திட்ட அனுமதி வழங்க லஞ்சம் கேட்கும் அரசியல்வாதிகளை பார்த்திருக்கிறோம். அதிலும் லஞ்சமாக ரொக்கம், நகைகள், பொருட்களை கேட்பார்கள்.
ஆனால் இந்த அரசியல்வாதிகள் அமைச்சர்களாகவும் இருக்கிறார்களாம்… லஞ்சமாக பணமோ, நகையே, பொருளோ கேட்கவில்லை.
அதற்கு பதிலாக 2 பாலிவுட் நடிகைகளை கேட்டிருக்கிறார்களாம்.
சும்மாவே பரபரப்பை ஏற்படுத்தும் சுப்பிரமணிய சுவாமி காதில் இந்த விஷயம் போனால் சும்மா இருப்பாரா…
தனக்கான பக்கத்தில் இப்படி திட்ட அனுமதிக்கு நடிகைகளை லஞ்சமாக கேட்கும் அமைச்சர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
என்ன நடவடிக்கை என்பதை பொறுத்து லஞ்சமாக நடிகைகளை கேட்ட அமைச்சர்கள் பெயரை சுப்பிரமணிய சுவாமி வெளியிடுவாராம்.
சமீபத்திய தேர்தலில் மீண்டும் பாஜக முழு மெஜாரட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளது. நாளை 30 தேதி தான் மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.
இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் இப்படி பகிரங்கமாக எழுதி இருப்பது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுப்பிரமணிய சுவாமி வெளியிட்ட பதிவில் எங்கும் மாநில அமைச்சரா, மத்திய அமைச்சர்களா என்று குறிப்பிடவில்லை.