சசிகுமார் வில்லனாக மாறிய சரத்குமார்… மும்பைக்கு போன ரகசியம்..!
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் மூன்றாவது படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்து வருகிறார். ‘சலீம்’ படத்தை இயக்கிய என்.வி.நிர்மல்குமார் இயக்கும் இப்படத்தில் சரத்குமார் வில்லனாக நடிப்பதாக் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது. சுமார் ஒரு மாதம் மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் ஷூட்டிங் நடத்தி முடிக்க திட்டம்.
காஞ்சனா படத்தில் சரத் கதாபாத்திரம் எப்படி வரவேற்பை பெற்றதோ அதே போல சசிகுமார் படத்தில் தான் நடிக்கும் கதாப்பாத்திரம் வரவேற்பை பெறும் என்று ரொம்பவே நம்பிக்கையோடு இருக்கின்றார் சரத்.
சசிகுமார் படங்களில் இந்த படம் அவரது திரைப்பயணத்தில் அவரை வேறு கோணத்தில் காட்டும் என்று கூறப்படுகிறது.
எது எப்படியோ ரஜினியின் தர்பார் படமும், சரத்குமார்-சசிகுமார் இணைந்துள்ள படமும் மும்பையில் ஷூட்டிங் நடப்பதால் கேங்ஸ்டார் கதையாக இருக்குமோ எனற பேச்சும் பரவலாக உலா வருகிறது.
சர்த்குமாருடன் இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.