வெள்ளிக்கிழமை, ஜூன் 5
Shadow

நடிகைகள்

ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா

ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயான பின்பு மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். ‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் தனது சினிமா பிரவேசத்தை தொடங்கினார். இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஜோதிகா நடிப்பில் ‘நாச்சியார்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக மணிரத்தினத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் அவர் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்தநிலையில் வித்யா பாலன் நடித்துள்ள ‘தும்ஹரி சுளு’ என்ற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் திருமணமான நடுத்தர வயதுப் பெண்ணான வித்யா பாலனின் குறிக்கோளும், ரேடியோ ஜாக்கி ஆகி சாதிப்பதும் தான் கதையாகும். வித்தியாபாலன் நடித்துள்ள வேடத்தில் ஜோதிகா நடிப்பார் என்றும் இந்தப் படத்தை ராதா மோகன் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஜோதிகா, பிரகாஷ் ராஜ் நடித்த மொழ...
தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
‘மகாபிரபு, ஏய், சாணக்யா, சண்டமாருதம்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய சரத்குமார் – இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மீண்டும் ‘பாம்பன்’ என்ற படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். இதில் சரத்குமார் வித்தியாசமான வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இந்த கூட்டணியில் வரலட்சுமி சரத்குமார் இணைந்திருக்கிறார். அப்பாவுடன் இணைந்து நடிப்பது மிகவும் உற்சாகமாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றும், படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றும் வரலட்சுமி சரத்குமார் கூறியிருக்கிறார். எஸ்.எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.கே.சங்கரலிங்கம் ‘பா...
அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் -கமலை சீண்டுகிறாரா கவுதமி..!

அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் -கமலை சீண்டுகிறாரா கவுதமி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
ஆண்டாள் கோவிலுக்கு நடிகை கவுதமி  வந்தார். அங்கு திருப்பாவை பாடல்களைப்பாடி ஆண்டாளை தரிசனம் செய்தார். பின்னர் அவர்  கூறியதாவது:- ஆண்டாளின் பக்தையான நான் அவரை தரிசிக்க இங்கு வந்தேன். புற்றுநோயைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை. இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்றால் உயிர் வாழ இயலும். மன தைரியம் மிகவும் அவசியம். இதற்கு நான்தான் சாட்சி. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகம் வர வேண்டும். அரசுகள் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். நடிகர்கள் முதலில் அவர்களது கட்சியின் பெயர், கொள்கைகள், திட்டங்களை அறிவிக்கட்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் நம்பிக்கை வரும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக...
அங்கம் தெரியும் கவர்ச்சி போஸ் கொடுத்தது ஏன் ரகுல் பிரீத்திசிங்

அங்கம் தெரியும் கவர்ச்சி போஸ் கொடுத்தது ஏன் ரகுல் பிரீத்திசிங்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத்திசிங். சமீபத்தில் இவருடைய கவர்ச்சி படம் ‘மேக்ஸிம்’ ஆங்கில பத்திரிகை அட்டையில் வெளியானது. இது தென்இந்திய படஉலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து ரகுல்பிரீத்திசிங் அளித்த பேட்டி... “மேக்ஸிம் ஆங்கில புத்தக அட்டை படத்தில் இடம் பெறும் வாய்ப்பு யாருக்கும் எளிதாக கிடைத்து விடாது. அந்த இதழுக்கு நான் கவர்ச்சி போஸ் கொடுத்துவிட்டதாக தென்இந்தியாவில் தான் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இந்தி படஉலகில் இது பெரிய வி‌ஷயமே இல்லை. ‘அய்யாரி’ இந்தி படத்தில் நான் நடித்திருப்பதால் தான் இந்த வாய்ப்பு தேடி வந்தது. இந்தி சினிமாவில் நடித்து வரும் தீபிகா படுகோனே, ராதிகா ஆப்தே, பிரியங்கா சோப்ரா உள்பட பல நடிகைகள் இந்த பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கிறார்கள். நடிகைகள் தங்கள் உடலை நேர்த்தியாக வைத்து இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த இ...
கமி‌ஷனர் அலுவலகத்தில் ஜோதிகா மீது புகார்

கமி‌ஷனர் அலுவலகத்தில் ஜோதிகா மீது புகார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘நாச்சியார்’. இதில் ஜோதிகா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஜோதிகா பேசும் வசனம் ஒன்று ஏற்கனவே சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், இன்று மற்றொரு வசனம் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியின் பிரசார அணி தலைவர் காளிகுமார், சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- பாலா இயக்கியுள்ள நாச்சியார் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நடிகை ஜோதிகா ஒரு காட்சியில் பேசும் வசனத்தில் கோவிலாக இருந்தாலும், குப்பை மேடாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான் என்று கூறுகிறார். இந்த வசனம் இந்து ஆலயங்களை அவமதிக்கும் விதத்திலும், இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய வசனத்தை உடன...
கோயிலும் குப்பைமேடும் ஒன்னுதான் நாச்சியார் வசனத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜோதிகா..!

கோயிலும் குப்பைமேடும் ஒன்னுதான் நாச்சியார் வசனத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜோதிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தொடர்ந்து இயக்குனர் பாலா சர்ச்சைக்குறிய வசனங்களையே நாச்சியார் படத்தில் வெளியிட்டு வருகிறார். நாச்சியார் நடத்தின் முதல் டீசரில் ஜோதிகா ஆபாசமான வார்த்தை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்திய நிலையில் இன்று வெளியான அடுத்த டீசரில் அனைத்து மதங்களையும் கேவலப்படுத்தும் விதத்தில் வசனம் வைத்திருக்கிறார். இதையும் ஜோதிகாவே பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.   கோயிலாயிருந்தாலும், குப்பை மேடா இருந்தாலும் எங்களுக்கு ஒன்னுதான் என்று போலீஸ் அதிகாரி வேஷத்தில் ஜோதிகா பேசுவது போல காட்சி வைத்திருக்கிறார்.   அனைத்து மத கோயில்களும் குப்பை மேடு என்கிறாரா இயக்குனர் பாலா... அதே போல மத வழிபாட்டுத்த்லங்களையும் கேலியாக சித்தரிக்கிறார். இப்படி சர்ச்சைகளில் படத்தை ஓடவைக்க பாலா முயற்சிக்கிறாரா...     https://youtu.be/5UwA1DkfPA4...
படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்த சன்னிலியோன் குதிரை சவாரி..!

படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்த சன்னிலியோன் குதிரை சவாரி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது தமிழில் நடிக்கும் வீரமா தேவி படத்தின் படப்பிடிப்பில் படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தி உள்ளார். வடிவுடையான் அடுத்து இயக்கும் படம் ‘வீரமா தேவி’ இதில் இந்தி கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்கிறார். சரித்திர கதையாக உருவாகும் இது பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. இந்த படத்தில் சன்னி லியோன் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில், ‘வீரமா தேவி’ படப்பிடிப்பு தொடங்கியது. இதில் சன்னிலியோன் குதிரை சவாரி செய்யும் காட்சி படமாக்கப்பட்டது. அவர் குதிரை மீது சிறிதும் பயமில்லாமல் உட்கார்ந்து வேகமாக வலம் வந்த காட்சி படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்தது....
பாலியல் தொல்லை புகார்… அவதூறு வழக்கு தொடருவேன் பதறும் அமலாபால்..!

பாலியல் தொல்லை புகார்… அவதூறு வழக்கு தொடருவேன் பதறும் அமலாபால்..!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
நடிகை அமலா பால், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலதிபர் ஒருவர் மீது காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்தார். அதன் பின் அந்த தொழிலதிபரைக் காவல் துறையினர் கைது செய்தனர். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அமலா பால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "ஜனவரி 31ஆம் தேதி சென்னையின் ஒரு டான்ஸ் ஸ்டுடியோவில் நான் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த ஒருவர் என்னை அணுகி, நடன நிகழ்ச்சியை பற்றி ஒரு சில முக்கிய விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று கூறினார். மலேசியாவில் பிப்ரவரி 3ஆம் தேதி நடக்கும் விழாவுக்கு பிறகு அவருடன் இரவு உணவில் கலந்து கொள்ள அழைத்தார். அப்படி என்ன விஷேசமான டின்னர் என நான் அவரை குறுக்கு கேள்வி கேட்டபோது, அவர் அலட்சியமாக உனக்கு தெரியாதா ? என்ற பாணியில் பேசினார். நாங்கள் பேச...
‘மா’ பட நடிகை ‘கனி கஸ்தூரியின்’ கவர்ச்சி

‘மா’ பட நடிகை ‘கனி கஸ்தூரியின்’ கவர்ச்சி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், குடியரசு தினத்தன்று வெளியான குறும்படம் ‘மா’ இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி அனிக்கா 10 வது படிக்கும் போதே கர்ப்பமாகும் துணிச்சலான கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த குறும்படத்தில் சாதாரண அம்மாவாக நடித்தவர் மலையாள நடிகை கனி கஸ்தூரி. இவரின் கவர்சிப்புகைப்படங்கள் வெளியாகி இவரா… அவர்…! என ரசிகர்களையே குழம்பும் அளவிற்கு இருக்கிறது....
வதந்திகளில் உண்மையில்லை – நடிகை ரேகா விளக்கம்

வதந்திகளில் உண்மையில்லை – நடிகை ரேகா விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  கடலோரக் கவிதைகள், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர் போன்ற படங்களில் நாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா. இவர் தற்போது ஜெயப்பிரதா, பார்த்திபன், ரேவதி, நாசர், அனுஹாசன் ஆகியோருடன் இணைந்து `கேணி' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இவரது மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவிருப்பதாக சமீபத்தில் சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் வதந்தி கசிய விடப்பட்டது. இதனை மறுத்து நடிகை ரேகா இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார். அதில் "மதிப்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, என் மகள் சினிமாவில் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக அறிகிறேன். அந்த செய்தியில் எள்ளளவும் உண்மையில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என் மகள் உயர்கல்வி படிப்பதற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும், சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வ...