வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

அழைப்பு இல்லாததால் திமுக புறக்கணிப்பு… அழைப்பு வந்தும் கமல் புறக்கணிப்பு… மோடி பதவியேற்பு பரபரப்பு

 

மோடி பதவி ஏற்பு விழா- அழைப்பு இல்லாததால் தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிப்பு

விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதே போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் இவ்விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. எம்.பி.க்கள் 20 பேருக்கும் அழைப்பிதழ் வந்துள்ளது.

ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இதுவரை முறையான அழைப்பு வரவில்லை. எனவே மோடி பதவி ஏற்பு விழாவை தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிக்க உள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 20 பேர் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 3 பேர் என தி.மு.க. வுக்கு மொத்தம் 23 எம்.பி.க்கள் உள்ளனர்.

இதன் மூலம் தேசிய அளவில் பா.ஜ.க., காங்கிரசை அடுத்து நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க. உருவெடுத்தது.

அப்படி இருந்தும் மு.க. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பாஜக அழைப்பு விடுக்காதது தி.மு.க. தலைவர்களுக்கு கடும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தால் மட்டும் தான் நாங்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்போம் என தி.மு.க. செய்தி தொடர்பாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருக்கிறார்.

இன்று இரவு 7 மணிக்கு பதவி ஏற்க உள்ள நிலையில் இதுவரை முறையாக அழைப்பு வராததால் மோடி பிரதமராக நடைபெறும் பதவியேற்பு விழாவில் திமுக கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்வது உறுதியாகிறது.

மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும், கணிசமாக ஓட்டு வாங்கியிருக்கிறார் கமல்ஹாசன்.

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வரும்படி கமல்லுக்கு அழைப்பு அனுப்பி வைத்தனர்.
அழைப்பு வந்தும் விழாவில் கலந்து கொள்ளாமல் கமல் புறக்கணிக்கிறார்.

 

327 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன