தமிழ் சினிமாவில் முதல் முறையாக நவீன தொழில் நுட்பத்தில் உருவாகும் “வெப்பன்”
பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், திரைத்துறையிலும் அத்தொழில்நுட்பத்தால் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹாலிவுட் திரையுலகமே இத்தகைய தொழில்நுட்பத்திற்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியிருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் முதல் முறையாக “வெப்பன்” திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் இரண்டரை நிமிடங்கள் ஓடும் பிளாஷ்பேக் காட்சிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ‘வெப்பன்’ படக்குழு படமாக்கியுள்ளது.
இரண்டரை நிமிட காட்சிகளில் மட்டும் புதிய தொழில்நுட்பத்தை கையாளாமல் முழு படத்தையுமே புதிய முயற்சியாக இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். உலகம் முழுவதும் ஏராளமன ரசிகர்களின் பேவரைட் ஜானர் படங்களாக இருக்கும் ஹாலிவுட் மார்வெல் மற்றும் டிசி கதாபாத்திரங்களைப் போல், நம் கலாச்சாரங்களுக்கு ஏ...









