இந்து தீவிரவாதம் பற்றிய என் பேச்சால் என்னை சுட்டுக்கொல்லப் பார்க்கிறார்கள் – விவசாயிகள் கூட்டத்தில் கமல் பேச்சால் அதிர்ச்சி
என்னை தீவிரவாதி என முத்திரைகுத்தி சுட்டுக் கொல்லப் பார்க்கிறார்கள் என விவசாயிகள் மாநாட்டில் கமல்ஹாசன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் இந்து தீவிரவாதம் பரவி வருகிறது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். இதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ், தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அகில பாரத இந்துமகாசபா நிகழ்ச்சி மீரட்டல் நடைபெற்றது. அதில் பேசிய இந்து மகாசபா தலைவர், இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசியதற்கு, ‘அவரை சுட்டுக்கொல்ல வேண்டும்‘ என்றும் பேசினார்..
இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த கமல், இந்துத் தீவிரவாதம் இல்லை என்று இனி யாரும் சொல்ல முடியாது என கூறியிருந்தார். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு தமிழக்ததை சேர்ந்த ப...









