வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் மக்களை பாமக ஏமாற்றும் – கட்சியில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித் கேள்வி

*பாமக துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நடிகர் ரஞ்சித்!*

*பாமக எதிர்த்து அரசியல் செய்த அதிமுகவுடன் இணைத்து கொண்டதில் வேதனை அடைகிறேன்*

*மதுக்கடைக்கு எதிராக போராடியர்கள் எப்படி மதுக்கடை நடத்துபவர்களிடம் கூட்டணி வைத்துள்ளனர்.*

*மக்களுக்கு செயலாற்றவே அரசியலுக்கு வந்தேன்.*

*அரசியல் நாடகம் நடத்தும் போலிகளை கண்டறிய வேண்டும்*

*மாற்றம், முன்னேற்றம் என்பதெல்லாம் ஏமாற்றம் ஆகிவிட்டது.*

*கூட்டணி குறித்து எந்த தொண்டர்களுடன் ஆலோசிக்கப்பட்டது ?.*

*தொண்டர்களை சந்தித்து கருத்து கேட்ட பின்னரே கூட்டணி என்று கூறியதை கேட்டதும் சிரிப்புதான் வந்தது.*

*நான்கு பேருக்கு கூஜா தூக்கி கொண்டு என்னால் இருக்க முடியாது.*

*யாரை எதிர்த்து போராடினோமோ அவர்களுடன் ஒன்று சேர்ந்து விருந்து சாப்பிடுவது வேதனையளிக்கிறது.*

*இளைஞர்கள், பொதுமக்களை நொடிப்பொழுதில் ஏமாற்றிவிட்டனர்.*

*உள்ளாட்சித் தேர்தல் வரை அதிமுகவுடன் இணைந்திருப்பர். பின்னர் விலகிவிடுவர்.*

*இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் மக்களை பாமக ஏமாற்றும்?-நடிகர் ரஞ்சித் கேள்வி.

ஏற்கனவே ராமதாஸ் கூட்டணி முடிவை எதிர்த்து மாநில நிர்வாகியாக இருந்த ராஜேஸ்வரி பதவியை தூக்கி எறிந்து விட்டு வெளியேறி இப்போது கமல் கட்சியில் இணைந்து விட்டார்.

ஏற்கனவே பாமகவை நெட்டிசன்களும், பொது மக்களும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

1,110 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன