
தில்லுக்கு துட்டு 3ம் பாகம் படத்தை 3டியில் எடுக்க நடிகர் சந்தானம் முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சந்தானம் ஹீரோ ஆன பிறகு முதல் முறையாக தனது படத்தில் யோகிபாபுவை இணைத்து கொண்டார்.
இந்த படத்துக்கு டகால்டி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தின் தயாரிப்பாளரான சௌத்ரியே தில்லுக்கு துட்டு 3ம் பாக படத்தையும் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தில்லுக்கு துட்டு படத்தில் இருந்த மொட்ட ராஜேந்திரன் இந்த பாகத்திலும் இருப்பார் என தெரிகிறது.
சந்தானம் நடிப்பில் உருவான தில்லுக்கு துட்டு படங்களின் வரிசையில் அதன் மூன்றாம் பாகம் 3டியில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
சந்தானம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதன் பின்னர் அவருக்குக் கைகொடுத்த ஒரு சில படங்களில் தில்லுக்கு துட்டு படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
566 Views
