ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7
Shadow

நயன்தாராவை தொடர்ந்து சீதை வேஷத்தில் தீபிகா படுகோன்..!

 

 

நயன்தாராவை தொடர்ந்து சீதை வேஷத்தில் தீபிகா படுகோன்..!

ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண படங்கள் 1960களுக்கு முன்புதான் வரிசை கட்டி வந்தன. பின்னர் அது குறைந்தது. பாகுபலி பட வெற்றிக்கு பிறகு சரித்திர மற்றும் புராணப் படங்கள் எடுப்பதில் ஆர்வம் உருவாகி இருக்கிறது. பெரிய செலவில் இந்த படங்கள் உருவாகின்றன.

சமீபத்தில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் போரின் கதையை 3டியில் எடுத்து ரிலீஸ் செய்தார்கள்.

அந்த வகையில் 3டி தொழில்நுட்பத்தில் ‘ராமாயணம்’ படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிதிஷ் திவாரி – ரவி, உதய்வார் இணைந்து இயக்குகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தில் மூன்று மொழியை சேர்ந்த பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

ராமர் மற்றும் சீதை வேடங்களில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், நடிகை தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாகவும். ஹிருத்திக் ஒப்புக்கொள்ளாவிட்டால் ராமர் வேடத்துக்கு பிரபாஸ் நடிக்கலாம்

ஏற்கனவே தெலுங்கில் உருவான ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் சீதை வேடத்தில்  நயன்தாரா நடித்திருந்தார். அவரைத் தொடர்ந்து இப்போது தீபிகா சீதையாக நடிக்க இருக்கிறார்.

409 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன