சனிக்கிழமை, மே 30
Shadow

நடிகைகள்

அங்கம் தெரியும் கவர்ச்சி போஸ் கொடுத்தது ஏன் ரகுல் பிரீத்திசிங்

அங்கம் தெரியும் கவர்ச்சி போஸ் கொடுத்தது ஏன் ரகுல் பிரீத்திசிங்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத்திசிங். சமீபத்தில் இவருடைய கவர்ச்சி படம் ‘மேக்ஸிம்’ ஆங்கில பத்திரிகை அட்டையில் வெளியானது. இது தென்இந்திய படஉலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து ரகுல்பிரீத்திசிங் அளித்த பேட்டி... “மேக்ஸிம் ஆங்கில புத்தக அட்டை படத்தில் இடம் பெறும் வாய்ப்பு யாருக்கும் எளிதாக கிடைத்து விடாது. அந்த இதழுக்கு நான் கவர்ச்சி போஸ் கொடுத்துவிட்டதாக தென்இந்தியாவில் தான் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இந்தி படஉலகில் இது பெரிய வி‌ஷயமே இல்லை. ‘அய்யாரி’ இந்தி படத்தில் நான் நடித்திருப்பதால் தான் இந்த வாய்ப்பு தேடி வந்தது. இந்தி சினிமாவில் நடித்து வரும் தீபிகா படுகோனே, ராதிகா ஆப்தே, பிரியங்கா சோப்ரா உள்பட பல நடிகைகள் இந்த பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கிறார்கள். நடிகைகள் தங்கள் உடலை நேர்த்தியாக வைத்து இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த இ...
கமி‌ஷனர் அலுவலகத்தில் ஜோதிகா மீது புகார்

கமி‌ஷனர் அலுவலகத்தில் ஜோதிகா மீது புகார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘நாச்சியார்’. இதில் ஜோதிகா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஜோதிகா பேசும் வசனம் ஒன்று ஏற்கனவே சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், இன்று மற்றொரு வசனம் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியின் பிரசார அணி தலைவர் காளிகுமார், சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- பாலா இயக்கியுள்ள நாச்சியார் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நடிகை ஜோதிகா ஒரு காட்சியில் பேசும் வசனத்தில் கோவிலாக இருந்தாலும், குப்பை மேடாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான் என்று கூறுகிறார். இந்த வசனம் இந்து ஆலயங்களை அவமதிக்கும் விதத்திலும், இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய வசனத்தை உடன...
கோயிலும் குப்பைமேடும் ஒன்னுதான் நாச்சியார் வசனத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜோதிகா..!

கோயிலும் குப்பைமேடும் ஒன்னுதான் நாச்சியார் வசனத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜோதிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தொடர்ந்து இயக்குனர் பாலா சர்ச்சைக்குறிய வசனங்களையே நாச்சியார் படத்தில் வெளியிட்டு வருகிறார். நாச்சியார் நடத்தின் முதல் டீசரில் ஜோதிகா ஆபாசமான வார்த்தை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்திய நிலையில் இன்று வெளியான அடுத்த டீசரில் அனைத்து மதங்களையும் கேவலப்படுத்தும் விதத்தில் வசனம் வைத்திருக்கிறார். இதையும் ஜோதிகாவே பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.   கோயிலாயிருந்தாலும், குப்பை மேடா இருந்தாலும் எங்களுக்கு ஒன்னுதான் என்று போலீஸ் அதிகாரி வேஷத்தில் ஜோதிகா பேசுவது போல காட்சி வைத்திருக்கிறார்.   அனைத்து மத கோயில்களும் குப்பை மேடு என்கிறாரா இயக்குனர் பாலா... அதே போல மத வழிபாட்டுத்த்லங்களையும் கேலியாக சித்தரிக்கிறார். இப்படி சர்ச்சைகளில் படத்தை ஓடவைக்க பாலா முயற்சிக்கிறாரா...     https://youtu.be/5UwA1DkfPA4...
படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்த சன்னிலியோன் குதிரை சவாரி..!

படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்த சன்னிலியோன் குதிரை சவாரி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது தமிழில் நடிக்கும் வீரமா தேவி படத்தின் படப்பிடிப்பில் படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தி உள்ளார். வடிவுடையான் அடுத்து இயக்கும் படம் ‘வீரமா தேவி’ இதில் இந்தி கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்கிறார். சரித்திர கதையாக உருவாகும் இது பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. இந்த படத்தில் சன்னி லியோன் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில், ‘வீரமா தேவி’ படப்பிடிப்பு தொடங்கியது. இதில் சன்னிலியோன் குதிரை சவாரி செய்யும் காட்சி படமாக்கப்பட்டது. அவர் குதிரை மீது சிறிதும் பயமில்லாமல் உட்கார்ந்து வேகமாக வலம் வந்த காட்சி படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்தது....
பாலியல் தொல்லை புகார்… அவதூறு வழக்கு தொடருவேன் பதறும் அமலாபால்..!

பாலியல் தொல்லை புகார்… அவதூறு வழக்கு தொடருவேன் பதறும் அமலாபால்..!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
நடிகை அமலா பால், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலதிபர் ஒருவர் மீது காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்தார். அதன் பின் அந்த தொழிலதிபரைக் காவல் துறையினர் கைது செய்தனர். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அமலா பால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "ஜனவரி 31ஆம் தேதி சென்னையின் ஒரு டான்ஸ் ஸ்டுடியோவில் நான் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த ஒருவர் என்னை அணுகி, நடன நிகழ்ச்சியை பற்றி ஒரு சில முக்கிய விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று கூறினார். மலேசியாவில் பிப்ரவரி 3ஆம் தேதி நடக்கும் விழாவுக்கு பிறகு அவருடன் இரவு உணவில் கலந்து கொள்ள அழைத்தார். அப்படி என்ன விஷேசமான டின்னர் என நான் அவரை குறுக்கு கேள்வி கேட்டபோது, அவர் அலட்சியமாக உனக்கு தெரியாதா ? என்ற பாணியில் பேசினார். நாங்கள் பேச...
‘மா’ பட நடிகை ‘கனி கஸ்தூரியின்’ கவர்ச்சி

‘மா’ பட நடிகை ‘கனி கஸ்தூரியின்’ கவர்ச்சி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், குடியரசு தினத்தன்று வெளியான குறும்படம் ‘மா’ இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி அனிக்கா 10 வது படிக்கும் போதே கர்ப்பமாகும் துணிச்சலான கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த குறும்படத்தில் சாதாரண அம்மாவாக நடித்தவர் மலையாள நடிகை கனி கஸ்தூரி. இவரின் கவர்சிப்புகைப்படங்கள் வெளியாகி இவரா… அவர்…! என ரசிகர்களையே குழம்பும் அளவிற்கு இருக்கிறது....
வதந்திகளில் உண்மையில்லை – நடிகை ரேகா விளக்கம்

வதந்திகளில் உண்மையில்லை – நடிகை ரேகா விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  கடலோரக் கவிதைகள், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர் போன்ற படங்களில் நாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா. இவர் தற்போது ஜெயப்பிரதா, பார்த்திபன், ரேவதி, நாசர், அனுஹாசன் ஆகியோருடன் இணைந்து `கேணி' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இவரது மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவிருப்பதாக சமீபத்தில் சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் வதந்தி கசிய விடப்பட்டது. இதனை மறுத்து நடிகை ரேகா இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார். அதில் "மதிப்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, என் மகள் சினிமாவில் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக அறிகிறேன். அந்த செய்தியில் எள்ளளவும் உண்மையில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என் மகள் உயர்கல்வி படிப்பதற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும், சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வ...
ஷாலினியுடன் தாய்லாந்து பறக்கும் ஜீவா

ஷாலினியுடன் தாய்லாந்து பறக்கும் ஜீவா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி வரும் படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சமீபத்தில் பாண்டிச்சேரியில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. அடுத்ததாக தாய்லாந்தில் ஒர மாதம் வரை படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறது. அதற்காக ஜீவா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் தாய்லாந்து செல்லவிருக்கின்றனர். அங்கு சுமார் ஒரு மாதம் வரை படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்குகிறார் டான் சாண்டி. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார்....
சைதன்யாவுக்கு ரொம்ப நல்ல மனது. அவரால் சண்டை வராது. கலாட்டா செய்வது நான்தான்- சமந்தா

சைதன்யாவுக்கு ரொம்ப நல்ல மனது. அவரால் சண்டை வராது. கலாட்டா செய்வது நான்தான்- சமந்தா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகரும் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவுக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாவில் நடித்து வருகிறார். திருமண வாழ்க்கை குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:- “திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று எனது கணவரோ, அவரது வீட்டில் உள்ளவர்களோ தடை விதிக்கவில்லை. அதனால்தான் நான் தொடர்ந்து நடிக்கிறேன். கணவரும், மனைவியும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தால் விரும்பிய தொழிலில் நீடிப்பதில் எந்த கஷ்டமும் இருக்காது. சினிமா என்பது கவர்ச்சி உலகம். அதை தெரிந்துகொண்டுதான் இந்த துறைக்கு வந்தேன். கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பது தவறு அல்ல. ஆனால் கவர்ச்சியை தேவை இல்லாமல் படத்தில் திணித்தால் அது பிடிக்காது. திருமணத்துக்கு பிறகும் ஓய்வு இல்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த வாழ்க்கை எனக்கு பிடித்து இருக்க...
சன்னி லியோனுக்கு எதிராக கமிஷனர் அலுவலகத்தில் மனு

சன்னி லியோனுக்கு எதிராக கமிஷனர் அலுவலகத்தில் மனு

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
குழந்தைகள், பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராகவும், ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்கு எதிராகவும் போராடும் சமூக ஆர்வலரான எமி என்ற இனோச் மோசஸ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மனு ஒன்றை அளித்தார்.   அதில், “பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் ‘வீரமாதேவி’ படப்பிடிப்பில் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் கலந்து கொள்ள உள்ளார். இதுகுறித்து அந்த பகுதியில் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. சன்னிலியோன் இணையதளத்தில் வெளியாகும் ஆபாச படங்கள் குழந்தைகள் மனதை கெடுக்கும் வகையில் உள்ளது. ‘வீரமாதேவி’ படம் தமிழ் கலாசாரத்தை சொல்லும் படம் என்று கூறப்படுகிறது.   கவர்ச்சியாக நடிக்கக்கூடிய சன்னிலியோன் படப்பிடிப்பில் கலந்து கொண்டால் கவர்ச்சியாக நடிப்பார். அதை காண அங்கு அதிக அளவில் இளைஞர்கள் கூடுவார்கள் எனவே இந்த படப்பிடிப்பி...