திங்கட்கிழமை, மே 20
Shadow

ஷங்கர் இயக்க விஜய்க்காக பக்கா அரசியல் கதையாக உருவாகிறதா முதல்வன் 2 ..?

 

ஷங்கர் இயக்க விஜய்க்காக பக்கா அரசியல் கதையாக உருவாகிறதா முதல்வன் 2 ..?

தமிழ் சினிமாவில் பார்ட் 2 படமெடுக்கும் கலாச்சாரம் ரொம்பவே அதிகமாகி விட்டது. ரஜினி, கமல்,அஜீத்,விஷால் என பல நடிகர்களின் படங்கள் மீண்டும் பார்ட் 2 எடுத்திருக்கிறார்கள்.

அந்த வரிசையில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்து 1999-ல் திரைக்கு வந்து மெகா ஹிட் ஆன படம் முதல்வன்.

இந்த படத்தின் பார்ட் 2 எடுக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டார். ஆனால் அர்ஜுன் இல்லாமல் வேறு நடிகரை வைத்து எடுக்கவும் முயற்சிகள் நடப்பதாக கூறப்பட்டது.

இதை உறுதி செய்யும் விதமாக இயக்குனர் ஷங்கரும் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “முதல்வன் படத்தின் பார்ட் 2 எடுக்கும் திட்டம் உள்ளது. ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் விரும்பினால் அவர்களை வைத்து முதல்வன் 2-ம் பாகத்தை எடுப்பேன். அவர்கள் இல்லாத பட்சத்தில் விஜய்யை தேர்வு செய்வேன்” என்று கூறியிருந்தார்.

முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வராக வந்து அர்ஜுன் செய்யும் நல்ல காரியங்களை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். பின்னர் நடக்கும் தேர்தலில் அவர் பெரிய வெற்றி பெறுவது போல கதை இருக்கும்.

இப்போது ரஜினியும், கமலும் நிஜத்திலேயே அரசியல் பணிகளிலும் வேறு பட வேலைகளிலும் பிசியாக இருக்கிறார்கள்.

அதனால் ஷங்கரின் கவனம் விஜய் பக்கம் திரும்பி உள்ளது.

அவரிடம் முதல்வன் 2 பற்றிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விஜய் இப்போது அட்லியின் பிகில் முடித்து, பின்னர் லோகேஷ் இயக்கும் படத்தை முடித்து முதல்வன் 2 படத்துக்கு நடிக்க வருவார் என கூறப்படுகிறது.

இப்போது உள்ள அரசியலை வைத்து விஜய்க்கு ஏற்றார் போல கதையை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார் ஷங்கர்.

513 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன