வியாழக்கிழமை, மே 16
Shadow

விபச்சாரத்தில் தள்ளும் போலீஸ் அதிகாரியான அம்மா – மகளின் பகீர் புகாரால் அதிர்ந்த காவல்துறை

விபச்சாரத்தில் தள்ளும் போலீஸ் அதிகாரியான அம்மா – மகளின் பகீர் புகாரால் அதிர்ந்த காவல்துறை

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த இன்ஸ்பெக்டர் மகள் கேண்டி பரபரப்பான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்.

அப்போது, அவர் ,

என்னுடைய தாய் காவல் ஆய்வாளராக உள்ளார் . தன்னுடைய தாயும் தந்தையும் தன்னை வற்புறுத்தி ஒரு வருட காலமாக துபாய் பார் ல் ஆட வைத்து பணம் சம்பாதித்து வந்தனர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால் அங்கிருந்து வெளியேறி என்னுடைய அண்ணன் வீட்டில் தங்கி இருந்தேன் .அப்போது கடந்து 23.04.2019 தேதி அன்று எனது தாயும் தந்தையும் அடியாட்களுடன் வந்து அடித்து கொடுமை படுத்தி இழுத்து சென்றனர்.

இதை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்து பின்னர் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

அதுமட்டுமல்லாமல் என்னுடைய அண்ணனின் கடையை தவறான முறையில் அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.மேலும் என்னுடைய அண்ணியிடம் 10 லட்சம் பணமும் நகையும் வரதட்சணையாக வாங்கி தருமாறு கொலை மிரட்டல் விடுத்தனர். இவை அனைத்தும் தன்னுடைய தாய் காவல் ஆய்வாளர் என்பதால் அவரை பற்றி எந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் அதனை அவர்கள் பெரிதாக எடுத்து கொள்ளமால் அவர் மீது நடவடிக்கையும் எடுக்க மறுக்கின்றனர் இதனால் தன்னுடைய உயிர்க்கு ஆபத்து இருப்பதால் அவர்களிடம் இருந்து தன்னையும் தனது அண்ணனின் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பெண் இன்ஸ்பெக்டர் மீது இப்படி அவரது மகளே அடுகடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருப்பதன் மூலம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது…

433 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன