வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

HOME SLIDER

ராஜீவ் மேனன்- ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘சர்வம் தாளமயம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ராஜீவ் மேனன்- ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘சர்வம் தாளமயம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் 'சர்வம் தாளமயம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. 'அடங்காதே', '4ஜி', 'ஐங்கரன்', 'குப்பத்து ராஜா', '100% காதல்', 'நாச்சியார்' ஆகிய படங்கள் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். 'மின்சார கனவு' மற்றும் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் 3-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ட்ரம்ஸ் வாத்திய கலைஞராக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதற்காக பிரத்யேக பயிற்சி எடுத்து வருகிறார். 9 பாடல்கள் உள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் - ஜி.வி.பிரகாஷ் இருவருமே உறவினர்கள் என்றாலும் இருவரும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ...
ஜனவரியில்தான் ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார்: சத்திய நாராயணராவ் தகவல்

ஜனவரியில்தான் ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார்: சத்திய நாராயணராவ் தகவல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை ஜனவரியில் வெளியிடுவார் என, ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணராவ் கெய்க்வாட் தெரிவித்தார். தருமபுரியில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி இல்லத் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள, நடிகர் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணராவ் கெய்க்வாட் இன்று (புதன்கிழமை) தருமபுரி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், "தன் ரசிகர்கள் மட்டுமன்றி அனைவரின் அன்புக்கும் உரியவராக நடிகர் ரஜினிகாந்த் உள்ளார். அவர் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக நல்லதே செய்வார். டிசம்பர் மாதத்தில் அவரது பிறந்த நாளில் புதிய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட வாய்ப்பில்லை. ஆனால், ஜனவரியில் வெளியிடலாம். ரஜினி அரசியலுக்கு வந்தபின் தமிழக மக்கள் அவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ரஜினியுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போட்டோ ஷூட் நிகழ்ச்சி மீண்டும் ஜனவரியில் நட...
நவ.30 தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் கந்து வட்டி குறித்து முக்கிய முடிவு: ஞானவேல் ராஜா

நவ.30 தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் கந்து வட்டி குறித்து முக்கிய முடிவு: ஞானவேல் ராஜா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  அசோக்குமார் தற்கொலை வழக்கில், இயக்குநர், நடிகர் சசிகுமாருடன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஞானவேல் ராஜா, கந்து வட்டி குறித்து தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்தார் விசாரணை தொடர்பாக தயாரிப்பாளர் சங்க செயலாளர் என்ற முறையில் விளக்கமளிக்க வந்தேன். அசோக்குமார் மரணம் தொடர்பாக விளக்கமளித்தோம், அடுத்தகட்ட விசாரணைக்கு நாளையும் வரவுள்ளோம் அசோக்குமாரையும் அவரது குடும்பத்தினையும் தவறாக பேசியதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எம்.ஜி.ஆர்.காலத்திலிருந்து பைனான்சியர்கள் உள்ளனர் ஆனால் வசூலிக்கும் முறையில் தான் தவறு உள்ளது. வருகின்ற 30-ம்தேதி தயாரிப்பாளர் சங்ககூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. அதில் தயாரிப்பாளர்களிடம் கந்து வட்டி தொடர்பாக கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கவுள்ளோம்.” இவ்வாறு ஞ...
மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் – எழில் கூட்டணி

மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் – எழில் கூட்டணி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் எழில் இயக்குகிறார். இப்படத்தில் நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'யோகி' பாபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால் - எழில் இணையும் இரண்டாவது படம் இது. பெயரிடப்படாத இப்படத்தை துஷ்யந்த் தயாரிக்கிறார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார். முருகன் கதை எழுத ஜோதி அருணாச்சலம் வசனம் எழுத உள்ளார். எழில் இயக்கத்தில் உருவாகும் 12-வது படம் இது என்பது கவனிக்கத்தக்கது. இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது....
மூன்றாவது நாளாக போராட்டக் களத்தில் செவிலியர்கள்..!

மூன்றாவது நாளாக போராட்டக் களத்தில் செவிலியர்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை அண்ணாசாலையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் 2-ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்து செவிலியர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று போராட்டத்தில் செவிலியர்களின் பிரதிநிதிகளை அழைத்து அமைச்சர் விஜய பாஸ்கரன் தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதாக அதில் பங்கேற்ற செவிலியர்கள் தெரிவித்தனர். மன நிறைவுடன் போராட்டத்தை முடித்துக்கொண்டு, பணிக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளனர். மற்றொரு தரப்பு செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசாணை 191-ஐ வெளியிடும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று முதல் உண்ணாவிரதத்துடன் போராட்டம் நடத்துவத...
“டிக் டிக் டிக்” படத்தின் புதிய அப்டேட்

“டிக் டிக் டிக்” படத்தின் புதிய அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான உருவாகும் `டிக் டிக் டிக்' படத்தின் சிங்கள் வரும் டிசம்பர் 11-ம் வெளியாகிறது. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான உருவாகும் `டிக் டிக் டிக்' படத்தின் சிங்கள் வரும் டிசம்பர் 11-ம் வெளியாகிறது. சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜீஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் ஜெயம் ரவி மகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜபக் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடையே நல்லவரவெற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் சிங்கள் வரும் டிசம்பர் 11-ம் வெளியாக இருப்பதாக இசையமைப்பாளர் இமான் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  ...
பீட்டா-வுகாக நிர்வாண போஸ் கொடுத்த சன்னி லியோன்!

பீட்டா-வுகாக நிர்வாண போஸ் கொடுத்த சன்னி லியோன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பான பீட்டா-வின் விளம்பரம் ஒன்றிற்கு பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியல் நிர்வாணமாக காட்சியளித்துள்ளனர். இந்த விளம்பரத்தில் ‘Ink, Not Mink! Be Comfortable in Your Own Skin, and Let Animals Keep Theirs.’ எனும் வாசகம் குறிக்கப்பட்டுள்ளது. அதாவது, மனிதரின் தோலைப் போல் மிருகங்களின் தோலும் மதிப்புமிக்கது, நாம் நிம்மதியாக வாழ விரும்புவது போல் அவற்றையும் வாழ விடுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றினையும் அவருடன் இணைந்து பீட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக அசைவத்தினை கடைப்பிடிக்க வேண்டும் என அரைநிர்வாணமாக புகைப்படம் ஒன்றில் சன்னிலியோன் தோன்றியது குறிப்பிடத்தக்கது!...
டிரம்ப் மகளுக்கு சமந்தா ஸ்பெஷல் பரிசு

டிரம்ப் மகளுக்கு சமந்தா ஸ்பெஷல் பரிசு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு தெலங்கானாவில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா நேரில் வந்திருந்தார். அவருக்கு சமந்தா சேலை பரிசளித்தார். தெலங்கானா மாநில கைவினை பொருட்கள் விளம்பர தூதராக இருக்கிறார் சமந்தா. தனது மாநிலத்துக்கு வரும் டிரம்ப் மகளுக்கு பரிசளிக்க எண்ணினார். அதற்கு பொருத்தமான பரிசு பற்றி ஆலோசித்தவர் இறுதியாக கோல்லம்பமா சேலைகளை வழங்க முடிவு செய்தார். கைத்தறியில் இது நெய்யப்படுகிறது. அவரது தேர்வை அரசு அங்கீகரித்ததுடன் தனது பங்காகவும் அதே வகையில் உருவாக்கப்பட்ட பல்வேறு டிசைன் சேலைகளையும் இவாங்காவுக்கு வழங்கியது. இதையடுத்து இவாங்காவுடன் பாரம்பரியமான கோல்லம்பமா சேலைகளும் வெள்ளை மாளிகைக்கு செல்கிறது. நடிப்பு, இல்லற வாழ்க்கையில் சமந்தா கவனம் செலுத்தி வந்தபோதும் கைத்தறி ஆடைகளை விளம்பரப்படுத்தும் தூதராகவும் தனது பங்களிப்பை செய்...
இந்தியா வரும் ஒபாமா பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்…!

இந்தியா வரும் ஒபாமா பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நாளை இந்தியா வரும் ஒபாமா நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். ஒபாமா பவுண்டேஷன் ஏற்பாடு செய்துள்ள டவுன் ஹால் கூட்டத்தில் பங்கேற்கிறார். நாடு முழுவதிலும் இருந்து வரும் மாணவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார். கடந்த 2014  முதல் 2016 வரை பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் 8 முறை சந்தித்து பேசி உள்ளனர்.  ஒபாமா பதவிக்காலம் முடிந்த பின் பிரதமர் மோடியுடன் ஒபாமா சந்தித்து பேசுவது இதுவே முதல் முறை ஆகும். ஒபாமா இந்தியாவிற்கு கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது....
தொழில் நுட்பத்தை விட ஐதராபாத் பிரியாணி தான் உலகபுகழ் பெற்றது – இவான்கா டிரம்ப்

தொழில் நுட்பத்தை விட ஐதராபாத் பிரியாணி தான் உலகபுகழ் பெற்றது – இவான்கா டிரம்ப்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  8-வது உலக தொழில் முனைவோர் மாநாடு தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில்  தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 127 நாடுகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோர்களும், 300 முதலீட்டாளர்களும் பங்கேற்றுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகளும், அதிபரின் ஆலோ சகருமான  இவான்கா டிரம்ப் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவரோடு குழு ஒன்றும் வந்தது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பும், மாநாட்டின் இடையேயும் மோடி- இவான்கா சந்திப்பு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இவான்கா டிரம்புக்கு புகழ்பெற்ற ஐதராபாத் பிரியாணி வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட அவருக்கு அதன் ருசி மிகவும் பிடித்து இருந்தது. இதுகுறித்து இவான்கா கூறியதாவது:- பழமை வாய்ந்த ஐதராபாத் நகரம்   தற்போது தொழில் நுட்பத்தால் மிகவும்...