புதன்கிழமை, ஜூன் 10
Shadow

சினி நிகழ்வுகள்

சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்

சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சூர்யா, சாய் பல்லவி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், படக்குழுவில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் ஒப்பந்தமாகியிருந்த எடிட்டர் ஜி.கே.பிரசன்னாவுக்கு பதிலாக தேசிய விருது பிரபலம் பிரவீன்.கே.எல் படக்குழுவில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் பிரீத்திசிங் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த் மற்றும் சுத...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம் கண்டனம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம் கண்டனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். மேலும் பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் கொல்லப்பட்டது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் செல்போன் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலவரத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் 13 அப்பாவி மக்கள் உயிர்களை இழந்ததற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு துப்பாக்கி சூட்டிற்கு காரணமான காவல்துறையின...
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்

சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிம்புவை வைத்து படம் எடுத்து சிக்கலில் மாட்ட தமிழ் தயாரிப்பாளர்கள் யாரும் தயாராக இல்லை. மணிரத்னம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்புவுக்கு வேறு படங்கள் எதுவும் இல்லை. ஆனால் கன்னடத்தில் சிம்புவை நடிக்க வைக்க அங்கு இருக்கும் தயாரிப்பாளர்கள் விரும்புகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் வேண்டி நடந்த போராட்டத்தின்போது சிம்பு கர்நாடகாவிடம் கேட்டுத் தான் தண்ணீர் வாங்க வேண்டும் என்று பேசினார். இந்த கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கன்னட சமூக வலைதளங்கள் சிம்புவை பாராட்டி தள்ளின. கர்நாடகாவில் சிம்புவுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அவரை கன்னடத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. தற்போது உருவாகி வரும் கன்னட படங்களிலும் சிம்புவை கவுரவ வேடத்தில் நடிக்க வைக்கவும், பாட வைக்கவும் ஆர்வமாக இருக்கிறார்கள் கன்னட சினிமாக்காரர்கள். ஒரு பாட்டுக்கு பாட வைத்து தங்...
இனிமேல் லேட்டா வரமாட்டேன் – எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்

இனிமேல் லேட்டா வரமாட்டேன் – எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விவேக் - தேவயாணி நடிப்பில் உருவாகி இருக்கும் `எழுமின்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த விழாவில் நடிகர் சிம்பு, விஷால், கார்த்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் சிம்பு பேசியதாவது, பொதுவாகவே நான் டிரைலர், ஆடியோ வெளியீடு போன்ற விழாக்களில் கலந்து கொள்வதில்லை. அதற்கு காரணம் மைக் தான். மைக் கையில் கிடைத்தால் நான் ஏதாவது பேசிவிடுவேன். அது ஏதாவது பிரச்சனையை கிளப்பும். வாழ்க்கையில் ஒருவரை பிடிக்கும் என்று சொல்வதை விட, அவர்களை நாம் பின்பற்றுகிறோம் என்பதை நடைமுறையில் செய்து காட்ட வேண்டும். அப்படி செய்து காட்டுபவர் தான் விவேக். நான் எனது படம் ஒன்றில் ஒரு காமெடியனை அறிமுகம் செய்ய முயற்சி செய்தேன். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் விவேக் சார் தான் உச்சத்தில் இருக்கிறார், அவரை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றார். அந்த நிலையில், விவேக் விட்டுக் கொடு...
விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்

விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித்துடன் இயக்குனர் சிவா 4-வது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்‘. இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்ட தேதியில் படப்பிடிப்பு தொடங்கவில்லை. தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக படப்பிடிப்பு மேலும் தாமதம் ஆனது. வரும் போது வரட்டும். படப்பிடிப்பாவது தொடங்கினால் சரிதான் என்ற மனநிலையில் அஜித் ரசிகர்கள் இருந்தனர். ஐதராபாத்தில் தயாராக இருந்த அரங்கில் தற்போது படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. அஜித், நயன்தாரா உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்று வருகிறார்கள். முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைய இருக்கிறது. அடுத்து 2-ம் கட்டமாக மும்பையிலும், அடுத்து சென்னையிலும் படப்பிடிப்பை வேகமாக நடத்த உள்ளனர். மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்து தீபாவளிக்கு விஸ்வாசத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்பதில் சிவா உறுதியாக இருக்கிறார். அதன்படி ...
வருத்தத்தில் இருக்கும் காஜல் அகர்வால்

வருத்தத்தில் இருக்கும் காஜல் அகர்வால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கையில் இருந்த ஒரு படமும் இன்னும் துவங்காததால் வருத்தத்தில் இருக்கிறார் காஜல் அகர்வால். தமிழில் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானவர் காஜல். தொடர்ந்து முன்னணி நடிகையாக அஜித், விஜய், சூர்யா, விஷால், கார்த்தி என்று ஒரு ரவுண்டு வந்தார். ஆனால் இப்போது அவருக்கு படங்களே இல்லை. குயின் இந்தி பட ரீமேக்காக உருவாகும் `பாரிஸ் பாரிஸ்' தமிழ் படத்தில் ஒப்பந்தமானார் காஜல் அகர்வால். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இதனால் வருத்தத்தில் இருக்கும் காஜல் அகர்வால் ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கிறார். இதற்கு முன்பு முன்னணி ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று கட்டுப்பாடு விதித்திருந்த காஜல் அந்த கட்டுப்பாட்டை உடைத்துவிட்டார். இனி இளம் ஹீரோக்கள் படங்களிலும் நடிக்க இருக்கிறார். அதேபோல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் கேட்டு வருகிறார்....
நாடகமேடை போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

நாடகமேடை போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நித்திலன் இயக்கத்தில் விதார்த் - பாரதிராஜா - டெல்னா டேவிஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `குரங்கு பொம்மை'. இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த டி.ஜே.முரளி இயக்கியிருக்கும் குறும்படம் நாடகமேடை. சமூகத்தில் மனிதம் மீது மனிதன் கொண்டுள்ள மனிதாபிமானத்தை பிரதிபலிக்கும் விதமாக உருவாகியிருக்கும் இந்த குறும்படத்தை கலை இயக்குனர் ஏழுமலை ஆதிகேசவன் தயாரித்திருப்பதடன், அவர்களின் ஊர்நாடு திரைக்களம் மூலம் வெளியிட்டுள்ளார். இது அவரின் தயாரிப்பில் வெளிவரும் ஆறாவது குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பு தவிர்த்து படத்தில் கலை இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல படங்களில் பணியாற்றி வருகிறார். மனிதனின் உதவும் உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற கதைக்களம் கொண்ட இந்த குறும்படத்தின் போஸ்டரை தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் ...
சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா?

சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சாமி 2 படத்துக்காக திருநெல்வேலியின் முக்கிய பகுதிகள் காரைக்குடியில் செட் போட்டு படம் பிடிக்கப்படுகிறது. சாமி படத்தின் தொடர்ச்சியாக சாமி-2 படம் உருவாகி வருகிறது. சாமி படத்தின் தொடக்க பாடலான திருநெல்வேலி அல்வாடா பாடல் பிரபலமான ஒன்று. இந்த பாடல் திருநெல்வேலியின் முக்கிய பகுதிகளில் நடப்பதாக இருக்கும். ஆனால் திருநெல்வேலியில் எடுக்கப்படவில்லை. உண்மையில் காரைக்குடியில் செட் போட்டுதான் படம் பிடித்தார்கள். இப்போது இரண்டாம் பாகத்துக்கும் அதே காரைக்குடியில் அதே திருநெல்வேலி பகுதிகளை செட் போட்டு எடுத்து இருக்கிறார்கள். ’டர்ர்ர்ரனக்கா...டர்ர்ர்ரனக்கா...’ என்று தொடங்கும் பாடல் முந்தைய பாக பாடலை விட பெரிய ஹிட் அடிக்கும் என்கிறது படக்குழு.   சாமி-2 படத்தில் முந்தைய பாகத்தில் நடித்த திரிஷா தவிர அனைவருமே நடிக்கிறார்கள். கீர்த்தி சுரேஷும், சூரியும் புது வரவுகள். த்ரிஷா நடிப்பார் என்று நம்பிக்கை தெரிவ...
சினிமா இசையமைப்பாளர் சங்க தலைவரானார் தினா..!

சினிமா இசையமைப்பாளர் சங்க தலைவரானார் தினா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை சினி மியூசிசியன்ஸ் தேர்தல் நடை பெறுவது வழக்கம், அதன்படி நேற்று சென்னை வடபழனியில் அவர்களது யூனியனில் தேர்தல் நடை பெற்றது தலைவர் பதவிக்கு கல்யாண சுந்தரம் மற்றும் தினா இருவரும் போட்டியிட்டனர். அதில் அதிக வாக்குகள் பெற்று இசையமைப்பாளர் தினா தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.. செயலாளர் பதவிக்கு சாரங்கபாணி  -P G வெங்கடேஷ் இருவரும் போட்டிதிட்டதில் சாரங்கபாணி வெற்றி பெற்றார்.. குருநாதன்-  ரங்கராஜன் இருவரும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டதில் குருநாதன் வெற்றி பெற்றார்.. உப தலைவர்களாக  மகேஷ், பாலேஷ், கோபிநாத்சேட், வீரராகவன் இணைசெயலாளர்களாக P.செல்வராஜ் P.v.ரமணன், R.செல்வராஜ் P.பாஸ்கர், ஜோனாபக்தகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.. அதே நேரத்தில் சினி மியூசிசியன்ஸ் யூனியனின் அறக்கட்டளைக்கு நடந்த தேர்தலில் டிரஸ்டிக்கு போட்டியிட்ட ஐந்து பேரில் இசையமைப்பாளர் S.A.ராஜ்கு...
இனிமேல் எனக்கு கட்-அவுட் வேண்டாம் – எழுமீன் விழாவில்  சிம்பு உருக்கம்

இனிமேல் எனக்கு கட்-அவுட் வேண்டாம் – எழுமீன் விழாவில் சிம்பு உருக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள். விழாவில் தேவயானி பேசியதாவது, ‘படத்தில் சிறுவர்கள் அனைவரும் கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். விவேக் மிக அருமையாக நடித்திருக்கிறார். வருகை தந்துள்ள விஷால், கார்த்தி, சிம்புவிற்கு நன்றி. படக்குழுவினருக்கு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார். கார்த்தி பே...