செவ்வாய்க்கிழமை, ஜூன் 9
Shadow

நடிகைகள்

சிலம்பம் கற்கும் தேவயானி!

சிலம்பம் கற்கும் தேவயானி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள், வீடியோ
    சிலம்பம் கற்கும் தேவயானி! கொரானா பரவலை தடுக்க உலகம் முழுதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. பள்ளி கல்லூரிகள் காலவரையறை இல்லாமல் மூடப்பட்ட நிலையில் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். திரைத்துறை முற்றிலும் முடங்கி இருப்பதால் தொழிலாளர்கள், நடிகர் நடிகைகள் பணிகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார்கள. ஒருசிலர் தினமும் ஏதாவது ஒரு வீடியோ போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகையும் பள்ளி ஆசிரியருமான தேவயானி இந்த ஊரடங்கு நேரத்தில் தன் மகள்களுடன் சிலம்பம் கற்று வருகிறார். அவர் சிலம்பம் கற்றுகொள்ளும் வீடியோ தற்போது வைரல் ஆகி உள்ளது.  ...
பெப்சிக்கு அரிசி மூட்டைகள் வழங்கிய தயாரிப்பாளர், நடிகை..!

பெப்சிக்கு அரிசி மூட்டைகள் வழங்கிய தயாரிப்பாளர், நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
      சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகள் அளித்த "மாநாடு" தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பார்வதி நாயர்! கொரோனாவால் உலகமே தன் இயல்பான வாழ்க்கையை நிறுத்திக் கொண்டு அவரவர் வீடுகளில் அடைந்து கிடக்கிறோம். மக்களை மகிழ்விக்கும் திரைத்துறை தொழிலாளர்கள் பலரும் கடுமையான வாழ்வாதார சிக்கலில் அவதி படுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய திரையுலகில் பலரும் பெப்சிக்கு உதவி வருகிறார்கள். சினிமா பெப்சி தொழிளாளர்களின் குடும்பங்கள் இந்த வேலையில்லாத நாட்களைக் கடந்து வர சிறு உதவியாக 50 அரிசி மூட்டைகளை (25 கிலோ) ஃபெப்சிக்கு வழங்கினார் "மாநாடு" தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி . அதே போல நடிகை பார்வதி நாயரும் 1500 கிலோ அரிசி மூட்டைகள் வழங்கினார். நேற்று நடிகர் சூரி, இயக்குனர் பாரதிராஜா ஆகியோரும் அரிசி மூட்டைகளை வழங்கினார்கள்....
கொரானாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய பாலிவுட் பாடகி!

கொரானாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய பாலிவுட் பாடகி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    கொரானாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய பாலிவுட் பாடகி! பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர், கடந்த மாதம் வெளிநாட்டுக்கு சென்று திரும்பினார். அதன்பிறகு அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்படத் தொடங்கின. தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியதை பொருட்படுத்தாமல், உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் அடுத்தடுத்து 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதில் ஒரு விருந்தில், எம்.பி.க்கள், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, உத்தரபிரதேச மாநில சுகாதார மந்திரி ஜெய்பிரதாப் சிங் உள்ளிட்ட மூத்த அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர். இதற்கிடையே, கனிகாகபூருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால், அவர் கடந்த மாதம் 20-ந் தேதி, லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த அரசியல்வாதிகள் அனை...
மெழுகுவர்த்தி ஏந்திய ரஜினி… குத்துவிளக்கேற்றிய மோடி..!

மெழுகுவர்த்தி ஏந்திய ரஜினி… குத்துவிளக்கேற்றிய மோடி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  பிரதமர் மோடியின் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து இரவு சரியாக 9 மணிக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்குகள் மெழுகுவர்த்திகள் மற்றும் டார்ச் லைட்டுகளை மக்கள் ஏற்றினர். இதனால் தமிழகம் முழுவதும் மின்சார விளக்குகள் அணைக்கப்பட்டு அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிர்ந்தது. மேலும் தமிழகத்தை பொருத்தவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நயன்தாரா உட்பட பல பிரமுகர்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றினார்கள். பிரதமர் மோடி தன் வீட்டில் குத்துவிளக்கு ஏற்றினார். இந்திய பிரபலங்கள் ரத்தன் டாடா, சச்சின், சிரஞ்சீவி உட்பட பலரும் இந்த நிகழ்வில் பங்கு பெற்றனர்....
பெப்சிக்கு 20 லட்சம் நிதி கொடுத்த நயன்தாரா… சுவாரஸ்ய பின்னணி..!

பெப்சிக்கு 20 லட்சம் நிதி கொடுத்த நயன்தாரா… சுவாரஸ்ய பின்னணி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  பெப்சிக்கு 20 லட்சம் நிதி கொடுத்த நயன்தாரா... சுவாரஸ்ய பின்னணி..! உலகையே அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று பல லட்சம் மக்களை பாதித்து இருக்கும் கொரானா வைரஸ் பாதிப்பால் மனித குலமே ஆட்டம் கண்டுள்ளது. இந்த சிக்கலில் உலகின் பல நாடுகள் கடுமையான ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைந்துள்ளது. இந்த சிக்கலில் தமிழ் திரையுலகமும் முற்றிலும் முடங்கி உள்ளது. திரைத்துறை சங்கங்கள் இணைந்துள்ள பெப்சி உதவி கேட்டு அறிக்கை வெளியிட்டது. அதன் பேரில் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உட்பட சிலர் பணமாகவும் அரிசி மூட்டைகளாகவும் கொடுத்தனர். இந்த நிலையில் வந்த நிதியும், பொருட்களும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொடுப்பதற்கு போதுமானதாக இல்லை எனவே மீண்டும் நிதி கேட்கபட்டது. தமிழ் திரையுலகில் பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள்...
கொரானா தடுப்பு பணிக்காக நர்ஸ் ஆக மாறிய நடிகை!

கொரானா தடுப்பு பணிக்காக நர்ஸ் ஆக மாறிய நடிகை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    கொரானா தடுப்பு பணிக்காக நர்ஸ் ஆக மாறிய நடிகை! உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி உயிர்பலிகளை வாங்கி வரும் கொரானாவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். நாளுக்கு நாள் தொற்று அதிகமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவதால் மருத்துவ பணியாளர்கள் பலருக்கும் பணிச் சிரமம் ஏற்படுகிறது. இதனால் மருத்துவ பணியாளர்களின் தேவை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் பேன் (fan) என்ற படத்தில் நடித்தவர் ஷிஹா மல்ஹோத்ரா. இவர் டெல்லியில் உள்ள வர்தாமன் மஹாவீர் மெடிக்கல் காலேஜில் நர்சிங் படிப்பு படித்து டிகிரி பெற்றவர். திரைத்துறை வாய்ப்பு காரணமாக மருத்துவ துறை பணியை விட்டுவிட்டு நடிக்க வந்தார். இந்த நிலையில் கொரானா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற மீண்டும் தன்னை மருத்துவ ...
நடிகர் கமல் தனிமைபடுத்தப்பட்டாரா அரசு ஒட்டிய கொரானா ஸ்டிக்கரால் பரபரப்பு!

நடிகர் கமல் தனிமைபடுத்தப்பட்டாரா அரசு ஒட்டிய கொரானா ஸ்டிக்கரால் பரபரப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    நடிகர் கமல் தனிமைபடுத்தப்பட்டாரா அரசு ஒட்டிய கொரானா ஸ்டிக்கரால் பரபரப்பு! உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி பல லட்சம் மக்களை தாக்கி பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி மிக வேகமாக பரவி வரும் கொரானா பரவல் தமிழகத்திலும் தன் கோர முகத்தை காட்டி வருகிறது. வெளி நாடுகளில் இருந்து சமீபத்தில் ஊர் திரும்பிய அனைவரும் தங்களை தாங்களே தனிமை படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது. காரணம் அவர்கள் மூலமாகவே கொரானா தொற்று அதிக அளவில் பரவும் வாய்ப்புகள் இருப்பதால் இந்த நடைமுறைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து வெளி நாடுகளில் இருந்து சமீபத்தில் தமிழகம் திரும்பிய திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களை தாங்களே தனிமை படுத்தி கொண்டுள்ளனர். இயக்குனர் மணிரத்னம் மகன் நந்தனும் சமீபத்தில் லண்டனில் இருந்து சென்னை திரும்பியதால் வீட்டில் தனிமைபடுத்திக் கொ...
குழந்தைகள் பசியை போக்க 7.5 கோடி நன்கொடை கொடுத்த ஹாலிவுட் நடிகை!

குழந்தைகள் பசியை போக்க 7.5 கோடி நன்கொடை கொடுத்த ஹாலிவுட் நடிகை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலீனா ஜோலி கொரோனாவால் குழந்தைகள் உணவின்றித் தவிக்கும் சூழலைத் தவிர்க்கும் பொருட்டு 7.5 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் சீனாவில் தீவிரமடைய தொடங்கிய கொரோனா வைரஸ் வேகமாக உலக நாடுகள் முழுவதும் பரவியுள்ளது. தென் கொரியா, ஜப்பான் என மெல்ல பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உலகத்தில் 5 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் இதுவரை 23300 பேருக்கு மேல் இறந்துள்ளனர். வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு உலகம் முழுவதும் மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர். இதனால் தினப்படி கூலிக்கு வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலீனா ஜோலி கொரோனாவால்...
லண்டனில் இருந்து திரும்பியதால் தன்னைத் தானே தனிமைபடுத்திக் கொண்ட மணிரத்னம் – சுஹாசினி மகன்

லண்டனில் இருந்து திரும்பியதால் தன்னைத் தானே தனிமைபடுத்திக் கொண்ட மணிரத்னம் – சுஹாசினி மகன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
    லண்டனில் இருந்து திரும்பியதால் தன்னைத் தானே தனிமைபடுத்திக் கொண்ட மணிரத்னம் - சுஹாசினி மகன்! இயக்குனர் மணிரத்னம்-சுஹாசினி தம்பதியின் மகன் நந்தன், கடந்த ஐந்து நாட்களாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் இவ்வாறு இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சுஹாசினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணாடி அறையில் தனிமைப்படுத்திக் கொண்ட தனது மகனுடன் உரையாடுவதை அவர் வீடியோவாக எடுத்துள்ளார். அதில் தனது மகன் கடந்த 18ந் தேதி லண்டனில் இருந்து வந்ததாகவும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.   https://twitter.com/khushsundar/status/1241557165514444800?s=19 மேலும் நந்தன் கூறுகையில், தற்போது 5 ...
ஹாலிவுட் நடிகையும், நடிகரையும் கொரானா வைரஸ் தாக்கியது!

ஹாலிவுட் நடிகையும், நடிகரையும் கொரானா வைரஸ் தாக்கியது!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  உலகம் முழுதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரானா வைரஸ் தாக்கத்துக்கு ஹாலிவுட் நடிகையும், நடிகர் ஒருவரும் தப்பவில்லை. குவாண்டம் ஆப் சோலஸ், டாம் குரூஸ் நடித்த ஒபிலிவியான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஓல்கா குரிலென்கோ. இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதே போல் சூப்பர் ஹீரோ படங்களான ‘தோர்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்’ படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் இர்டிட்ரிஸ் எல்பா தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கான மருத்துவ சிகிச்சைகள் எடுத்து வருவதாகவும் கூறியிக்கிறார்கள். இதையடுத்து ஹாலிவுட் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளது. கண்ணுக்கு தெரிந்த எதிரியை எப்படியும் சமாளித்து விடலாம் கண்ணுக்குத் தெரியாத இது போன்ற வைரஸ் தாக்கத்தை எப்பட...