வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

2.0 வெற்றி பெற வைத்த மக்களுக்கு “பேட்ட” பட விழாவில் நன்றி சொன்ன ரஜினி..!

2.0 வெற்றி பெற வைத்த மக்களுக்கு ’பேட்ட’ பட விழாவில் நன்றி சொன்ன ரஜினி..!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது,
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் அனைவரும் கைகோர்ப்போம். 2.0 படத்திற்கு உலகளவில் பெரிய வெற்றி கிடைச்சுருக்கு. படத்தை வெற்றி பெற வைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி. 2.0 வெற்றி, அதற்கான பாராட்டு இயக்குநர் ஷங்கர், தயாரிப்பு நிறுவனத்திற்கு உரியது. அந்த படத்தில் வேலை செஞ்ச தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டினால் பத்தாது. 2.0 படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதே கலாநிதி மாறன் தான்.

அந்த படத்தை முடிக்க முடியாம தவிச்ச போது, கலாநிதி தான், எனக்காகவும், ஷங்கருக்காகவும் அந்த படத்தை வாங்கி தயாரித்தார். அந்த படம் வெற்றியடைஞ்ச பிறகும் எனக்கு ரூ.1 கோடி ரூபாய் கொடுத்தார். 2.0 படம் எடுக்க முடிவு செய்த போது, சன் பிக்சர்ஸ் தயாரிக்க முடியாததால் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்தது.

திரும்பவும் தயாரிப்பில் இறங்கிய பிறகு படம் பண்ணலாம்னு சொன்னாங்க. மகிழ்ச்சி, பண்ணலாம்னு சொன்னேன். சில இயக்குநர்களிடம் கதை கேட்டோம். எதுவும் செட்டாகவில்லை. அப்போ கார்த்திக் ஒரு கதை சொன்னது ஞாபகம் வந்தது. அவரிடம் பேசினோம். அவரிடம் கேட்ட போது எனக்கு ரொம்ப பிடிச்சது. அதை தயாரிப்பாளரிடம் சொல்ல சொன்னேன். பின்னர் தான் படம் ஓகே ஆச்சு.


பேட்ட படத்தை தமிழ்நாட்டில் எடுக்க முடியாது. அன்பு தொல்லை. வெளி மாநிலத்தில் பண்ணோம். கார்த்திக் என்னுடைய மிகப்பெரிய ரசிகர். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எடுத்தார்.
சரி வில்லன் கதாபாத்திரத்தை யார் பண்ணுவார் என்று கேட்டேன். விஜய் சேதுபதி பண்ணுவார் என்று கார்த்திக் கூறினார். எனக்கு சந்தேகம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கார்த்திக் சொன்னார். பின்னர் விஜய் சேதுபதி ஒத்துக்கிட்டதாக சொன்னார்.


விஜய் சேதுபதியோட படம் பார்த்திருக்கிறேன். அவர் நல்ல நடிகர். அவர் சாதாரண நடிகன் இல்லை. மகா நடிகன். ஒவ்வொரு ஷாட்டுக்கும் என்ன செய்யனும், எப்படி செய்தால் நல்லா இருக்கும், அப்படி செய்யலாமா, இப்படி செய்யலாமா என்று கேள்வி மேலலே கேள்வி கேட்டு புதுசா யோசிச்சு செய்வார். நல்ல மனிதர், பொறுமையான மனிதர். பேச்சு, சிந்தனை, கற்பனை வித்தியாசமானது. அவர் ஒரு மனநல மருத்துவர் மாதிரி. ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம்.
பிளாஷ்பேக் ஹீரோயினான திரிஷா நடிச்சிருக்காங்க. அந்த கதாபாத்திரம் பண்ண திரிஷாவே தயாராக இருந்தார். சிம்ரனுடன் டூயட் பாடும் போது கூச்சமாக இருந்தது.

சசிகுமாரின் கதாபாத்திரம் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை சிறப்பாக இருக்கும்படியான கதாபாத்திரம். நவாசுதீன் சித்திக் எது செய்தாலும் வித்தியாசமாக செய்வார்.
ஒவ்வொரு ரசிகரும் எப்படி ஆசைப்படுவாரோ அதை யோசித்து, கேட்டு கேட்டு பண்ண வைத்தார் கார்த்திக். யூனிட்டே எனது ரசிகராக இருந்ததால் ரசித்து எடுத்துள்ளார்கள்.
ஷங்கர் எப்படி பிரம்மாண்டமோ, அதேபோல கார்த்திக் ஸ்டோரி கில்லிங் தான். எதுவுமே எக்ஸ்ட்ரா இருக்கக்கூடாது என்று பார்த்து பார்த்து எடுத்துள்ளார்.


சிறிய வயதில் இருந்தே அனிருத்தை பார்க்கிறேன். அப்போவே நினைத்தேன் இவருக்குள் ஏதோ இருக்கு. பெரிய ஆளா வருவார் என்று நினைத்தேன். அனிருத் தான் அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் என்று தனுஷ் சொன்னாரு. பொங்கலுக்கு நல்ல பொழுதுபோக்கு படமாக பேட்ட படத்தை பார்க்க போறீங்க.
பிறந்தநாள் வரப்போகுது. பிறந்நாளுக்கு இங்கே இருக்க மாட்டேன். தவறாக நினைக்க வேண்டாம். என்ன நடிக்க வைத்த கார்த்திக், சண்டை போட வைத்த பீட்டர் ஹெய்ன் உள்ளிட்ட படக்கழு அனைவருக்கும் நன்றி என்றார்.

485 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன