
டப்பிங் பணிகள் தொடங்கிய ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

டப்பிங் பணிகள் தொடங்கிய ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஹரஹர மஹாதேவகி' படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, `கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இந்த இரு படங்களையும் ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நாயகன், நாயகியாக கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா நடிக்கின்றனர். அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்தில் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பாலமுரளி பாலா இசையமைக்கிறார். தருண் பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள பிரபல டப்பிங் ஸ்டியோவில் இன்று பூஜை போட்டு அதற்கான வேலைகளில் மும்முரமாக படக்குழுவினர் ஈடுபட...
சிவகார்த்திகேயன் வெளியிட்ட விமலின் ‘களவாணி-2’ பட அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் வெளியிட்ட விமலின் ‘களவாணி-2’ பட அறிவிப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2010-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘களவாணி’. சற்குணம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விமல் நாயகனாக நடித்திருந்தார். பிக்பாஸ் மூலம் பிரபலமாகி இருக்கும் நடிகை ஓவியா இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விமலின் திரையுலக வாழ்க்கையை புதிய பாதைக்கு திருப்பிய ‘களவாணி’ படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், தற்போது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘களவாணி-2’ படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். `கே-2' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திலும் விமல் - ஓவியா இணைந்து நடிக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா காஞ்சனா-3 படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்த தற்போது ‘களவாணி-2’ படத்தில் நடித்து வர...
400 க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’!

400 க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் படம் என்றாலே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது. அதிலும் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்தில் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படம் வித்தியாசமான கான்சப்ட் கொண்ட படம் என்பதால், அப்படம் மீது ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலகினரும் ஆர்வமாக இருக்கிறார்கள். விஜய் சேதுபதி முதல் முறையாக ஒரே படத்தில் பலவிதமான கெட்டப்புகளில் தோன்றும் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படம் தமிழகத்தில் மட்டும் 400 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தரமான படங்களை வெளியிட்டு வரும் கிளாப்போர்ட் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் உரிமையாளர் வி.சத்யமூர்த்தி கூறுகையில், “இது வரை நான்   'ஒரு நல்லநாள் பாத்து சொ...
ஏஆர் முருகதாஸ் வெளியிட்ட ஜருகண்டி பர்ஸ்ட் லுக்..!

ஏஆர் முருகதாஸ் வெளியிட்ட ஜருகண்டி பர்ஸ்ட் லுக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் ஜெய் நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 'கலகலப்பு 2' படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில் 'பார்ட்டி' படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை அடுத்து நடிகர் ஜெய் 'எத்தன்' படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் இயக்கத்தில் 'நீயா 2' என்ற படத்திலும், அறிமுக இயக்குனர்களான ஷியாம் மற்றும் பிரவின் ஆகியோர் இணைந்து இயக்கவுள்ள 'மாங்கல்யம் தந்துனானே னா' என்ற படத்திலும், இயக்குனர் பிச்சுமணி இயக்கும் 'ஜருகண்டி' படத்திலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மற்றும் மாடல் அழகியான ரெபா மோனிகா ஜான் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் ஜெய் மற்றும் பல திரை வட்டாரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'பார்ட்டி' படத்தில் கீர்த்தி என்ற காதாபாத்திரத்தில் இணைந்துள...