புதன்கிழமை, ஜூலை 22
Shadow

நடிகர்கள்

பிச்சை எடுக்கவா மலேசியா கலைவிழா… நடிகர் சங்க  டிரஸ்ட் பதவியை ராஜினாமா செய்து எஸ்.வி.சேகர் காட்டமான கடிதம்

பிச்சை எடுக்கவா மலேசியா கலைவிழா… நடிகர் சங்க டிரஸ்ட் பதவியை ராஜினாமா செய்து எஸ்.வி.சேகர் காட்டமான கடிதம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சங்க கட்டடத்தை கட்டுவதற்காக நிதி திரட்ட மலேசியாவில் விழா நடத்தியது நடிகர் சங்கம். இந்த விழா இப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசருக்கு நடிகர் எஸ்.வி.சேகர் காட்டமான கடிதம் எழுதி இருக்கிறார்.   திரு. நாஸர் தலைவர் ​ மற்றும் நிர்வாகிகள் ​ தென்னிந்திய நடிகர் சங்கம். வணக்கம். நம் சங்க தேர்தல் முடிந்தபின் என்னை நடிகர் சங்க டிரஸ்டிக்களில் ஒருவனாக நியமித்து என்னுடைய அறிவுரை,ஆலோசனைகள்,வழி நடத்துதல் தேவை என கேட்டுக்கொண்டீர்கள். ஆனால் ஒரு வருடத்தில் பல மாற்றங்கள். கையெழுத்திடுவதற்கு மட்டும் டிரஸ்டி என்ற நிலை வந்த போது நான் பல மெயில்கள் அனுப்பியதற்கு எந்த பதிலும் அளிக்காமல் எனக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினீர்கள். என் பதில் கடிதத்தில் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. குறிப்பாக நம் நடிகர் சங்கம் 5 கிரவுண்டு அளவி...
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் ‘மஹாவீர் கர்ணா’ ..!

ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் ‘மஹாவீர் கர்ணா’ ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் 'மஹாவீர் கர்ணா' ..! விக்ரம் நடிப்பில் `ஸ்கெட்ச்' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 12-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அடுத்ததாக விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்' படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்' இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், விக்ரம் அடுத்ததாக ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு `மஹாவீர் கர்ணா' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை நியூயார்க்கை சேர்ந்த யுனிடெட் பிலிம் கிங்டம...
மதுரையில் முதல் மாநாடு – ரஜினி கட்சியின் பெயர், கொடி குறித்து ராகவா லாரன்ஸ் தகவல்

மதுரையில் முதல் மாநாடு – ரஜினி கட்சியின் பெயர், கொடி குறித்து ராகவா லாரன்ஸ் தகவல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினிகாந்தின் கட்சி பெயர், கொடி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்ததை தொடர்ந்து மன்ற நிர்வாகிகள் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மதுரையில் தலைமை நற்பணி மன்றம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ரஜினிகாந்தின் 68-வது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா அழகர் கோவிலில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராகவா லாரன்ஸ், திரைப்பட தயாரிப்பாளர் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினர். மன்றத்தில் தீவிரமாக பணியாற்றியவர்களுக்கு தையல் எந்திரம், வேட்டி - சேலை, சில்வர் பானைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3...
ரஜினி-கமல் இருந்தும் ரசிகர்கள் ஆர்வம்  குறைந்ததால் காத்துவாங்கிய மைதானம்…!

ரஜினி-கமல் இருந்தும் ரசிகர்கள் ஆர்வம் குறைந்ததால் காத்துவாங்கிய மைதானம்…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
ரஜினி-கமல் இருந்தும் ரசிகர்கள் ஆர்வம் குறைந்ததால் காத்துவாங்கிய மைதானம்... சொதப்பலில் முடிந்ததா ஸ்டார் விழா...!? தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்ட மலேசியாவில் நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் உட்பட பெரும்பாலான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். வழக்கம்போல நடிகர்கள் அஜீத், விஜய், சிம்பு, சந்தானம், ஜெய் உட்பட சிலர் கலந்து கொள்ளவில்லை. நட்சத்திர ஆடல் பாடல் விழாவுக்கு முன்னதாக நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. விழா நடந்த புக்கிஜாலி மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் அமரலாம். ஆனால், கிரிக்கெட் போட்டிகளின்போது பெரும்பாலான கேலரிகளும் ரசிகர்கள் இல்லாமல் காலியாகவே இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் இருவரும் அரசியல் கட்சி துவங்கப்போவதாக ...
மீண்டும் விஜய் ஜோடியான கீர்த்திசுரேஷ்… யோகிபாபுவுக்கு உயரும் தனி மவுசு..!

மீண்டும் விஜய் ஜோடியான கீர்த்திசுரேஷ்… யோகிபாபுவுக்கு உயரும் தனி மவுசு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
`மெர்சல்' படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்திற்கான முதல் போட்டோஷீட் ஏ.வி.எம். ஸ்டூடியோஸில் நடந்தது. அதில் நடிகர் விஜய் கலந்து கொண்டிருந்தார். விஜய்யின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டாகி வந்த நிலையில், கீர்த்தி சுரேஷீம் போட்டோஷீட்டில் கலந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து கீர்த்தி சுரேஷிடம் கேட்ட போது, விஜய்யுடன் மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். முருகதாஸ் ரொம்பவும் அமைதியானவர். அவருடனும், ஏ.ஆர்.ரஹ்மானுடனும் பணியாற்றுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார். மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் 62 படத்தில் யோகி பாபு முன்னணி காமெடியனாக ஒப்பந்தம் செய்யப...
ரஜினி ஒரு கிங்மேக்கர்… அவரை யாரும் ஜெயிக்க முடியாது…  முதல்வர் யோகமில்லை… அருகில் இருப்பவர்களால் அவருக்கு ஆபத்து – கன்னட ஜோதிடர் ஆருடம்

ரஜினி ஒரு கிங்மேக்கர்… அவரை யாரும் ஜெயிக்க முடியாது… முதல்வர் யோகமில்லை… அருகில் இருப்பவர்களால் அவருக்கு ஆபத்து – கன்னட ஜோதிடர் ஆருடம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினி முதல்வராக முடியாது: கன்னட ஜோதிடர் கணிப்பு ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி பிரபல கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் கூறியதாவது:- ரஜினிகாந்த் மகர ராசிக்காரர். சிம்ம லக்கனம் பொருந்தியவர். அவருக்கு துர்தரா யோகம் உள்ளது அதன்படி அவரை யாரும் எதிர்த்து நின்று வெற்றி பெற முடியாது. ஆனால் அருகில் இருப்பவர்கள் மூலம் அவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவரது ராசிப்படி வருகிற எம்.பி. தேர்தலில் போட்டியிட்டால் 3 முதல் 5 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவரது ஜாதகத்தில் கால சர்ப்ப தோ‌ஷம் உள்ளது. எனவே எந்த உயரத்திற்கு சென்றாலும் அந்த தோ‌ஷம் ஒருவரை கீழே இழுத்துக் கொண்டு வந்துவிடும். எனவே ரஜினிகாந்த் தன்னை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கக்கூடாது. கட்சி தலைவராக மட்டுமே இருப்பது நல்லது. ஒரு கிங் மேக்கராகவே அவர் இருக்க வேண்டும். அவர் கூறும் நபரையே முத...
மலேசியாவில் வெளியிட்ட ரஜினியின் அதிகபட்ச ஆசை தமிழக மக்களை நன்றாக வாழ வைப்பதுதானாம்..!

மலேசியாவில் வெளியிட்ட ரஜினியின் அதிகபட்ச ஆசை தமிழக மக்களை நன்றாக வாழ வைப்பதுதானாம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்டு காலி இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கலையரங்கம், சிறிய தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடனம், நடிப்பு பயிற்சி கூடங்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான அறைகள் போன்றவை இங்கு அமைய உள்ளன. இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். கட்டிட நிதி திரட்டுவதற்காக ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மேலும் நட்சத்திர கலை விழாக்கள் நடத்தி நிதி திரட்டப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர். அதன்படி மலேசியாவில் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலை விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்று (6-ந்தேதி) இந்த விழா தொடங்கியது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த்-கமலஹாசன...
திரை உலக முப்பெரும் விழா: எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்தார் விஜயகாந்த்

திரை உலக முப்பெரும் விழா: எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்தார் விஜயகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடார்பாளார் யூனியன் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ் ஆனந்தன் பி.ஆர்.ஓ. ஆன 60-வது ஆண்டு நிறைவு, பி.ஆர்.ஓ. யூனியன் பதிவு செய்யப்பட்ட 25 ஆண்டுகள் ஆகியவை முப்பெரும் விழாவாக சென்னையில் நடந்தது. இந்த விழாவில் எம்.ஜி.ஆருடன் பணியாற்றியவார்களுக்கு விருது வழங்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் வி.பி.துரைசாமி, சவுகார் ஜானகி, வாணிஸ்ரீ, ஷீலா, ரேவதி, ரமாபிரபா, சச்சு, குட்டிபத்மினி, காஞ்னா, ஏ.சகுந்தலா, ஜெயசித்ரா, சாரதா, வெண்ணிறஆடை நிர்மலா, வைஜெயந்தி மாலா, கவிஞர் முத்துலிங்கம், ஆரூர்தாஸ், லதா உள்ளிட்டவர்களுக்கு பதக்கம் அணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர். பல்கலை கழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலையை விஜயகாந்த் திறந்து வைத்தார். நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் முன்னிலை வகித்தார். ...
கமல்ஹாசன் வீட்டில் போலீஸ்..!

கமல்ஹாசன் வீட்டில் போலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கமல்ஹாசன் வீட்டில் போலீஸ் நடிகர் கமல்ஹாசன் மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகிறார். தான் விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் அதற்கு முன்னோட்டமாக மையம் விசில் என்ற செயலியையும் வெளியிட்டுள்ளார். வார இதழ் ஒன்றில் கமல்ஹாசன் எழுதி வரும் தொடரில் இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை குறிப்பிட்டதற்காக இந்து அமைப்புகள் கமல்ஹாசனை தாக்கிப் பேசி வந்தனர். தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக அமைதியாக இருந்த கமல்ஹாசன் நேற்று ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி குறித்து, சுயமாக வளர்ந்த சுயேச்சை ஒரு ஓட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை பட்டுவாடா செய்துள்ளார். டோக்கனுக்கு விலை போய்விட்டார்கள் ஆர்.கே.நகர் வாக்காளர்கள். இது ஜனநாயகத்துக்கு வீழ்ச்சி என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தினகரனும் எதிர்வினையாற்றியிருந்தார். வாக்காளர்களை பிச்சைக்காரர்கள...
பலூன் படத்தால்ரூ.1.5கோடி நஷ்ட புகார்… ஜெய்யை சிக்க வைத்தாரா அஞ்சலி..!?

பலூன் படத்தால்ரூ.1.5கோடி நஷ்ட புகார்… ஜெய்யை சிக்க வைத்தாரா அஞ்சலி..!?

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ஜெய் மீது புகார் ரூ.1.5 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு ‘பலூன்’ திரைப்பட தயாரிப்பாளர்கள் நந்தகுமார், அருண் பாலாஜி ஆகியோர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:- எங்களுடைய ‘பலூன்’ திரைப்படம் திட்டமிட்டதற்கு மாறாக, 9 மாதங்கள் தாமதமாக வெளியானது. இதற்கு முக்கிய காரணம் நடிகர் ஜெய். இந்த படத்தின் நாயகனாக நடித்த அவர் சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை. ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. இதனால் படவெளியீடு தள்ளிப்போனது. டப்பிங்கிற்கு கூட சரியாக ஒத்துழைக்கவில்லை. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டது. கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்தபோது, நாங்கள் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற அளவுக்கு நடந்து கொண்டார். இங்கு 20 நாள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு எல்லா ஏற்பாடுகளும் செய்து இருந்தோம். ஆனால் ஜெய் வரவில்லை. இதனால் ரூ.30 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. அஞ்சலிக்...