இந்தியாவில் 10 மருந்துகளில் ஒன்று போலியானது – உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்
இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் 10 மருந்துகளில் ஒன்று குறைபாடு உள்ளது அல்லது போலியானது என உலக சுகாதார அமைப்பு (WHO) கூறி உள்ளது அதாவது இந்த நாடுகளில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 10.5 சதவீதமருந்துகள் போலியானவையாகும்.
உலக சுகாதார அமைப்பில் ஆய்வு அறிக்கை படி இந்த மருந்துகள் நோய்களை குணப்படுத்தவோ அல்லது தடுக்கவோ தவறி விடுகின்றன.ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மலேரியா மற்றும் நிமோனியா போன்ற நோய்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் இறப்புகளுக்கு பொறுப்பாகவும் உள்ளது.
தரக்குறைவான மற்றும் தவறான மருந்துகள் குறிப்பாக மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களை பாதிக்கின்றன, என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர்
டெட்ரோஸ் அத்னோம் கெபிரேயஸ் கூறி உள்ளார்.
2013 ஆம் ஆண்டிலிருந்துஉலக சுகாதார அமைப்பு தரக்குறைவான அல்லது போலியான தயாரிப்புகள் குறித்த 1,500 அறிக்கை...









