மும்பையில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் உள்விளையாட்டு அரங்கில் 2019-ம் ஆண்டுக்கான இந்திய அழகி போட்டி நடந்தது.
இந்த போட்டியில் நாட்டின் பல மாநிலங்களை சேர்ந்த அழகிகளும் கலந்து கொண்டனர்
இதில் நடுவர்களாக இந்தி பட உலகின் நடன இயக்குனர் ரெமோ டி சூசா, நடிகைகள் ஹூமா குரேஷி, சித்ரங்கதா சிங், ஆடை வடிவமைப்பு கலைஞர் பால்குனி ஷானே பிகாக்கா, இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி சுமன் ராவ் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டின் இந்திய அழகியான சென்னை அழகி அனுகீர்த்தி வாஸ் கிரீடம் சூட்டினார். அப்போது மொத்த அரங்கமும் கரவொலி எழுப்பியது.
சத்தீஷ்காரை சேர்ந்த ஷிவானி ஜாதவ் ‘மிஸ் கிராண்ட்’ இந்தியா பட்டத்தையும், பீகாரின் ஸ்ரேயா சங்கர் ‘மிஸ் இந்தியா யுனைட்டெட் காண்டினன்ட்ஸ்’ பட்டத்தையும் பெற்றனர்.
சுமன்ராவ், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7-ந் தேதி, தாய்லாந்து நாட்டின் பட்டயா நகரில் நடக்க உள்ள ‘மிஸ் வேர்ல்ட்’ உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்கிறார்.