நடிகைகள்
நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு… இந்த பெயரில் புதுப்படம்..!
மக்களுடைய மிகப்பெரிய கேள்வி நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு
“நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு” இது தமிழகத்தின் அனைத்து தரப்பட்ட மக்கள் மனதிலும் இருக்கக் கூடிய மிகப் பெரிய கேள்வி
பல அரசியல் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் என தொடர்ந்து தமிழ்நாடு சிக்கல்களை சந்தித்து வரும் வேளையில், இதனை பிரதிபலிக்கும் வகையில் “நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு” என்ற திரைப்படம் தயாராகி வருகிறது.. இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி நல்.செந்தில்குமார் இயக்கி வருகிறார்.
அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு கிராமத்தில் இதுவரை எந்த தலை முறையும் சந்திக்காத, பார்க்காத பல்வேறு மர்மமான சம்பவங்களும், பிரச்சனைகளும் அடுத்தடுத்து தொடர்ந்து நடக்கின்றது. ஒரு கட்டத்தில் பிரச்சனைகள் தீவிரமடைந்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களுக்கு...
பரபரப்பான படப்பிடிப்பில் விஜய் ஆண்டனியின் தமிழரசன்..!
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ” தமிழரசன் “
இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார்.
பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாபு யோகேஸ்வரன்
இப்படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் சென்னையில் நடைபெற்றது. விஜய் ஆண்டனி – ரம்யா நம்பீசன் சம்மந்தப் பட்ட காட்சிகள் மற்றும் விஜய் ஆண்டனி வில்லன் சோனு சூட் மோதும் ஆக்ஷன் காட்சிகள் படமானது.
அத்துடன் 1000 கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டக் காட்சிகளை 4காமிராக்களை கொண்டு ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினார். இந்த காட்சிகள் திரை...
முதலமைச்சர் கோப்பையை தட்டிச் சென்ற கென்னடி கிளப் பட கபடி வீராங்கனைகள்..!
சுசீந்திரனின் 'கென்னடி கிளப்' படத்தில் பெண் கபடிவீரர்கள் நடிக்கிறார்கள். இவர்கள் நிஜவிளையாட்டிலும் 12லட்சம் ரூபாய் தட்டிசென்றனர். படப்பிடிப்பிற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையைத் தட்டிச் சென்ற கபடி வீராங்கனைகள்.
பெண்கள் கபடி மையமாக வைத்து உருவாகி வரும் படம் 'கென்னடி கிளப்'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, சசி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்கள் படப்பிடிப்பை முடித்து கொண்டு படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினர். மேலும், இயக்குனர் சுசீந்திரனின் சொந்த ஊரான பழனிக்கு அருகில் உள்ள கணக்கம்பட்டியிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விழுப்புரத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்ந...
திருவண்ணாமலையில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக உதவிய கௌதமி!
திருவண்ணாமலையில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக உதவிய கௌதமி!
LIFE AGAIN INDIA நிறுவனத்தின் நிறுவனர் திருமதி .கௌதமி அவர்கள் சமீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளில் ஏழை - எளிய குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்ய சென்றிருந்தார்.
வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவி செய்வதே அவர் தனது மிகப்பெரிய சாதனையாக கருதுகிறார்.
திருவண்ணாமலையில் உள்ள பள்ளி கல்வியாளர்களிடம் நீண்ட நேரம் குழந்தைகளுக்கு தேவையான வருங்கால கல்வி பற்றி கலந்துரையாடி உள்ளார். மேலும் அவர் திருவண்ணாமலையில் கல்வி மையம் ஒன்றை நிறுவி ஏழை குழந்தைகளுக்கு கணக்கு மற்றும் ஆங்கில பாடங்களை ஆசிரியர்களை கொண்டு கற்பிக்க உள்ளார்.
நம் நாட்டின் எதிர்காலமான குழந்தைகளின் வருங்கால கல்விக்காக உதவி செய்ய அவர் காத்திருக்கிறார்....
அபிசரவணன்-வெண்பா ஜோடியின் மாயநதி
லட்சியத்தை அடைய போராடும் மாயநதி
ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன் தயாரித்து இயக்கி வரும் படம் ‘மாயநதி’. இதில் நாயகனாக ‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ ஆகிய படங்களில் நடித்த அபி சரவணன் நடிக்கிறார். காதல் கசக்குதய்யா, ‘பள்ளி பருவத்திலே’ ஆகிய படங்களில் நடித்த வெண்பா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி, தமிழ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி அஷோக் தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘மகள் மீது பாசமும், அதீத நம்பிக்கையும் கொண்ட ஒரு தந்தை, டாக்டராவதையே லட்சியமாகக் கொண்ட ஒரு பெண், இலக்குகள் எதுமின்றி காதலிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்ட ஒரு சராசரி இளைஞன். இவர்களைப் பற்றிய சுவாரசியமான நிகழ்வே ‘மாயநதி’. பதின்ம வயதில் இயல்பாக ஏற்...
இங்லிஷ் பட உலகம் மாதிரி தமிழ் பட உலகம் அழகா மாறிகிட்டே வருது – கண்ணே கலைமானே வசுந்தரா
பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக களமிறங்கி, தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனிக் கதாநாயகியாக கவனம் ஈர்த்தவர் நடிகை வசுந்தரா.
எஸ்.பி.ஜனநாதன், சமுத்திரக்கனி, சீனுராமசாமி என முத்திரை இயக்குநர்களின் கையால் மோதிரக்குட்டு பெற்றவர்.
தற்போது சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படம் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.
தற்போது தான் நடிக்கும் படங்கள், ஏன் இந்த இடைவெளி என்றெல்லாம் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் வசுந்தரா.
‘கண்ணே கலைமானே’ படத்தில் முக்கியமான கேரக்டரை சீனுராமசாமி சார் எனக்கு கொடுத்துள்ளார். எப்பவுமே அவருக்கு பிடித்தமாதிரி இனிமையா, கொஞ்சம் நகைச்சுவையா, அதேசமயம் கொஞ்சம் கடினமான அப்பட்டமான கிராமத்துப் பெண் கேரக்டர் ஒன்று இருக்கும் இல்லையா.? அப்படி ஒரு கேரக்டரில் தான் நான் நடிக்கிறேன்.
இதில் கிராமமும் இல்லாத மிகப்பெரிய நகரமும் அல்லாத ஒரு மீடியமான நகரத்துப் பெண்ணாக ஒ...
ஓவியாவின் 90ml பட டிரைலர் சர்ச்சைகளை மீறி 90 லட்சம் பார்வையாளர்களை தாண்டியது..!
அழகிய அசுரா இயக்கத்தில், எஸ்டிஆர் இசையமைப்பில், ஓவியா, பொம்மு, மசூம், ஸ்ரீ கோபிகா, மோனிஷா, அன்சன் பால், தேஜ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘90 எம்எல்’.
இப்படத்தின் டிரைலர் இரண்டு வாரங்களுக்கு முன்பு யு டியுபில் வெளியாகும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
டிரைலரில் காட்சிகளிலும், வசனங்களிலும் ஆபாசம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
https://youtu.be/Jl14barRz84
படத்தின் டிரைலர்தான் அப்படி இருக்கும். ஆனால், படத்தில் அது மாதிரியான காட்சிகளோ, வசனங்களோ இல்லை என படத்தின் இயக்குனர் அழகிய அசுரா என்கிற அனிதா உதீப் தெரிவித்திருந்தார்.
"அள்ளி குடுத்திருக்கான்... கிள்ளி குடுத்திருக்கான்... புள்ளி தான் வைச்சிருக்கான்" என இரட்டை அர்த்தம் ரொம்பவே பட்டவர்தனமாக வருகிறது
‘18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும்’ என டிரைலரின் ஆரம்பத்தில் எச்சரிக்கை வாசகங்களும் இடம் பெற்ற...
K19 கார்த்தியின் புதுப்படம்..!
கார்த்தி நடிக்கும் புதிய படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள்.
கார்த்தி நடிக்கும் புதிய படம் விரைவில் ஆரம்பமாகிறது. “K19” என்கிற பெயர் சூட்டப்படாத இப்படம், எமோஷன், ஆக்ஷன் கலந்த காமெடி கதையாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக உருவாகவுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு உட்பட ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அனைத்து குடும்பத்தினரிடமும் பெரும் ஆதரவு பெற்ற கார்த்தியின் 'சிறுத்தை', 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய படங்கள் போன்று இப்படமும் அனைவரையும் கவரும் என்று இப்படத்தை S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு இணைந்து தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.
இப்படத்தை பாக்யராஜ்கண்ணன் இயக்குகிறார். காதல், காமெடி என 'ரெமோ' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ...


