சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

உலகம்

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் உயிரிழப்பு – நார்வேயில் அதிர்ச்சி

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் உயிரிழப்பு – நார்வேயில் அதிர்ச்சி

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் உயிரிழப்பு - நார்வேயில் அதிர்ச்சி கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 94 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 20 லட்சத்தைக் கடந்துள்ளது. இதனால், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாட்டில் உள்ள மருத்துவர்களும் இறங்கியுள்ளனர். சில நாடுகளில் உள்ள தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சோதனை முயற்சி நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், நார்வேயில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் உயிரிழந்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ப்ளூம் பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, நார்வேயில் கொரோனா வைரஸூக்கு எதிரான ஃபைசர் பயோன்டெக் (Pfizer-Bio NTech) என்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த 23 ...
கொரோனா வைரஸ்,  கட்டுப்பாடு எதுவும் இல்லாத உலகின் முதல் நாடு நியூசிலாந்து! 

கொரோனா வைரஸ்,  கட்டுப்பாடு எதுவும் இல்லாத உலகின் முதல் நாடு நியூசிலாந்து! 

helth tips, HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம்
  கொரோனா வைரஸ்,  கட்டுப்பாடு எதுவும் இல்லாத உலகின் முதல் நாடு நியூசிலாந்து! உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் மனித இனத்தை ஆட்டி படைத்து வரும் நிலையில் இன்னும் அமெரிக்கா இந்தியா பிரேசில் உள்பட பல நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் இந்த நிலையில் உலகின் முதல் கொரோனா இல்லாத நாடு என நியூசிலாந்து நாடு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இல்லாத நாடாக அதிகாரபூர்வமாக நியூசிலாந்து நாட்டில் அறிவித்ததை அடுத்து ஊரடங்கு உள்பட அனைத்துக் கட்டுப்பாடுகளும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது கடந்த சில நாட்களாக ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப் படவில்லை என்பதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட சிகிச்சை பெற்று வரவில்லை என்பதால் கொரோனா நோய் இல்லாத நாடு என நியூசிலாந்து அறிவிக்கப்பட்டது மேலும் கொரோனா தொடர்பான கட்டுப்பாடு எதுவும் இல்லாத உலகி...
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி – ஜோ பைடன்

ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி – ஜோ பைடன்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி - ஜோ பைடன் வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் உச்சத்தில் உள்ளது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.‌ இதனிடையே தற்போதைய ஜனாதிபதி டிரம்பைவிட சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பிரச்சனையைக் கையாளுவேன் என்ற பிரசாரத்தின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வருகிற 20-ந்தேதி பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.138 லட்சத்து 811 கோடியாகும். இந்த திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுக்குமானால், இதன் மூலம் ஒவ்வொரு அமெரிக்கரும் தலா 1,400 டால...
வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறும் டிரம்ப்!

வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறும் டிரம்ப்!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
  அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் தோல்வியடைந்தனர். ஆனால், அதிபர் டொனால்டு டிரம்ப் தொடக்கத்தில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்துவந்தார். இதற்கிடையில், தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்...
இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர். ஒரு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அதில் இருந்த நோயாளிகள், ஊழியர்களில் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர் இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 பேரின் உடல்கள்  மீட்கப்பட்ட நிலையில், மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதேபோல் கவர்னரின் அலுவலகம் மற்றும் பல்வேறு வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது...
தற்காலிகமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் சேனல்

தற்காலிகமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் சேனல்

HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம்
தற்காலிகமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் சேனல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கும் நிகழ்வின்போது நாடாளுமன்றம் முன்பு குவிந்த டிரம்ப் ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர் டிரம்ப் தனது சமூக வலைத்தள பதிவுகள் மூலம் தனது ஆதரவாளர்களை வன்முறைக்கு தூண்டியதன் காரணமாகவே நாடாளுமன்ற கலவரம் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனைத்தொடர்ந்து டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் ஜனாதிபதி டிரம்பின் கணக்குகளை முடக்கி வைத்தன. முடக்கப்பட்ட தனது டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததும் டிரம்ப் வன்முறையை தூண்டும் சில பதிவுகளை வெளியிட்டதால் டுவிட்டர் நிறுவனம் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கியது. அதேபோல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் டிரம்பின் கணக்கு, ஜனவரி 20-ந்தேதி வரை (ஜோ பைடன் பதவியேற்பு விழா நடக்கும் நாள்) ம...
கண்டுபிடிக்கப்பட்ட இந்தோனேசியா விமானத்தின் கருப்புப் பெட்டி!

கண்டுபிடிக்கப்பட்ட இந்தோனேசியா விமானத்தின் கருப்புப் பெட்டி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
இந்தோனேசியாவில் 62 பேருடன் மாயமான விமானத்தின் கருப்புப் பெட்டி  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஸ்ரீவிஜயா ஏர் என்னும் விமானச் சேவை நிறுவனம் இந்தோனேசியாவில் உள்நாட்டுச் சேவை மற்றும் சர்வதேச சேவைகளை அளித்து வருகிறது.   இந்நிறுவனத்தின் போயிங் 737 விமானம் நேற்று மதியம் ஜாகர்த்தாவில் இருந்து மேற்கு காலிமாண்டன் மாநிலத்தில் உள்ள போண்டியானக் இன்னும் இடத்துக்கு கிளம்பியது.  அந்த இடத்தை அடைய விமானத்துக்கு 90 நிமிடங்கள் ஆகும். ஆயினும் விமானம் கிளம்பிய 44 நிமிடங்களில் விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.  விமானத்தினுள் அப்போது 56 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் இருந்துள்ளனர்.  காணாமல் போன இந்த விமானத்தைத் தேடும் பணியில் உடனடியாக மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.   இந்நிலையில் ஜாவா கடல் பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் மற்றும் மனித உடல்கள் மீனவர்களிடம் கிடைத்ததால் விமான விபத்துக்குள்ளாகியது உ...
HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க சர்வதேச நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. கொரோனா பாதிப்புகளால் பல நாடுகள் தங்கள் விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன இந்நிலையில், இந்தோனேசியா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்படாமல் இருக்க கோடீசுவரர் ஒருவர் தானும் தனது மனைவியும் பயணிக்கும் ஒரு விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டின் ஜகர்தாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பாலி நகரத்துக்கு தன் மனைவியுடன் செல்ல திட்டமிட்டார். ஆனால் பிற பயணிகளுடன் பயணித்தால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் தான் செல்லவிருக்கும் பயணிகள் விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்துள்ளார். இதற்காக அவர்  ரூ. 6 லட்சம் இந்தோனே...
இங்கிலாந்து ராணிக்கும் அவரது கணவருக்கும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி!

இங்கிலாந்து ராணிக்கும் அவரது கணவருக்கும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
இங்கிலாந்து ராணிக்கும் அவரது கணவருக்கும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரின் கணவர் எடின்பரோ கோமகன் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிரிட்டன் அரசிக்கு தற்போது 94 வயதாகிறது மற்றும் அவரின் கணவர் இளவரசர் பிலப்பிற்கு 99 வயதாகிறது. இவர்கள் இருவரும் தற்போது கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டனில், குறைந்தபட்சம் 1 டோஸ் கொரோனா தடுப்பு மருந்தாவது எடுத்துக்கொண்ட 1.5 மில்லியன் மக்களில் இவர்களும் அடக்கம் என்று கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதில் கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ராணியின் குடும்ப மருத்துவர் இந்த தடுப்பு மருந்து டோஸ் செலுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா காரணமாக, ராணியும்,...
புதிய ஜனாதிபதியின் பதவியேற்பை புறக்கணிக்கும் டிரம்ப்

புதிய ஜனாதிபதியின் பதவியேற்பை புறக்கணிக்கும் டிரம்ப்

HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம்
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3 ந்தேதி நடந்து முடிந்த ஜனாதிபதி  தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  வருகிற 20ந்தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.  அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பைடன் பொறுப்பேற்க உள்ளார். ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறினார்.  இதற்கிடையில், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை நாடாளுமன்றம் மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கடந்த 6ந்தேதி நாடாளுமன்றம் முன் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். ஜனாதிபதி  தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொள்ளாத டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் புகுந்து நடத்திய வன்முறை உலக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவர்களை தடுத்...