MOVIES
முதல் முறையாக உலகம் முழுதும் 500 திரையரங்குகளில் விமல் படம் ரிலீஸ்..!
விமல் ஆஷ்னா ஜவேரி நடிக்க சர்மிளா மாண்ட் ரே தயாரிக்கAR.முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் இம்மாதம் 7 ம் தேதி வெளியாகிறது.
இதற்கு முன்பு விமல் நடித்த எந்த படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானதில்லை.
கேரளாவில் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் கூட 100தியேட்டர்களுக்குள் தான் வெளியாகும்..ஆனால் இந்த படம் கேரளாவில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
முதன் முறையாக உலகம் முழுவதும் 500 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
இந்த விஷயம் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப் பட்டுக் கொண்டிருக்கிறது....
உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினியின் 2.0 படம் 500 கோடியை தாண்டியதாம்..!
லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் மாஸாக வெளியானது. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலுடன் ரோபோட்டிக்ஸை இணைத்து சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக வெளியாக ‘2.0’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தியாவில் அதிக பொருட் செலவில் அதிநவீன 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தில், ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘2.0’ திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலகளவிலான பாக்ஸ் ஆபீஸில் ரூ.500 கோடி வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.
உலகளவிலான பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் இணைந்த இந்திய திரைப்படமான ‘2.0’, 12வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு அமீர்கான் நடித்த ’தூம் 3’ படத்திற்கு அடுத்த இடத்தில் ரஜினிகாந்தின் ‘2.0’ திரைப்படம் ...
ஷேக்ஸ்பியரின் நாடகம் சினிமாவாகிறது..!
வில்லியம் ஷேக்ஸ்பியரின் கதைகள் தான் உலக சினிமாவுக்கே இன்று வரை வழி காட்டி.அவரின் கதைக்கு,காட்சிக்கு, கதாபாத்திரங்களுக்கு, வசனத்திற்கு மயங்காதவர்களே கிடையாது.அப்பேற்பட்ட வில்லியம் ஷேக்ஸ்பியரின் உலக பிரசித்தி பெற்ற 'மெக்பெத்' என்ற நாடகம் தென்னிந்தியவிலேயே முதன் முறையாக தமிழில் திரைப்படாமகிறது.
"பகைவனுக்கு அருள்வாய் "என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது .இந்த கதைக்கு திரை வடிவம் கொடுத்து இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார், அனீஸ். இவர் "திருமணம் எனும் நிக்காஹ் "என்ற படத்தை இயக்கியவர் .இந்த கதைக்காக சுமார் மூன்று வருடம் ஆராய்ச்சி செய்து திரை வடிவம் கொடுத்துள்ளார்.
ஃபர்பிள் ப்ரேம்ஸ் (Purple Frames) தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். 96'புகழ் ஷண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
இரண்டு முக்கிய கதாபாத்திரத்தில்...
சீனாவில் மே 2019ல் பிரம்மாண்டமாக ரிலீசாகும் ரஜினியின் 2.0
ஷங்கர் - ரஜினிகாந்த் - அக்ஷய் குமார் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. ரிலீசான 4 நாட்களில் படம் ரூ.400 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. 6 நாட்களில் படத்தின் வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. படத்துக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்த வண்ணமாகவே உள்ளது.
இந்த நிலையில், 2.0 படம் வருகிற மே 2019ல் சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாக இருப்பதாக லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது. 2.0 படத்தின் சீன ரிலீஸ் உரிமையை எச்.ஒய் மீடியோ கைப்பற்றியிருக்கிறது.
சீன மொழில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இந்த படத்தை மொத்தமாக 10,000 திரையரங்குகளில், 57,000 திரைகளில் (47,000 3டி திரைகள்) வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் 3டி-யில் அதிக திரைகளில் வெளியாகும் வெளிநாட்டு படங்களின் பட்டியலில் 2.0 இடம்ப...
கர்ணன் வேடத்துக்காக பயிற்சி எடுக்கும் விக்ரம்
மலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ எனும் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக இயக்கும் படம் ‘மகாவீர் கர்ணா’. மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளாவில் உள்ள ஸ்ரீ பத்மநாபர் கோயிலில் உள்ள மணி ஒன்றைப் படக்குழுவினர் பெற்றுள்ளனர். படத்துக்காக உருவாக்கப்பட உள்ள 30 அடி உயரமுள்ள கர்ணனின் ரதத்தில் இந்தக் கோயில் மணி இடம்பெற உள்ளது.
ஐதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் கனடாவில் இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கும் இந்தப் படம் 32 மொழிகளில் டப் செய்யப்படுகிறது. இந்த படத்துக்காக தனது உடல் எடையை ஏற்றி ஆஜானு பாகுவான தோற்றத்துக்கு மாறி இருக்கும் விக்ரம், குதிரையே...
மீண்டும் பாட வந்த எஸ்.ஜானகி… ரசிகர்கள் உற்சாகம்..!
பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி மீண்டும் ஒரு தமிழ் படத்தில் பாடல் பாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவின் 'நைட்டிங்கேல்' என்று புகழாரம் சூட்டப்படும் எஸ்.ஜானகி, கடந்த 1957ஆம் ஆண்டு 'விதியின் விளையாட்டு' படத்தின் மூலம் அறிமுகமாகி, தனது இனிமையான தனித்துவம் மிக்க குரலால் எண்ணற்ற தென்னிந்திய திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ஒரு மலையாள படத்தில் ‘தாலாட்டு’ பாடல் பாடி, இனி பாடப்போவதில்லை ஓய்வு எடுக்கப்போகிறேன் என அதிரடியாக அறிவித்தார்.
சுமார் 48,000 பாடகளை பாடியுள்ள எஸ்.ஜானகி, 4 தேசிய விருதுகள், 32 மாநில விருதுகளை வென்றுளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஒரியா உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ள எஸ்.ஜானகிக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு 'பத்ம பூஷன்' விருதினை பெற்றார். பாடி அலுத்துவிட்டதாக கூறி, குரலுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறேன். இனி யாரும் தன...
டிச.28ம் தேதி ஆண்டின் கடைசியில் ரசிகர்களை வளைக்க வரும் அதர்வாவின் பூமரங்..!
இயக்குனர் கண்ணன் மற்றும் அவரது ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் 'பூமராங்' படம் டிசம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்துதல் தான் மொத்த குழுவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இயக்குனர் கண்ணன் கூறுகையில், "டிசம்பர் 28ஆம் தேதி பூமராங் படம் வெளியாக இருப்பதால் ஒட்டு மொத்த குழுவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கடந்த ஒரு ஆண்டாகவே குழுவில் அனைவருக்கும் சவாலாக இருந்தது, குறிப்பாக இந்த படத்தில் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்க மிகவும் துல்லியமான முயற்சிகள் எடுத்த அதர்வா முரளிக்கு. இந்த படம் மிகச்சிறப்பாக உருவாக எனக்கு மொத்த குழுவும் பக்க பலமாக இருந்தது ஒரு திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் முடிவில்லாத கடின உழைப்புக்கு இது புத்தாண்டு பரிசாக இரு...
லடாக்கில் ஆபத்தான மலையேறிய ஹரீஷ்கல்யாண்..!
ஹரிஷ் கல்யாண் இளம் தலைமுறையினரின் கனவு கண்ண்னாக மாறி இருக்கிறார். ஆனாலும் அவர் அந்த சாக்லேட் பாய் கதாபாத்திரங்களிலேயே நடிப்பதை விரும்பாமல், ஒவ்வொரு படத்திலும் ஒரு சவாலான கதாப்பாத்தித்தில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து வருகிறார். ஷில்பா மஞ்சுநாத் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் லடாக்கில் நடந்து முடிந்த படப்பிடிப்பு அவருக்கு மறக்க முடியாத அனுபவங்களை வழங்கியிருக்கிறது.
"சில விஷயங்கள் நம் கண்களுக்கு சொர்க்கம் போல காட்சியளிக்கும். ஆனால் அத்தகைய இடங்களுக்கு செல்வது சில ஆபத்தான சவால்களை உள்ளடக்கியது. நம் கற்பனைகளையும் தாண்டிய சவால்கள் அவை. லடாக்கில் படப்பிடிப்பு நடக்கும்போது இதுபோன்ற அனுபவங்கள் எங்களுக்கு இருந்தன" என்று லடாக் படப்பிடிப்பு...


